search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை
    X

    கோப்பு படம்.

    யானைகள் நடமாட்டத்தால் சுருளி அருவியில் 4-வது நாளாக குளிக்க தடை

    • அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யானைகள் கூட்டமாக அங்கு முகாமிட்டுள்ளன.
    • இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்து உள்ளனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் சுருளி அருவிக்கு குளிக்க வருகின்றனர். மேலும் கேரளா செல்லும் பக்தர்க ளும் இங்கு வருகின்றனர். அமாவாசை உள்ளிட்ட முக்கிய நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    தற்போது மழைஇன்றி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவி வருகிறது. அருவி பகுதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் யானைகள் கூட்டமாக அங்கு முகாமிட்டுள்ளன. இதனால் இன்று 4-வது நாளாக அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை யினர் தடைவிதித்து உள்ளனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 121.40 அடியாக உள்ளது. 290 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 48.61 அடியாக உள்ளது. மூலவைகையாறு வறண்டு காணப்படுவதால் அணைக்கு நீர்வரத்து இல்லை. மதுரை மாநகர குடிநீருக்காக மட்டும் 69 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 47.95 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 73.30 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 2.9, தேக்கடி 0.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×