தேனி அருகே பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயம்

தேனி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவிகள் உள்பட 3 பேர் மாயமாகினர்.போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தேனி அருகே உப்பு க்கோட்டை வடக்குத் தெருவைச் சேர்ந்த பால்கரு ப்பையா மகள் பால்பாக்கி யம் (வயது 15). இவர் அங்குள்ள பச்சையப்பா பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று கடைக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி அதன் பிறகு வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது தாய் முத்து வீரி வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

தேனி மாவட்டம் பாலக்கோம்பை கென்னடி நகரைச் சேர்ந்த கருப்பையா மகள் கீர்த்தனா (19). இவர் வீரபாண்டியில் உள்ள அரசு கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயமானார். இது குறித்து அவரது தாய் ஜெயலெட்சுமி கொடுத்த புகாரின் பேரில் ராஜதானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

தேனி மாவட்டம் கூடலூர் பட்டாளம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் சந்திரசேகர் (19). இவர் டிரம்ஸ் செட் அடிக்கும் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று டிரம்ஸ் செட் அடிக்கும் பணிக்காக வெளியூர் செல்வதாக வீட்டில் கூறிச் சென்றார். ஆனால் அதன் பிறகு மாயமானார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் பேரில் கூடலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com