என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெயமங்கலத்தில் பஸ்சுக்காக காத்திருக்கும் பொதுமக்கள்.
ஜெயமங்கலம் வழித்தடத்தில் போதிய பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் தவிப்பு
- பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்ம ங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி வழியாக தேவ தானப்பட்டி மெயி ன்ரோ ட்டை அடைவதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படு வதில்லை.
- மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்ப டைந்து வருகின்ற னர்.
தேவதானப்பட்டி:
தேனி மாவட்டம் வடுக பட்டி, ஜெயமங்கலம், மேல்மங்கலம், பொம்மி நாயக்கன்பட்டி, சில்வா ர்பட்டி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினந்தோறும் மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களுக்கு சொந்த பணி மற்றும் பல்வேறு காரணங்களுக்காக சென்று வருகின்றனர். மேலும் பள்ளி, கல்லூரி மாண வர்களும் செல்கின்றனர். 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வெளியூருக்கு சென்றுவரும் நிலையில் பெரியகுளத்தில் இருந்து ஆண்டிபட்டி வழித்தடத்திற்கு அதிக பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனால் பெரியகுளத்தில் இருந்து வடுகபட்டி, மேல்ம ங்கலம், ஜெயமங்கலம், சில்வார்பட்டி வழியாக தேவ தானப்பட்டி மெயி ன்ரோ ட்டை அடைவதற்கு போதிய பஸ்கள் இயக்கப்படு வதில்லை. இதனால் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு செல்லும் பொதுமக்கள், முதியவர்கள் ஆகியோர் மிகுந்த பாதிப்ப டைந்து வருகின்ற னர். குறிப்பாக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக செல்பவர்கள் போக்குவரத்து வசதி பற்றாக்குறையால் சிரமமடைந்து வருகின்றனர்.
எனவே தேவதானப்பட்டி பஸ் நிலையத்தில் இருந்து ஜெயமங்கலம் வழியாக க.விலக்கிற்கு பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மற்ற வழித்தடங்களை போலவே இந்த வழித்த டத்திலும் போதிய பஸ்கள் இயக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர்.






