search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்
    X

    ஓணம் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட மாணவிகள்.

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் ஓணம் கொண்டாட்டம்

    • விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி உற்சாகமாக கொண்டாடினார்கள்.
    • கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    தேனி:

    தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது. தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் செயலாளர்கள் ராஜ்குமார், மகேஸ்வரன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி இணைச்செயலாளர் நவீன்ராம் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மதளை சுந்தரம் ஓணம் பண்டிகை வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் மாணவிகள் கல்லூரி வளாகத்தில் பல வண்ணப்பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, கேரளாவின் பாரம்பரிய உடைகளை உடுத்தி, பாயாசம் மற்றும் இனிப்புகளை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகமாக கொண்டாடினார்கள். மேலும் ஓணம் பண்டிகை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    விழாவில் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறையின் தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச்செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரி துணை முதல்வர்கள் மாதவன், டாக்டர் சத்யா, வேலைவாய்ப்பு அலுவலர் டாக்டர் கார்த்திகேயன், சயின்ஸ் அண்டு ஹிமானீட்டீஸ் துறையின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சித்ரா மற்றும் கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தினர்.

    Next Story
    ×