என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "deer hunters"
- வேட்டையாடும் கும்பல் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி களை விற்பனை செய்து வருகின்றனர்.
- புலிகள் சரணாலயத்தையொட்டி உள்ள வல்லக்கடவு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மிளாமான் கிடந்தது.
கூடலூர்:
கேரள மாநிலம் இடுக்கி மற்றும் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சுமார் 925 கி.மீ. பரப்பளவில் பெரி யாறு புலிகள் காப்பகம் உள்ளது. இந்த சரணால யத்தில் புலி, சிறுத்தை, யானை, மான், கரடி, காட்டெருமை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன.
வேட்டையாடும் கும்பல் அடிக்கடி வன விலங்குகளை வேட்டையாடி இறைச்சி களை விற்பனை செய்து வருகின்றனர். வனத்துறை யினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வேட்டை யாடுபவர்களை கைது செய்தபோதிலும் வன விலங்குள் வேட்டை தொடர்ந்து வருகிறது.
இந்த நிலையில் புலிகள் சரணாலயத்தையொட்டி உள்ள வல்லக்கடவு பகுதியில் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மிளாமான் கிட ந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வனத்து றையினர் மிளாமானின் உடலை கைப்பற்றி கால்ந டை மருத்துவ குழு பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர். வேட்டை கும்பலால் சுடப்பட்ட மிளாமான் மிரண்டு ஓடியதில் குடி யிருப்பு பகுதியில் இறந்தி ருக்கலாம். இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகையில், கடந்த சில மாதங்களாக வன விலங்குகள் வேட்டை அதிகரித்து வருகிறது. குறிப்பாக வல்லக்கடவு பகுதியில் வேட்டையாடும் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எனவே வனத்துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்