என் மலர்tooltip icon

    தேனி

    • குடும்ப பிரச்சினையில் டிரைவர் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகில் உள்ள கோடாங்கிபட்டி பெருமாள் கோவில் தெற்குதெருவை சேர்ந்தவர் மோகன்ராஜ்(48). ஆக்டிங் டிரைவராக வேலைபார்த்து வந்தார். கடந்த வருடம் கணையம் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

    மேலும் அவரது அம்மா கடந்த மாதம் இறந்துவிட்டார். இதனால் மிகுந்த சோகத்தில் இருந்த மோகன்ராஜ் பூச்சிகொல்லி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். தேனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி அருகில் உள்ள பழனிசெட்டிபட்டி வடக்குஜெகநாதபுரத்தை சேர்ந்தவர் பால்பாண்டி(41). இவருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

    இதனால் மனமுடைந்த பால்பாண்டி வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த ஏராளமான பெண்கள் 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினர். இவர்கள் மாவட்ட மகளிர்திட்ட அலுவலகத்தில் உள்ள பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் கீழ் தங்கள் குழுக்களுக்கு கடன்கேட்டு விண்ணப்பித்தனர்.

    இந்நிலையில் தங்கள் குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க அனுமதி அளித்தும் அதனை வழங்காமல் மகளிர்திட்ட அதிகாரிகள் மற்றும் பஞ்சாயத்து கூட்டமைப்பினர் இணைந்து மோசடி செய்ததாக கூறி 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பெரியகுளம் லட்சுமிபுரத்தில் உள்ள அரசு வங்கியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இதுகுறித்து பெண்கள் கூறுகையில், எருமலைநாயக்கன்பட்டியை சேர்ந்த 10 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் ரூ.50 லட்சம் கடன் வழங்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ஆனால் பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மகளிர் திட்ட அதிகாரிகள் அந்த கடன் தொகையை எங்களுக்கு வழங்காமல் மோசடி செய்துள்ளனர்.

    எனவே மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன் எங்கள் குழுக்களுக்கு முறையாக கடன் வழங்கவேண்டும் என்றனர். போராட்டம் குறித்து அறிந்ததும் பெரியகுளம் போலீசார் விரைந்து வந்து பெண்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தினர். ரூ.50 லட்சம் கடன்தொகையை பெற்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததால் அவர்கள் கலைந்து சென்றனர்.

    • மனநலம் பாதித்த பெண் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • குணமடைந்த பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    போடி-மூணாறு செல்லும் சாலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் மனநலம் பாதிக்க ப்பட்டு உடல் சோர்வுடன் மரணத்தருவாயில் சுற்றி திரிந்தார்.

    அவரை மீட்டு மாவட்ட எஸ்.பி உத்தர வின்பேரில் போடி டி.எஸ்.பி மற்றும் போலீசார் சுப்பு லாபுரம் அரசு ஆரம்ப சுகா தார நிலைய மருந்தாளுநர் ரஞ்சித்குமார், பெண் காவலர் மகாலட்சுமி ஆகியோர் பெரியகுளம் அரசு மனநல மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்ததனர். அங்கு அந்த பெண்ணுக்கு தீவர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து தற்போது முழுகுணம் அடைந்ததுடன் அவரை விசாரணை நடத்தியதில் தான் முந்தல் மேலபரவு கிராமத்தை சேர்ந்த மலைவாழ் பழங்குடியினர் என்றும் பெற்றோரை இழந்ததால் ஆதரவற்ற நிலையில் சுற்றித்திரிந்ததாகவும் தெரிவித்தார். இதனை யடுத்து அந்த பெண்ணை அதிகாரிகள் உறவினர்களி டம் ஒப்படை த்தனர்.

    • தேனியில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி ரூ.20 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    • மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி மக்கள் மன்றத்தில் நடைபெற்ற 70-ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் சிறந்த கூட்டுறவு சங்கங்க ளுக்கு கேடயங்களையும், மகளிர் குழுக்களுக்கு கடனுதவிகளையும் வழங்கினார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார் (பெரியகுளம்) மகாராஜன் (ஆண்டிபட்டி) ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியதாவது,

    தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் மூலம் பல்வேறு கடனுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2022-2023 ஆம் ஆண்டிற்கு 17,454 விவசாயிகளுக்கு ரூ.187.68 கோடி பயிர்க்கடன் வழங்க ப்பட்டுள்ளது. நடப்பா ண்டில் (2023-24) இதுவரை 10,675 விவசாயிகளுக்கு ரூ.126.51 கோடி பயிர்க்க டனாக வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் கூட்டுறவுச் சங்க ங்கள மூலம் பயிர்க்கடன், நகை ஈட்டின்பேரில் பயிர்க்கடன், உரம், விதை உள்ளிட்ட வேளாண் இடுபொருட்கள் விற்பனை, வேளாண் விளை பொரு ட்கள் சந்தைப்படுத்துதல், கிட்டங்கி வசதி அளித்தல், தானிய ஈட்டின் பேரில் கடன், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுப்பொறுப்புக் குழுக்களுக்குக் கடன் வழங்கல், டாப்செட்கோ, டாம்கோ திட்டங்களின் கீழ் கடன் வழங்கல், மத்திய கால கடன்கள் வழங்குதல் உள்ளிட்ட திட்டங்களின் மூலம் ஊரகப் பொருளா தாரம் மேம்படவும், வேளாண் பெருங்குடி மக்களின் வாழ்க்கைத் தரம் உயரவும் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்த ப்படுகின்றன என பேசி னார்.

    கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 995 நபர்களுக்கு ரூ.11.8 கோடி மதிப்பிலான பயிர்க்கடனும், 198 நபர்களுக்கு ரூ.1.23 கோடி மதிப்பிலான கால்நடை பராமரிப்புக் கடனும், 941 நபர்களுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான மகளிர் சுய உதவிக்குழு கடன்களும், 23 நபர்களுக்கு ரூ.55.45 லட்சம் மதிப்பிலான மத்திய கால கடனும், 28 நபர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான சிறுவணிக்கடனும், 5 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு ரூ.2.50 லட்சம் மதிப்பிலான கடனும்,

    7 மகளிருக்கு ரூ.3.50 லட்சம் மதிப்பில் தொழில் முனைவோர் கடனும், 2 நபர்களுக்கு ரூ.1லட்சம் மதிப்பிலான விவசாயம் அற்ற கடனும், 3 நபர்களுக்கு ரூ.1.50 லட்சம் மதிப்பிலான சிறுகுறு தொழில் முனை வோர் கடனும், ஆதரவற்ற விதவைக் கடனாக ஒரு நபருக்கு ரூ.50,000மும், 12 நபர்களுக்கு சம்பளக் கடனாக ரூ.1.55 கோடியும் என மொத்தம் 2,215 பயனாளிகளுக்கு ரூ.20.05 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாக பணியாற்றிய கூட்டுறவு சங்ககங்களுக்கு கேடயங்களையும் அமைச்சர் வழங்கினார்.

    • விசாரணைக்கு பெண் தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ள முயன்றார்.
    • இதுகுறித்து பெண் மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் தேவா ரம் அருகில் உள்ள டி.ஓவுலாபுரத்தை சேர்ந்தவர் வேங்கையன். இவரது மனைவி கவுசல்யா(53). இவர் தனது வீட்டை தம்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த செட்டிவீரன் மகன் பெருமாளுக்கு ஒத்திக்கு விட்டிருந்தார்.

    அவர்களுக்குள் பிரச்சி னை ஏற்பட்டதால் இதுகுறித்து தேவாரம் போலீசில் கவுசல்யா புகார் அளித்தார். விசாரணைக்கு கவுசல்யா தேவாரம் போலீஸ் நிலையம் வந்த போது திடீரென தன் உடலில் மண்எண்ணை ஊற்றி தீ வைத்து கொள்ளப்போ வதாக கூறினார். இதனையடுத்து அங்கிருந்த போலீசார் கவுசல்யா விடமிருந்து மண்எண்ணையை பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து கவுசல்யா மீது தேவாரம் போலீசார் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கவுசல்யா புகாரின்பேரில் பெருமாள், அவரது மனைவி ராசாத்தி ஆகியோர் மீதும் வழக்குபதிவு செய்து ள்ளனர்.

    இதனிடையே கவுசல்யாவின் கணவர் வேங்கையன், பெருமாளின் உறவினரான ரீட்டா என்பவரை தகாத வார்த்தைகளால் பேசியதால் அவர் தற்கொலைக்கு முயன்றாராம். இதுகுறித்தும் ரீட்டா அளித்த புகாரின்பேரில் தேவாரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மின்அதிகாரியின் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.
    • அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை மர்மநபர்கள் திருடிச்சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி ரங்கநாதபுரம் செல்லும் சாலையில் கிருஷ்ணாநகர் பகுதி உள்ளது.

    இங்குள்ள மகாலட்சுமி நகர் குடியிருப்பில் சுமார் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் அரசு அதிகாரிகள், தொழிலதிபர்கள், ஏலக்காய் வியாபாரிகள் அதிகளவில் உள்ளனர்.

    இதேபகுதியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் கணவர் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வந்தார். இவரது மகளுக்கு மங்களூரில் வளைகாப்பு நடைபெறுவதால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றுவிட்டார்.

    அன்னலட்சுமியின் உறவினரான மணிகண்டன் தினமும் வீட்டுமுன்பு உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்சி செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வந்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிகிடந்தன.

    இதுகுறித்து போடி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி பெரியசாமி தலைமையில் அங்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ேமாப்பநாய் வரவழைக்கப்பட்டும், தடயவியல் நிபுணர்களை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    வீட்டில் 30 பவுனுக்கு மேல் நகைகள் இருந்ததாகவும், சுமார் ரூ.2 லட்சம் பணம் இருந்ததாகவும் அன்ன லட்சுமி தெரிவி த்துள்ளார். கொள்ளையடித்த நபர் அருகில் இருந்த ஒரு மேர்டடார் சைக்கிளையும் எடுத்துக்கொண்டு சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    போடியில் உள்ள ஒரு ஜவுளிகடைக்குள் நேற்று முன்தினம் இரவு புகுந்த ஒரு வாலிபர் கடையில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார். ேமலும் எந்தவித பதட்டமும் இல்லாமல் கடைக்குள் இருந்த துணிகளை ஒவ்வொன்றாக எடுத்து அது தனக்கு சரியாக உள்ளதா என போட்டுப்பார்த்து 10-க்கும் மேற்பட்ட பேண்ட்-சட்டைகளை திருடி ச்சென்றார்.

    இதுகுறித்த சி.சி.டி.வி காட்சிகள் போலீஸ் நிலையத்தில் அளிக்க ப்பட்டதன் அடிப்படையில் போலீசார் கொள்ளையன தேடி வருகின்றனர். இதனிடையே மற்றொரு சம்பவமாக வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோல் கிருஷ்ணா நகர் 6-வது தெருவை சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வா ரியஅதிகாரி முருகதாஸ் என்பவர் வீட்டைபூட்டிவிட்டு வெளியூர் சென்றிருந்தார். அவரது வீட்டிற்குள்ளும் புகுந்த கொள்ளையர்கள் அரைகிலோ வெள்ளி பொருட்கள், ரொக்கப்பணம், எல்.இ.டி.டிவி உள்ளிட்ட பொருட்களை திருடிச்சென்றனர்.

    இன்று காலை அவரது மகள் வீட்டிற்கு வந்தபோது கொள்ளை நடந்தது குறித்து அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து போடி டவுன் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரி ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே பொம்மைய கவுண்ட ன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன்(44). இவருக்கு திருமணமாகி சிந்துஜா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    பாலமுருகன் ஜவுளிவி யாபாரம் செய்து வந்தார். மது போதைக்கு அடிமை யானதால் வயிற்றில் நீர்கட்டி ஏற்பட்டது. ஆபரேசன் செய்தபின்னர் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவர் மனஉளைச்சலில் இருந்தார்.

    இதனால் அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அல்லிநகரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.

    கம்பம்:

    கம்பத்தில் ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஆர்.எஸ்.எஸ் தேனி மாவட்ட தலைவர் உதயகுமார் வரவேற்புரை வழங்கினார்.

    வ. உ .சி திடலில் தொட ங்கிய ஊர்வலத்திற்கு கட்டுமான ஒப்பந்ததாரர் துரை.தங்கமாயன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தினை தேனி மாவட்ட கம்பம் பள்ளதாக்கு விவசாய சங்க செயலாளர் ஜெய பாண்டியன், கம்பம் வேளாளர் மத்திய சங்க தலைவர் முருகேசன், கம்பம் இந்து நாடார் சங்க நிர்வாகி ராஜாராம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஊர்வலமானது வ.உ.சி திடலில் இருந்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தெரு, பார்க்ரோடு, எல்.எப்.மெயின்ரோடு, சிலப்பதிகாரம் தெரு, நெல்லு குத்தி புளியமரம் தெரு, கூலத்தேவர் முக்கு, வேலப்பர் கோவில் தெரு, போக்குவரத்து சிக்னல், பழைய பஸ் நிலையம், வரதராஜபுரம், கொண்டித்தொழு வழியாக வழியாக வ.உ .சி திடலில் நிறைவடைந்தது. பொதுக் கூட்டத் திடலில் ஆர். எஸ். எஸ் பயிற்சி மையத்தில் பயின்று வருபவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே, ஒருங்கிணைந்த செயல்பாடு, சுய கட்டுப்பாட்டு திற ன்களை வெளிக்காட்டினர்.

    பின்னர் பொதுக்கூட்ட நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் கோட்ட பொறு ப்பாளர் மகேஷ் சிறப்புரை யாற்றினார்.தேனி மாவட்டத்தில் இருந்து திரளான ஆர். எஸ். எஸ் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தை முன்னிட்டு உத்தமபாளையம் உதவி போலீஸ் சூப்பிரண்டு மதுக்குமாரி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பான பணியில் ஈடுபட்டனர்.

    • கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.
    • முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது.

    152 அடி உயரம் கொண்ட முல்லைப்பெரியாறு அணையில் உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின்படி 142 அடி வரை தண்ணீர் தேக்கப்படுகிறது. ஆனால் கேரள அரசு மற்றும் சில தன்னார்வலர்கள் அணை பலம் இழந்துவிட்டதாக வதந்தி பரப்பி வருகின்றனர்.மேலும் அணையின் நீர்மட்டத்தை உயர விடாமல் சதி செய்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக நீர் பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக அணையின் நீர்மட்டம் 133.75 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 5575 மி.கன அடியாகும். தற்போது மழை ஓய்ந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 105 கன அடியில் இருந்து 1000 கன அடியாக அதிகரிக்க ப்பட்டது.

    இதனால் வீரபாண்டி வரை உள்ள முல்லை ப்பெரியாற்று கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்ப ட்டுள்ளது. அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து பெரியாறு, வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர்பாலசிங்கம் கூறு கையில், கம்பம் பள்ள த்தாக்கு பாசனத்திற்கு போதுமான அளவு நீர் இருப்பு உள்ளது. வைகை அணையும் முழு கொள்ளளவை எட்டி உள்ளது. தற்போது தண்ணீர் தேவை இல்லாத நிலையில் முல்லைப்பெரியாறு அணையில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்படுவது தேைவயற்றது. ரூல்கர்வ் விதிப்படி வருகிற 30ந் தேதி வரை 142 அடி வரை தண்ணீர் தேக்கலாம். குறைந்தபட்சம் 136 அடி நீர்மட்டத்தை நிலை நிறுத்தி இருக்க வேண்டும். எனவே நீர் திறப்பை குறைக்க வேண்டும் என்றார்.

    அணையில் இருந்து 1000 கனஅடி நீர் திறக்கப்படுவ தால் லோயர்கேம்ப் பெரி யாறு நீர் மின் நிலையத்தில் 3 ஜெனரேட்டர்கள் மூலம் 90 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. அணைக்கு 1146 கன அடி நீர் வருகிறது.

    கூடுதல் தண்ணீர் திறப்பு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் பாசனத்திற்கு கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதால் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. எனவே அதனை ஈடுகட்டவே பெரியாறு அணையில் 1000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது என்ற னர்.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.98 அடியாக உள்ளது. 892 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீர் மற்றும் பாசனத்தி ற்காக 2099 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்ச ளாறு அணையின் நீர்மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணை யின் நீர்மட்டம் 126.41 அடியாக உள்ளது. 83 கன அடி நீர் வருகிறது. அது முழுவதும் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது.
    • சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் வருசநாடு, முருக்கோடை, முத்தாலம்பாறை, தொப்பையாபுரம், அருகவெலி, உள்ளிட்ட பகுதிகளில் பீன்ஸ், அவரை விவசாயம் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. தற்போது சீசன் தொடங்க உள்ள நிலையில் பீன்ஸ், அவரை கொடிகளில் மஞ்சள் நோய் தாக்கம் ஏற்பட்டு வருகிறது.

    இந்த நோய் தாக்கப்பட்ட கொடிகளில் இலைகள் மஞ்சள் நிறத்திற்கு மாறி தானாக உதிர்ந்து கீழே விழுந்து விடுகிறது. விவசாயிகள் பல்வேறு மருந்துகளை தெளித்து கொடிகளை பாதுகாத்து வருகின்றனர். இருப்பினும் எந்தவித மருந்துக்கும் கட்டுப்படாமல் மஞ்சள் நோய் வேகமாக பரவி வருகிறது.

    இதுதொடர்பாக பாதிப்படைந்த விவசாயிகள் கூறுகையில் - வருடம் தோறும் நவம்பர்,டிசம்பர், மாதங்களில் அதிக அளவில் பீன்ஸ், அவரை உள்ளிட்ட விவசாயம் நடைபெறும். ஆனால் ஆண்டுதோறும் மஞ்சள் நோய் தாக்கம் கட்டுப்படுத்த முடியாத அளவில் பரவி வருகிறது.

    இதனால் விவசாயி களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளா ண்மைத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து மஞ்சள் நோயை கட்டுப்ப டுத்த வேண்டும். மற்றும் பாதிப்படைந்த விவசாயி களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.
    • இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.

    தேனி:

    தமிழக அரசு ஓய்வூதி யர்கள், குடும்ப ஓய்வூதி யர்கள் ஆகியோர் உயிர்வாழ் சாற்றிதழ் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி தேனி மாவட்ட த்தில் 800 பேர் இந்த சான்றிதழை சமர்ப்பிக்காமல் உள்ளனர்.

    வயது முதிர்வு மற்றும் நோய் தாக்குதல் காரணமாக ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை நேடியாக சென்று சமர்ப்பி க்க பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர்.

    இதனை தவிர்க்க இந்தியா போஸ்ட் பேமன்ஸ் வங்கி மூலம் பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தி உயிர்வாழ் சான்று வீடுக ளுக்கே சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. இதற்கு கட்டணம் ரூ.70 என நிர்ணயிக்கப்பட்டு ள்ளது. தங்கள் வீட்டிற்கு வரும் தபால்காரரிடம் ஆதார் கார்டு, செல்போன் எண், பி.பி.ஓ.எண்., ஓய்வூதிய வங்கி கணக்கு விபரங்கள் ஆகியவற்றை தெரிவித்து தங்களது கைவிரல் ரேகையை பதிவு செய்தால் சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று சமர்ப்பிக்கப்படும்.

    மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக செல்போன் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்களும் வழங்க ப்பட்டுள்ளன. எனவே ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறு தபால் கோட்ட அதிகாரி தெரி வித்துள்ளார்.

    • தேனி 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது.
    • அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    தேனி:

    தேனி என்.ஆர்.டி.மக்கள் மன்றத்தில் 70-வது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா நாளை(20-ந்தேதி) மாலை 4 மணியளவில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடக்கிறது. விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி கலந்து கொண்டு சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்கள் வழங்கி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    விழாவில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்ப திவாளர் ஆரோக்கியகுமார் வரவேற்புரையாற்றுகிறார். மதுரை மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர் ஜீவா திட்ட விளக்கஉரையாற்றுகிறார். எம்.எல்.ஏக்கள் சரவணக்கு மார், ராமகிரு ஷ்ணன், மகாராஜன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பிரீத்தா, அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் ரேணுபிரியா, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டியன், அல்லிநகரம் நகர்மன்ற துணைத்தலைவர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் ராஜாங்கம் நன்றியுரை கூறுகிறார்.

    ×