என் மலர்
நீங்கள் தேடியது "Life for raping labourer"
- கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
- இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி உள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் முருகன் (40). கூலித்தொழி லாளி. இவர் கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 18ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசிக்கும் 14 வயது பள்ளி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பழகினார். பின்னர் சிறுமியின் வீட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பாலியல் பலாத்காரம் செய்தார்.
மேலும் இதுகுறித்து வெளியில் யாரிடமும் கூறினால் கொலை செய்து விடுவதாக சிறுமியையும், அவரது பெற்றோரையும் மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் முருகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். இந்த வழக்கு தேனி மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றவாளி முருகனுக்கு ஆயுள்த ண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பு வக்கீலாக குருவராஜ் ஆஜரானார்.






