search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக மழை முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு
    X

    கோப்பு படம்.

    தேனி மாவட்டத்தில் 2-வது நாளாக மழை முல்லைபெரியாறு அணையில் கூடுதல் தண்ணீர் திறப்பு

    • இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
    • கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர்.

    கூடலூர்:

    மதுரை குடிநீர் திட்டத்தி ற்காக லோயர்கேம்ப் அருகே முல்லைபெரியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்றுமுன்தினம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் முற்றிலும் நிறுத்தப்பட்டது. பணிக்கு இடையூறு ஏற்படாமல் இருக்க மணல் மூட்டைகள் அடுக்கி வைக்க ப்பட்டன.

    நேற்று காலை 6 மணி யிலிருந்து 150 கனஅடி நீர்மட்டம் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் இரைச்சல் பாலம் வழியாக வெளியேற்றப்பட்டதால் மின்உற்பத்தி நடை பெறவில்லை. இந்நிலையில் இன்று காலை முதல் அணையிலிருந்து 300 கனஅடிவீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதனால் பெரியாறு மின்உற்பத்தி நிலையத்தில் 22 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

    அணையின் நீர்மட்டம் 118.10 அடியாக உள்ளது. வரத்து 266 கனஅடி, இருப்பு 2285 மி.கனஅடி.

    தேனி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையை தொடர்ந்து மானாவாரி பயிர்கள் சாகுபடி செய்ய நிலத்தை தயார்படுத்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட தொடங்கியுள்ளனர். வழக்கமாக இந்த மழை ஆடி மாதத்தில் பெய்யும். தற்போது தாமதமாக பெய்துள்ள நிலையிலும் விவசாய பணிகள் விறுவிறுப்படைந்துள்ளன.

    இதேபோல் போடி, சோத்துப்பாறை, பெரிய குளம், வீரபாண்டி, தேவ தானப்பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம் உள்ளிட்ட பகுதிகளிலும் சுமார் 1 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் அடியோடு குறைந்தது. கும்பக்கரை அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் குளித்து வருகின்றனர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 46.95 அடியாக உள்ளது. நேற்று 157 கனஅடிநீர் வந்த நிலையில் இன்று 53 கனஅடியாக குறைந்துள்ளது. அணையிலி ருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1615 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாகவும், சோத்துப்பாறை அணை யின்நீர்மட்டம் 68.22 அடியாகவும் உள்ளது.

    கூடலூர் 1.2, சண்முகாநதிஅணை 5.6, உத்தமபாளையம் 1, போடி 1.6, வைகை அணை 3.8, சோத்துப்பாறை 4, பெரிய குளம் 1.4, வீரபாண்டி 3.4, அரண்மனைப்புதூர் 6.3, ஆண்டிப்பட்டி 5.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×