search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போடியில் ஒரே ஒரு கடையுடன்  செயல்படும் உழவர் சந்தை
    X

    உழவர் சந்தையில் ஒரே ஒரு கடை இயங்கி வரும் நிலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ள காட்சி.

    போடியில் ஒரே ஒரு கடையுடன் செயல்படும் உழவர் சந்தை

    • ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப் பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார்.
    • அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரெயில்நிலையம் செல்லும் சாலையில் 100 அடி ரோட்டில் உழவர் சந்தை உள்ளது. சந்தை ெதாடங்க ப்பட்டபோது அனைத்து கடைகளும் இயங்கிவந்த நிலையில் பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.

    தமிழக அரசு புதிதாக பொறுப்பேற்றபின் நலிவடைந்த நிலையில் உள்ள உழவர்சந்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போதுவரை ஒரே ஒரு கடையுடன் உழவர் சந்தை இயங்கி வருகிறது. உரிய பராமரிப்பு, அடி ப்படை வசதிகள் எதுவும் இல்லாததாலும், போக்கு வரத்து வசதிகள் இல்லாத தாலும் விவசாயிகள் இங்கு கடை வைப்பதில் ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

    ஒரே ஒரு கடை உள்ள நிலையில் அதற்காக வேளாண்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவரும் பொருப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஒரு உதவியாளரும் உள்ளார். ஆளே இல்லாத கடையில் யாருக்கு டீ ஆத்துகிறீர்கள் என்ற காமெடியை போல மக்கள் வராத இந்த உழவர்சந்தைக்கு தினமும் அலுவலகம் திறக்கப்பட்டு காய்கறிகள் விலைப்பட்டியில் வைக்கப்படுகிறது.

    விவசாயிகள் யாரும் ஆர்வம் காட்டாததால் இங்கு கடை வைத்திருக்கும் ஒருவரும் சில மணிநேரம் இங்கு அமர்ந்துவிட்டு பின்னர் தெருத்தெருவாக காய்கறிகளை விற்பனைக்கு எடுத்துச்சென்றுவிடுகிறார். குறைந்த விலையில் மக்களுக்கு காய்கறிகள் கிடைக்கவேண்டும். விவசாயிகள் எந்தவித இடைத்தரகரும் இன்றி தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்ய வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் உழவர்சந்தை திறக்கப்ப ட்டது.

    தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறப்பாக செயல்பட்டு வரும் உழவர் சந்தை இங்கு மக்களுக்கு பயன்இல்லாத நிலையில் இருப்பதால் இங்கு அனை த்து கடைகளை யும் திறந்து விற்பனை நடைபெற அதி காரிகள் நட வடிக்கை என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×