என் மலர்
நீங்கள் தேடியது "செயல் அலுவலர் பணிநீக்கம்"
- கடந்த 2021-ம் ஆண்டுவரை சேலம் மாவட்டம் தாரமங்க லம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வந்தார்.
- தெருவிளக்குகள் பொருத்து தல், அத்தியவாசிய பொரு ட்கள் வாங்குதல் உள்ளிட்ட வற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது 18 புகார்கள் இயக்குனரக த்திற்கு அனுப்பப்பட்டது.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் தேவா ரம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வருபவர் குலோத்துங்கன். இவர் பழனிசெட்டிபட்டி பேரூராட்சியையும் கூடுத லாக கவனித்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டுவரை சேலம் மாவட்டம் தாரமங்க லம் பேரூராட்சி செயல்அலு வலராக பணிபுரிந்து வந்தார்.
அப்போது பேரூ ராட்சியில் தெருவிளக்குகள் பொருத்து தல், அத்தியவாசிய பொரு ட்கள் வாங்குதல் உள்ளிட்ட வற்றில் முறைகேட்டில் ஈடுபட்டதாக இவர் மீது 18 புகார்கள் இயக்குனரக த்திற்கு அனுப்பப்பட்டது.
இந்த புகார்கள் குறித்து விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு தேனி மாவட்டத்தி ற்கு மாற்றம் செய்யப்பட்டார். இவர் மீதான புகார்களில் முறைகேடுகள் நடந்தது உறுதியானது.
இதனை யடுத்து பேரூராட்சிகள் இயக்குனர் கிரண்குராலா, செயல்அலுவலர் குலோத்து ங்கனை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார். உத்தம பாளையம் பேரூராட்சி செயல்அலுவலர் சின்னச்சாமி பாண்டியன் தேவாரம் பேரூராட்சியை கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.






