என் மலர்tooltip icon

    தேனி

    • கடன் பிரச்சினையால் மன உளைச்சலுக்கு ஆளான வாலிபர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.
    • சம்பவத்தன்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சின்னமனூர்:

    சின்னமனூரை சேர்ந்தவர் முருகன் (வயது41). இவருக்கு கடன் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான இவர் யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சின்னமனூர் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங் களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை நடக்கிறது.
    • நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்றுத்திறனாளி சங்கங்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 29-ந் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடத்தப்படவுள்ளது.

    இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் சங்கங்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம். மனு அளிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல்,

    குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், புகைப்படம்- 1 உடன் நேரிலோ அல்லது பாதுகாவலர் மூலமாகவோ விண்ணப்பித்து பயன்பெறலாம் என கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    தேனி:

    ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது,

    பெண்களுக்கு எதிரான மற்றும் மனரீதியான துன்புறுத்தலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நமது சுற்றுப்புறங்களில் இருந்து தான் முதலில் தொடங்குகிறது. பெண்கள் பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வெளியில் சொல்வது கிடையாது, பாதிப்பு அதிகமான பிறகு தான் வெளியில் சொல்கிறார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக,

    தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஒன்ஸ்டாப் சென்டர் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அவசர அழைப்புகளில் தொடர்பு கொண்டு இதன் மூலம் பலர் தீர்வு காணப்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நல்ல சூழ்நிலை உருவாவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருமணமான பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு இல்லாமல் தற்பொழுது குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான கொடுமைகள் நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர்களுக்கு இதுபோன்ற மனநிலை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    இதையொட்டி சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது என பேசினார்.

    • கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
    • அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு ஜவுளி கடையில் கடந்த வாரம் நள்ளிரவில் புகுந்த ஒரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார்.

    மேலும் கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் பதிவான நிலையில் அதனை வைத்து போடி போலீஸ் நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.

    இதற்கு அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை வழக்கிலும் முகமூடி அணிந்த 3 பேர் ஈடுபட்டது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது.

    இதனையடுத்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொள்ளை நடந்து ஒரு வாரம் ஆகியும் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் உருவம் கேமராவில் பதிவான போதிலும் இன்னும் போலீ சாரால் குற்றவாளியை கண்டு பிடிக்க முடி யவில்லை.

    ெதாடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் போடியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த அச்சம் அடைந்து னர்.


    • சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது.
    • கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகிலுள்ள சிலமலை, சூலபுரம் கரட்டுப்பட்டி ராசிங்கபுரம் ராணி மங்கம்மாள் சாலை பகுதிகளில் சுமார் 400 ஏக்கருக்கும் மேல் நாட்டு ரக மொச்சை பயிறு, நாட்டு ரக தட்டை பயிறு மற்றும் ஆம்பூர் ரக வீரிய ரக தட்டை பயிறு வகைகள் பெருமளவில் பயிரிடப்பட்டு வருகிறது.

    இதில் சுமார் 150 ஏக்கருக்கு மேல் மானாவாரி விவசாயமாக மொச்சை பயிர் மற்றும் தட்டைப்பயறு ரகம் பயிரிடப்பட்டு வருகிறது. நவம்பரில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை மொச்சைப்பயிறு மற்றும் தட்டைப் பயிறு வகையில் பெருமளவில் விவசாயம் செய்யப்பட்டு வெளியூர்களுக்கும் வெளிமாநிலங்களுக்கும் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.

    இப்பகுதியில் விளையும் மொச்சை பயிர்கள் எண்ணெய் மற்றும் புரத சத்துகள் அதிகம் உள்ளதால் வெளிச்சந்தையில் தேனி மாவட்டத்தில் விளையும் மொச்சை பயிறு வகைகளுக்கு என்றும் மதிப்பு அதிகம் உள்ளது.

    டிசம்பர் மாதம் காலத்தில் பனிப்பொழிவு அதிகரிக்க அதிகரிக்க மொச்சை பயிர் சாகுபடி அதிகரிக்கும். கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் செடி மற்றும் காய்களில் புழுக்கள் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

    பலமுறை மருந்தடித்தும் உரங்கள் இட்டும் பெய்த மழை காரணமாக மருந்தின் ஆற்றல் குறைந்து புழுக்களின் தாக்குதல் அதிகரித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். இதனால் கொள்முதல் விலை கிலோ ரூ.15 முதல்ரூ.20 வரை மட்டுமே பெறப்படுவதால் விவசாயிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.

    • மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.
    • சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

    தேனி:

    தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின் முறை நாடார் சரஸ்வதி கல்வியியல் கல்லூரியில் மாநில அளவிலான பாடத்திட்டம் எழுதுதல் பற்றிய கருத்தரங்கம் பி.எட். முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு நடைபெற்றது.

    கல்லூரி தலைவர் ராஜமோகன், உபதலைவர் கணேஷ், பொதுச் செயலாளர் ஆனந்தவேல், பொருளாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் பியூலாராஜினி வரவேற்புரையாற்றினார். சென்னை ஆசிரியர் கல்வி பல்கலைக்கழக பேராசிரியர் ராமகிருஷ்ணன் பயிற்சி அளித்தார்.

    நிகழ்ச்சியில் உதவி பேராசிரியர் யோகா அஞ்சுஸ்ரீ, செயலாளர் குணசேகரன், இணைச் செயலாளர் மணிமாறன், உதவி பேராசிரியர் அபர்ணாதேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.
    • கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் சுருளிப்பட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவைச் சேர்ந்த மணிமுத்து மனைவி ராமுத்தாய் (வயது 80). கணவர் இறந்து விட்டதால் இவர் தனியாக வசித்து வந்தார். பேரன் போத்திராஜ் பராமரிப்பில் வாழ்ந்து வந்தார்.

    அவர் தினசரி ராமுத்தாய்க்கு உணவு கொடுத்து விட்டு செல்வது வழக்கம். இன்று காலை அவரது வீடு திறந்து கிடந்தது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகத்தின் பேரில் வீட்டில் எட்டிப் பார்த்தபோது ராமுத்தாய் ரத்தவெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

    வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள் அவரை தாக்கி கொன்று விட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து கம்பம் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    இன்ஸ்பெக்டர் (பொ) சிலை மணி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்ட மூதாட்டியின் உடலை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அப்பகுதியில் ஏதேனும் சி.சி.டி.வி. காட்சிகள் உள்ளதா என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கம்பம் நகரில் கஞ்சா மற்றும் மது போதையில் வாலிபர்கள் இரவு சாலையில் சுற்றிக் கொண்டு நடந்து செல்லும் பெண்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி பணம் பறிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது.

    மேலும் பூட்டி இருக்கும் வீடுகளை குறி வைத்தும், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது போன்ற நபர்கள்தான் பணம் மற்றும் நகைக்காக மூதாட்டியை கொலை செய்திருக்கக்கூடும் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர்.

    • இவர் அதே பகுதியைச் சேர்ந்த வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது.
    • அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது அந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    சின்னமனூர்:

    சின்னமனூர் வ.உ.சி. நகர் 4-வது தெருவைச் சேர்ந்த பழனிச்சாமி மகள் பவதாரணி (வயது 21). இவர் அதே பகுதியைச் சேர்ந்த கிஷோர் என்ற வாலிபருடன் பழகி வந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று பவதாரணி வீட்டை விட்டு மாயமானார். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோது பவதாரணியை கிஷோர் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து பழனிசாமி சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தப்பட்ட இளம்பெண்ணையும், அவரை கடத்திச் சென்ற வாலிபரையும் தேடி வருகின்றனர்.

    • முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
    • சேவைத் துறையில் 7 நிறுவனங்கள் ரூ.60.70 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனியில் தொழில் முதலீட்டு மாநாடு 2024-ஐ முன்னிட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான சிறப்பு நோக்கு கூட்டம் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியினை பெருக்குவதற்கும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு வரும் 2024 ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னையில் நடைபெற உள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய நீடித்த மற்றும் நிலையான வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதற்கு திட்டமிடப்பட்டு இம்மாநாடு நடைபெற உள்ளது.

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 சார்பாக, தேனி மாவட்டத்திற்கு ரூ.540 கோடி முதலீடுகளை ஈர்ப்பதற்கு குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டு, தற்போது 35 நபர்களிடமிருந்து ரூ.479.12 கோடி முதலீடுகள் அளிக்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் உற்பத்தி துறையில் 28 நிறுவனங்கள் ரூ.418.42 கோடி முதலீடு செய்வதற்கும், சேவைத் துறையில் 7 நிறுவனங்கள் ரூ.60.70 கோடி முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.60.88 கோடி குறியீட்டினை அடைவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தேனி மாவட்டத்தின் புவியியல் அமைப்பு மற்றும் மூலப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் தொழில் முனைவுகளையும் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்முனைவுகளையும் அதிக அளவில் ஊக்குவிக்க நமது மாவட்டத்தின் சார்பில் அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    மேலும், அதிக அளவு மானியம் தரக்கூடிய திட்டமாக அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் புதிய முனைவோர்களுக்காகவும், தொழிலை மேம்படுத்துவதற்காக உள்ள திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்வதற்கும், இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    • கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்

    சின்னமனூர்:

    கம்பம் துணை மின்நிலையத்தில் நாளை 25-ந்தேதி மாதாந்திர பரமாரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கம்பம், கூடலூர், உத்தமபுரம், ஊத்துக்காடு, அண்ணாபுரம், புதுப்பட்டி, காமயகவுண்டன்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும். இதே போல் மார்க்கையன்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மார்க்கையன்கோட்டை, அய்யம்பட்டி, புலிக்குத்தி, கீழசிந்தலைச்சேரி, மேலசிந்தலைச்சேரி, பல்லவராயன்பட்டி, குண்டல்நாயக்கன்பட்டி, அம்மாபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என சின்னமனூர் மின்பகிர்மான செயற் பொறியாளர் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.


    • மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா விலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
    • கடந்த 2 நாட்களில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

    கூடலூர்:

    மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கேரளா விலும், முல்லைப்பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியிலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் பெரியாறு அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 2 நாட்களில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்துள்ளது. நேற்று காலை 4118 கன அடியாக இருந்த நீர் வரத்து மாலையில் 5800 கன அடியாக அதிகரித்தது.

    இன்று காலை அணைக்கு 3617 கன அடி நீர் வருகிறது. நேற்று 134.90 அடியாக இருந்த நீர் மட்டம் இன்று காலை 135.80 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து 1000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 6068 மி.கன அடியாக உள்ளது.

    தொடர்ந்து மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால் முல்லை ப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 142 அடி வரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ரூல்கர்வ் அடிப்படையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பை கைவிட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

    71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் 67.32 அடியாக உள்ளது. நீர் வரத்து 4583 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து பூர்வீக பாசனத்துக்காகவும், மதுரை குடிநீர் தேவைக்காகவும் 5899 கன அடி நீர் வெளி யேற்றப்படுகிறது. நீர் இருப்பு 5162 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 55 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ள ளவை எட்டி 126.93 அடியில் உள்ளது. அணைக்கு வரும் 521 கன அடி முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது. தொடர் மழை காரணமாக கும்பக்கரை அருவியில் இன்று 22-வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதே போல் மேகமலை, சுருளி அருவியிலும் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அங்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 5.8, தேக்கடி 11.4, கூடலூர் 3.6, உத்தம பாளையம் 2.4, போடி 3.2, வைகை அணை 14, மஞ்ச ளாறு 3, சோத்துப்பாறை 26, பெரியகுளம் 18, வீரபாண்டி 12, அரண்மனைபுதூர் 11 மி.மீ மழை அளவு பதிவாகி யுள்ளது.


    • இந்த தெருப்பகுதிக்கு சாக்கடை வடிகால்கள் இல்லாததால் கொட்டகையில் இருந்து வெளியேறும் மாட்டுச் சாணம் மற்றும் கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது.
    • தெரு வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மாட்டு ச்சாணத்தின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் கடமலை-மயிலை ஒன்றியம் கடமலைக்குண்டு அருகே மேலப்பட்டி பட்டாளம்மன் கோவில் தெருப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இதே தெருவில் வசிக்கும் தனிநபர் ஒருவர் அவரது வீட்டில் கொட்டகை அமைத்து பசுமாடுகள் வளர்த்து வருகிறார். இந்த தெருப்பகுதிக்கு சாக்கடை வடிகால்கள் இல்லை.

    எனவே கொட்டகையில் இருந்து வெளியேறும் மாட்டுச் சாணம் மற்றும் கழிவு நீர் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. மாடுகளின் கழிவை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் அகற்ற வேண்டும் என அவருக்கு பொதுமக்கள் பலமுறை முறையிட்டும் எந்த வித பலனும் இல்லை. அதே போல கடமலை க்குண்டு ஊராட்சி நிர்வாக த்திடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

    அதனால் தற்போது இந்த தெருப்பகுதி முழுவதும் மாட்டு சாணம் குவிந்து காணப்படுகிறது. தெரு வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் மாட்டு ச்சாணத்தின் மேல் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. சுகாதார கேடு ஏற்பட்டுள்ள காரண த்தால் அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகளால் தொடர்ந்து அவதியுற்று வருகின்றனர்.

    அதேபோல குழந்தைகளுக்கு தோல் பிரச்சனைகளும் ஏற்பட்டு வருகிறது. எனவே ஊராட்சி நிர்வாகம் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூலம் மாவட்ட கலெ க்டர் அலுவலகத்தில் முறை யிடப் போவதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×