என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையம் அருகே வீட்டில் கஞ்சா, டெட்டனேட்டர் பதுக்கியவர் கைது
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையம் அருகே வீட்டில் கஞ்சா, டெட்டனேட்டர் பதுக்கியவர் கைது

    • ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • அவரை கைது செய்து கஞ்சா மற்றும் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சண்முகாநதி அணை செல்லும் பாதையில் கள்ளச்சாராயம், கஞ்சா விற்பனை நடப்பதாக மது விலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ராயப்பன்பட்டி, அணைப்பட்டி பகுதிகளில் அவர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது சண்முகா நதி அணை செல்லும் சாலையில் உள்ள நேரு என்பவரது வீட்டை சோதனையிட்டனர். அதில் அவர் 300 கிராம் கஞ்சா மற்றும் 5 டெட்டனேட்டர்கள் பதுக்கியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து நேருவை கைது செய்து கஞ்சா மற்றும் டெட்டனேட்டர்களை பறிமுதல் செய்து ராயப்பன்பட்டி போலீசில் ஒப்படைத்தனர்.

    அவரிடம் நடத்திய விசாரணையின் பேரில் அவரது மகன் கவுதமுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரை பிடித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×