search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Amethyst flowers"

    • தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மழை இன்றி வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு கடுமையான வெப்பநிலை நிலவுவதால் போதிய தண்ணீர் வசதி இன்றி செடிகள் கருகி வருகின்றன.
    • வருகின்ற 29ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்கள் விலை தற்போது அதிகரித்து வருகிறது.

    போடி:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் மஞ்சள் செவ்வந்தி மற்றும் மாட்டுச் செவ்வந்தி என்று அழைக்கக்கூடிய சிவப்பு செவ்வந்தி பூக்கள் பயிரிடப்பட்டு வருகிறது. தற்போது போடிநாயக்கனூர் சுற்றுப்பகுதியில் மழை இன்றி வறண்ட சூழ்நிலை ஏற்பட்டு கடுமையான வெப்பநிலை நிலவுவதால் போதிய தண்ணீர் வசதி இன்றி செடிகள் கருகி வருகின்றன.

    மேலும் செடியில் பூத்த மஞ்சள் செவ்வந்தி மற்றும் சிவப்பு செவ்வந்திப் பூக்கள் கடுமையான வெயில் காரணமாக வெப்பத்துடன் காற்று பலமாக வீசுவதால் செடியிலேயே வாடி கருகி உதிர்ந்து விடுகின்றன. இதனால் விவசாயிகள் பெரிதும் மன வேதனை அடைந்துள்ளனர்.

    மேலும் வருகின்ற 29ஆம் தேதி கேரளாவில் ஓணம் பண்டிகை காரணமாக தமிழகத்தில் பூக்கள் விலை தற்போது அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு கிலோ ரூ.60 முதல் ரூ.70 வரை விற்ற மஞ்சள் செவ்வந்தி மற்றும் சிவப்பு செவ்வந்தி பூக்கள் தற்போது ரூ.40 முதல் ரூ.50 வரை விலை அதிகரித்து கிலோ ரூ.100 முதல் ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் ஓணம் பண்டிகை வரை விலை உயரலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    ×