மாற்றுத்திறனாளிகள் உதவி தொகைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

மாற்றுத்திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவி த்தொகை மாற்றுத்திறனாளி யின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

தேனி:

தமிழ்நாடு மாற்றுத்திற னாளிகள் நல வாரியம் சமுக பாதுகாப்புத் திட்ட த்தின் கீழ், மாற்றுத்திறனாளி களுக்கான தேசிய அடை யாள அட்டை பெற்று 10 வயதிற்கு மேற்பட்ட மாற்று த்திறனாளிகள் நல வாரி யத்தில் பதிவு செய்திருப்பின் உதவிகள் பெற முடியும்.

இத்திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் இயற்கை மரணம், ஈமச்சடங்கிற்கான நிவாரண உதவித்தொகை, விபத்து மரணத்திற்கான உதவி த்தொகை மாற்றுத்திறனாளி யின் வாரிசுதாரருக்கு வழங்கப்படுகிறது.

நல வாரியத்தின் மூலம் மாற்றுத்தறனாளியின் மகன்-ம களுக்கு கல்வி உதவித்தொகை பெற 10-ம் வகுப்பு அதற்கு மேல் படிப்பவர்களாக இருத்தல் வேண்டும், மாற்றுத்திற னாளியின் மகன்-மகளுக்கு நலவாரியத்தின் மூலம் திருமண உதவித்தெகையும், மாற்றுத்திறனாளிகள் கண் கண்ணாடி வாங்கி பயன் பெறுவதற்கும், மாற்றுத்திறனாளிக்கு விபத்து ஏற்பட்டால் நல வாரியத்தின் மூலம் விபத்து நிவாரணம் மற்றும் பெண் மாற்றத்தினாளிக்கு நல வாரியத்தின் மூலம் பிரச வம், கருச்சிதைவு ஆகிய வற்றிற்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெறுவதற்கு பிற அரசுத் துறைகளிடமிருந்து நல வாரிய திட்டத்தில் உதவித் தொகை பெற்றிரு க்கக்கூடாது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர், மாவட்ட மாற்றுத்திற னாளிகள் நல அலுவலக த்தில் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெ க்டர் ஷஜீவனா தெரி வித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com