என் மலர்
உள்ளூர் செய்திகள்

பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கடைகளில் ஆய்வு.
பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்து கடைகளில் ஆய்வு
- கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
- இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே எ.புதுப்பட்டி, அழகர்நாயக்கன்பட்டி பகுதிகளில் உணவு பாதுகாப்பு துறையினர் மாவட்ட நியமன அலுவலர் ராகவன் உத்தரவின் பேரில் பெரியகுளம் உணவு பாதுகாப்பு அலுவலர் சக்தீஸ்வரன், மதுவிலக்கு பிரிவு போலீஸ் ஜெயசீலன் மற்றும் போலீசார் கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளனவா என ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் 4 கடைகளில் தடை செய்த புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு தலா ரூ.5000 வீதம் 4 கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுரைகள் வழங்கி எச்சரித்தனர்.
Next Story






