search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Rights Project"

    • விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற்றது.
    • விண்ணப்பங்கள் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    குடிமங்கலம் : 

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணிகளை கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்ததாவது:-

    தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, திருப்பூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பொருட்டு விண்ணப்ப பதிவு முகாம்கள் 2 கட்டமாக நடைபெற்றது. விண்ணப்ப பதிவு முகாம்களில் பொதுமக்கள் வழங்கிய கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்திற்கான விண்ணப்பங்கள் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் பல்லடம் வட்டம் கள்ளக்கிணர் பகுதி, குடிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பூளவாடி ஊராட்சி வார்டு எண்-1 பகுதியில் மற்றும் உடுமலை ஊராட்சி ஒன்றியம், கணக்கம்பாளையம் ஊராட்சி ரங்கநாதன்நகர், மைவாடி ஊராட்சி, ராஜாவூர் கள்ளியங்காடு ஆகிய பகுதிகளில் கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட விண்ணப்பம் பதிவு செய்தது குறித்து சரி பார்க்கும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது என்றார்.

    இந்த ஆய்வின் போது உடுமலை வருவாய் கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், பல்லடம் தாசில்தார் ஜெய்சிங் சிவக்குமார், உடுமலை தாசில்தார் சுந்தரம் மற்றும் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

    டோக்கன் விநியோகம்

    இதற்காக கடந்த 20-ந் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 696 கார்டுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்திற் கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    4 லட்சம் விண்ணப்பங்கள்

    இதையடுத்து பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலர்களுக்கு வழங்கப் பட்ட மொபைலில் உள்ள

    செயலியில் பதிவேற்றப்பட் டது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமின் கடைசி நாளான நேற்று மாலை வரை சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 657 பேரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் பெறப்பட்டு பதியப்பட்டுள்ளன.

    2-ம் கட்ட பதிவு

    2-ம் கட்ட விண்ணப்

    பதிவிற்காக ஏற்கனவே விண்ணப்பம் மற்றும்

    டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யும் முகாம் இன்று காலை தொடங்கியது. 800-க்கும் மேற்பட்ட முகாம்களில் இந்த விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

    ஆர்வத்துடன்

    நீண்ட வரிசையில் பெண்கள் ஆர்வத்துடன் காத்து நின்று விண்ணப்பங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதற்குள் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.
    • ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் 2 கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டு முதற்கட்ட முகாம் பெரிய குளம், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் 24.07.2023 முதல் 04.08.2023 வரை நடைபெற்றது. நாளை முதல் 2ம் கட்ட முகாம் ஆண்டிபட்டி, தேனி, போடிநாயக்கனூர், வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 16-ந் தேதி வரை நடைபெறவுள்ளது.

    கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் விண்ணப்பங்களை ரேசன் கடைப் பணியாளர்கள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் விண்ணப்பம் மற்றும் டோக்கன் ஆகியவற்றினை வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கி வருகின்றனர்.

    விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்டு முழுமை யாக பூர்த்தி செய்து நேரடியாக விண்ணப்ப ப்பதிவு முகாம் நடைபெறும் இடத்திற்கு, டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்தில் விண்ணப்ப ங்களை எடுத்து வர வேண்டும். விண்ணப்பம் பதிவு செய்யும்போது சரிபார்ப்புக்காக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண அட்டை, வங்கி பாஸ் புத்தகம் ஆகியவற்றை எடுத்து வர வேண்டும்.

    விண்ணப்பத்துடன் எவ்வித ஆவணங்களையும் நகல் எடுத்து இணைக்கத் தேவையில்லை. விண்ணப்ப பதிவு ஞாயிற்றுக்கிழமை உட்பட அனைத்து முகாம் நாட்களிலும், காலை 9.30 மணி முதல் 1 மணி வரையும், பிற்பகல் 2 மணி முதல் 5:30 மணி வரையும் நடைபெறும்.

    ஆண்டிபட்டி வருவாய் வட்டத்தில் ஆண்டிபட்டி பிட் 1, 2 பாலகோம்பை உள்பட கிராமங்களில் நடைபெறுகிறது. போடி வருவாய் வட்டத்தில் அகமலை, பி.அம்மாபட்டி உள்பட 15 கிராமங்களில் நடைபெற உள்ளது. தேனி வருவாய் கோட்டத்தில்அல்லிநகரம், கோவிந்தநகரம் உள்பட 12 கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது.
    • இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    சேலம் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான விண்ணப்ப பதிவு முதற்கட்ட முகாம் நேற்று தொடங்கியது. இதற்காக கடந்த 20 ஆம் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. அதில் விண்ணப்ப தாரர்கள் எத்தனை மணிக்கு முகாமிற்கு வர வேண்டும் தேவையான ஆவணங்கள் குறித்து தெரிவிக்கப்ப ட்டுள்ளது.அதன்படி முகாம் நடந்த இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே நேற்று மக்கள் திரண்டனர். இதையடுத்து அவர்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதிகாரிகள் பெற்றுக் கொண்டனர் பூர்த்தி செய்தனர். விரல் ரேகை பயோமெட்ரிக் மூலம் சரிபார்க்கப்பட்டது.விண்ணப்பங்களை அலுவலர்களுக்கு வழங்கப்பட்ட மொபைலில் உள்ள செயலியில் பதி வேற்றினர். சேலம் சிஎஸ்ஐ பாலி டெக்னிக் கல்லூரியில் விண்ணப்பங்கள் பதி வேற்றம் செய்யும் பணியை கலெக்டர் கார்மேகம் ஆய்வு செய்தார். மாவட்டத்தில் 11 லட்சத்து 1861 ரேஷன் கார்டுகள் உள்ளன.இதில் முதல் கட்டமாக ஆறு லட்சத்து 138 காடுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் வழங்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு ஆகஸ்ட் 4 வரை விண்ணப்ப பதிவு முகாம் நடக்க உள்ளது.முதல் நாளில் 846 முகாம்களில் 60 ஆயிரத்து 250 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இரண்டாவது நாளாக இன்றும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப் பட்டு வருகிறது. இதனை வட்ட வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அதிகாரிகள் தொடர்ந்து பார்வையிட்டு வருகிறார்கள்.

    • ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
    • விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

    கடலூர்:

    கடலூரில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் கீழ் இன்று காலை முதல் விண்ணப்பங்கள் பெறும் முகாம் நடைபெற்று வரு கின்றது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் பெண்கள் ஆர்வ முடன் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அரசு அறிவித்த ஆவணங்களை இணைத்து பதிவு செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடலூர் புனித வளனார் பள்ளியில் நடைபெற்று வரும் விண்ணப்பங்கள் பெறும் முகாமை மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா நேரில் சென்று திடீரென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது விண்ணப்பங்கள் சரியான முறையில் பெறப் பட்டு பதிவு செய்யப்படு கிறதா? என்பதை பார்வை யிட்டு பொதுமக்களிடம் பணிகள் குறித்து கேட்ட றிந்தார்.

    மேலும் அரசு நிபந்தனைக் குட்பட்டு விண்ணப்பங்கள் அளிக்கும் அனைத்து விண்ணப்பதாரர்களும் பதிவு செய்து இத்திட்டம் மூலம் பயனடைய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் யாரும் விடுபடாமல் சரியான முறையில் விண்ணப்பங்கள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அப்போது மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பாலாஜி, தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மண்டல குழு தலைவர்கள் சங்கீதா செந்தில் முருகன், சங்கீதா, மாநகராட்சி கவுன்சிலர்கள் அருள்பாபு, பார்வதி, சுபாஷிணி ராஜா, சுதா அரங்கநாதன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    ×