என் மலர்
நீங்கள் தேடியது "should allow s to die"
- சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் இயக்கத்தின் மாநில தலைவர் தென்னை விவசா யிகளின் கஷ்டங்களை யும் தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
- தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது.
கம்பம்:
தென்னை விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் கம்பத்தில் நடைபெற்றது. விவசாயி ஹரிஹரன் தலைமை தாங்கினார். தேனி மாவட்டத் தலைவர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். விவசாயிகள் நாராயணசாமி, வீரமணி, ஜெயக்குமார், பால்ராஜ், ராமராஜ், தர்மர் தென்னை விவசாயிகளின் நிலை குறித்து பேசினர்.
சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நாம் இயக்கத்தின் மாநில தலைவர் பிரபு ராஜா, தென்னை விவசா யிகளின் கஷ்டங்களை யும் தென்னை விவசாயத்தை காக்க அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பேசினார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தென்னை விவசா யிகளின் வாழ்வா தாரத்தை மேம்படுத்த ரேசன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும், கொப்பரைக்கு மத்திய அரசின் குறைந்தபட்ச ஆதார விலையான ஒரு கிலோ ரூ.105.90-ல் இருந்து ரூ.130-க்கு கொள்முதல் செய்ய வேண்டும்,
தென்னை விவசா யிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்கும் பொருட்டும், மரமேறும் தொழிலா ளர்களின் பொருளா தாரத்தை உயர்த்தும் பொருட்டும், கிராமத்தின் பொருளா தாரத்தை மேம்படுத்தும் பொருட்டும் தமிழக அரசு கள் இறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. நிகழ்ச்சி முடிவில் பெரியாறுவைகை பாச னவிவசாய சங்கதலைவர் பொன் காட்சிக்கண்ணன் நன்றி கூறினார்.






