என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போடியில் தொடர் கைவரிசை குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
- கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார்.
- அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி நகரின் மத்தியில் அமைந்துள்ள ஒரு ஜவுளி கடையில் கடந்த வாரம் நள்ளிரவில் புகுந்த ஒரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.1.30 லட்சத்தை திருடினார்.
மேலும் கடையில் இருந்த துணிகளை தனக்கு ஏற்றவாறு ஒவ்வொன்றாக தேர்வு செய்து எடுத்து அதனையும் திருடிக் கொண்டு அதே சாலையில் நின்று கொண்டிருந்த ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றார். இது குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் பதிவான நிலையில் அதனை வைத்து போடி போலீஸ் நிலையத்தில் கடையின் உரிமையாளர் புகார் அளித்தார்.
இதற்கு அடுத்த நாள் அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருட்களை திருடிச் சென்றனர். இந்த கொள்ளை வழக்கிலும் முகமூடி அணிந்த 3 பேர் ஈடுபட்டது சி.சி.டி.வி. காட்சிகள் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். கொள்ளை நடந்து ஒரு வாரம் ஆகியும் சம்பவத்தில் ஈடுபட்ட நபரின் உருவம் கேமராவில் பதிவான போதிலும் இன்னும் போலீ சாரால் குற்றவாளியை கண்டு பிடிக்க முடி யவில்லை.
ெதாடர்ந்து குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வரும் போடியில் கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருவதால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் மிகுந்த அச்சம் அடைந்து னர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்