என் மலர்
நீங்கள் தேடியது "இருவேறு விபத்துகள்"
- தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது ஒருவர் பைக்கில் இருந்து தவறிவிழுந்தும் மற்றும் வேறொரு பைக் மோதி ஒருவரும் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகில் உள்ள பூதிப்புரம் சுப்பிரமணி யன்கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகன்(36). இவர் நகைபட்டறையில் வேலை பார்த்து வந்தார். தினமும் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு செல்வது வழக்கம். அதன்படி தேனி-பூதிப்புரம் ரோட்டில் இந்தியன் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது பைக்கில் இருந்து தவறிவிழுந்து படுகாயமடைந்தார்.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.
ஆண்டிபட்டி அருகில் உள்ள டி.சுப்புலாபுரம் காசிநகரை சேர்ந்தவர் வேல்முருகன்(48). விவசாயி. இவர் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்று விட்டு மதுரை மெயின்ரோ ட்டில் வந்து கொண்டிரு ந்தார்.
அப்போது மற்றொரு பைக் இவர் மீது மோதியதில் வேல்முருகன் படுகாயமடை ந்தார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






