search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆண்டிபட்டியில் பெண்கள் பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி
    X

    விழிப்புணர்வு பேரணியை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தொடங்கி வைத்தார்.

    ஆண்டிபட்டியில் பெண்கள் பாலின வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி

    • சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
    • நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    தேனி:

    ஆண்டிபட்டி அரசு ஆஸ்பத்திரி அருகில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண்களுக்கு எதிரான பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார பேரணியினை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, மகாராஜன் எம்.எல்.ஏ. முன்னிலையில் தொடங்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது,

    பெண்களுக்கு எதிரான மற்றும் மனரீதியான துன்புறுத்தலும் பாலியல் ரீதியான துன்புறுத்தலும் நமது சுற்றுப்புறங்களில் இருந்து தான் முதலில் தொடங்குகிறது. பெண்கள் பல நேரங்களில் இது போன்ற சம்பவங்களில் வெளியில் சொல்வது கிடையாது, பாதிப்பு அதிகமான பிறகு தான் வெளியில் சொல்கிறார்கள். இந்தநிலை மாற வேண்டும் என்பதற்காக,

    தேனி அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரியில் ஒன்ஸ்டாப் சென்டர் தொடர்ந்து 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குடும்ப ரீதியான பிரச்சினைகள் குறித்தும் அவசர அழைப்புகளில் தொடர்பு கொண்டு இதன் மூலம் பலர் தீர்வு காணப்பட்டு வருகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு நல்ல சூழ்நிலை உருவாவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    திருமணமான பெண்களுக்கு மட்டுமே இதுபோன்ற பாதிப்பு இல்லாமல் தற்பொழுது குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியான கொடுமைகள் நடந்து வருகிறது. வரும் தலைமுறையினர்களுக்கு இதுபோன்ற மனநிலை பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். நவம்பர் 25-ந் தேதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பதற்கான சர்வதேச தினமாகும்.

    இதையொட்டி சர்வதேச மனித உரிமைகள் தினம் டிசம்பர் 10-ம் தேதி வரை உள்ள 16 நாட்களுக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு பணிகள் நடைபெற உள்ளது என பேசினார்.

    Next Story
    ×