என் மலர்
தஞ்சாவூர்
- பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
பேராவூரணி:
பேராவூரணி துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை சனிக்கிழமை நடைபெற இருப்பதால் இந்த துணை மின்நிலைய த்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான பேராவூரணி, கொ ன்றைக்காடு, குருவிக்க ரம்பை, பூக்கொல்லை, கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், திருவ த்தேவன், குப்பத்தேவன், உடையநாடு, சேதுபா வாசத்திரம், மல்லிப ட்டினம், மரக்காவலசை, நாடியம், பள்ளத்தூர், கள்ளம்பட்டி, செருபால க்காடு, ஒட்ட ங்காடு, செருபாலக்காடு, கட்டய ங்காடு, திருச்சி ற்றம்பலம், துறவிக்காடு ,சித்துக்காடு, செருவாவிடுதி, வா.கொ ல்லை க்காடு,குறி ச்சி, ஆவணம், சாணாகரை, பைங்கால் படப்ப னார்வயல், மணக்காடு, பட்டத்தூரணி மற்றும் அதனைச் சுற்றியு ள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது எனவும், மின் தடை தொடர்பான புகார்களு க்கு 9498794987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ள வும் என பேராவூரணி மின்வாரிய உதவி செய ற்பொறியாளர் கமலக்க ண்ணன் தெரிவித்துள்ளார்.
- பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள் அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
- அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து பணத்தை திருடினர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆம்பலாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் டென்சிங்.
இவர் பாப்பாநாட்டில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகின்றார்.
இந்நிலையில் வழக்கம் போல நேற்றிரவு பணிகளை முடித்துவிட்டு பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் ஊழியர்கள், பெட்ரோல் பங்கில் உள்ள அறையில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அறைக்குள் புகுந்து ஊழியர்களின் செல்போன் மற்றும் பணத்தை திருடினர்.
இவர்களின் சத்தம் கேட்டு எழுந்த ஊழியர்கள் அவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர்.
இது குறித்து டென்சிங் அளித்த புகாரின் அடிப்படையில் பாப்பாநாடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
மேலும் கொள்ளை போன பணம் எவ்வளவு என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர் .
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி நடக்கிறது.
- இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
திருவையாறு தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவையாறு துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட விளாங்குடி 11 கிலோ வாட் உயரழுத்த மின்பாதையில் மின்கம்பி தரம் உயர்த்தவும், பழுதடைந்த மின்கம்பங்களை மாற்றும் அவசர கால பணியும் 30-ம் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது.
எனவே தஞ்சை அருகே உள்ள பெரும்புலியூர், புனல்வாசல், விளாங்குடி, வில்லியநல்லூர், ஒக்கக்குடி, செம்மங்குடி, அணைக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் 30-ந்தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
- பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றது.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பெரிய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
இங்குள்ள மகா நந்திக்கு பிரதோஷம் தோறும் சிறப்பு அபிஷேக வழிபாடு நடைபெறும்.
அதன்படி நேற்று மாலை பிரதோஷத்தை முன்னிட்டு மகாநந்திக்கு மஞ்சள், பால் மற்றும் திரவிய பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
- தனியாா் விதை விற்பனையாளா்கள் விதை விற்றதற்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும்.
- தஞ்சாவூா் விதை பரிசோதனை ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டன.
தஞ்சாவூர்:
தஞ்சாவூா் மாவட்டத்தில் அம்மாபேட்டை, சாலியமங்கலம், ஆலக்குடி, பூதலூா், தஞ்சாவூா், திருக்காட்டுப்பள்ளி, செங்கிப்பட்டி ஆகிய பகுதிகளின் அரசு மற்றும் தனியாா் விதை விற்பனை நிலையங்களில் திருச்சி விதை ஆய்வு துணை இயக்குநா் கோவிந்தராசு தலைமையில் தஞ்சாவூா் விதை ஆய்வு துணை இயக்குநா் விநாயகமூா்த்தி, விதை ஆய்வாளா்கள் மோகன்தாஸ், பிரகாஷ், நவீன் சேவியா், சத்யா, சுரேஷ் உள்ளிட்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா்.
இதில் தனியாா் விதை விற்பனையாளா்கள் விதை விற்றதள்கான ரசீது கட்டாயம் வழங்க வேண்டும் என்றும், ரசீது இல்லாமல் விற்றாலோ, கூடுதல் விலைக்கு விற்பனை செய்தாலோ விதைச் சட்டம் 1966, விதை விதிகள் 1968 மற்றும் விதை கட்டுப்பாட்டு ஆணை 1983 கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை வழங்கினா்.
ஆய்வின்போது 16 விதை மாதிரிகள் முளைப்பு திறன் சேகரிக்கப்பட்டு தஞ்சாவூா் விதை பரிசோதனை ஆய்வு நிலையத்துக்கு அனுப்பப்பட்டன. மேலும், விதை சட்ட விதிகளை மீறியதாக 6 விதை குவியல்களில் ரூ. 2.29 லட்சம் மதிப்புள்ள 5 ஆயிரத்து 610 கிலோ விதைகளை விற்கத் தடை விதிக்கப்பட்டது.
- பிரசாரம் வானம் விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
- 2023-24ம் ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் எண்ணெய் பனை சாகுப டியை அதிகரிக்கும் நோக்கில் பிரசாரம் செய்திட விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது ;-
தோட்டக்கலை துறை மூலம் 2023-24ம் ஆண்டில் தேசிய சமையல் எண்ணெய் இயக்கம் - எண்ணெய் பனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த 2023-24 நிதியாண்டில் 74.50 எக்டர் பரப்பில் எண்ணெய் பனை புதிய பரப்பு விரிவாக்கம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.21.605 லட்சம் நிதி பெறப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் கோத்ரேஜ் அக்ரோவெட் பிரைவேட் லிட் எனும் தனியா நிறுவனம் மூலம் தரமான கன்றுகள் உத்தரவாத கொள்முதல் முறையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட உள்ளது.
மேலும் எண்ணெய் பனை சாகுபடியில் முதல் 4 ஆண்டுகள் வரை பராமரிப்பு செலவினத்திற்காக ரூ.5,250 மற்றும் ஊடுபயிர் சாகுபடி செய்ய டீசல்/ மின் பம்பு செட்டுகள், பாதுகாப்பான சரகங்களில் ஆழ்துளை கிணறு அமைத்தல், நடவு செய்த கன்றுகளை பாதுகாக்க கம்பிவலை, சிறிய உழுவை எந்திரம், பனை இலை வெட்டும் கருவி, அறுவடை செய்ய ஏதுவாக அலுமினிய ஏணி, பழக்குலை வெட்டும் கருவி ஆகியவை அதிகபட்சமாக 50 சதவீத மானியத்தில் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட உள்ளது
எண்ணெய் பனை சாகுபடி குறித்தும் அரசின் மானிய திட்டங்களை எடுத்துரைக்கும் வகையிலும் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வலகயில் பிரசார வாகனம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் எண்ணெய் பனை சாகுபடி செய்ய ஆர்வமுள்ளவ விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன், வேளாண்மை இணை இயக்குர் (பொ) ஈஸ்வரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கோமதி தங்கம், வேளாண்மை இணை இயக்குநர் (மா.தி) சுஜாதா, தோட்டக்கலை உதவி இயக்குநர் (நடவு பொருள்) கனிமொழி, தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துறை துணை இயக்குனர் (பொ) வெங்கட்ராமன், தஞ்சாவூர், ஒரத்தநாடு பட்டுக்கோ ட்டை, பேராவூரணி, கும்பகோணம் மற்றும் பாப நாசம் தோட்டக்கலை உதவி இயக்குநர், தலைமை சந்தை விரிவாக்கம், கோத்ரேஜ் அக்ரோவெட் பிரைவேட் லிட் முத்துச்செல்வன் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- நவராத்திரி விழா அடுத்த மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெற உள்ளது.
- கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சுவாமிமலை:
ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும் நவராத்திரி விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது.
விழாவை யொட்டி தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் கொலு வைத்து வழிபடுவர்.
அதேபோல், ஏராள மானோர் தங்கள் வீடுகளில் 5,7,9,11 ஆகிய எண்ணிக்கையிலான படிகள் அமைத்து விதவிதமான கொலு பொம்மைகளை அடுக்கி வைத்து பக்தி பாடல்கள் பாடி, அக்கம் பக்கத்தினர், உறவினர்கனை வீட்டிற்கு கொலு பார்க்க அழைத்து அவர்களுக்கு மங்கல பொருட்கள் வழங்குவர்.
விழா தொடங்குவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் கும்பகோணம் பகுதிகளில் கொலு பொம்மைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து பாபு ராஜபுரத்தில் பொம்மைகள் விற்பனைக்கு வைத்துள்ள தினேஷ் என்பவர் கூறுகையில்:-
கொலுவிற்கு தேவை யான பலவிதமான மண் பொம்மைகள், மர பொம்மைகள், பேப்பர் பொம்மைகள், 3 இன்ச் முதல் 7 அடி வரை உயரம் கொண்ட 63 நாயன்மார்கள் செட், தசவதார பெருமாள், நவக்கிரக பொம்மைகள், காஞ்சி மகாபெரியவர், கொல்கத்தாகிலே பொம்மைகள், சமயபுரம் மாரியம்மன், சிவன்- பார்வதி, கும்பகர்ணன், கிருஷ்ணர், ராதை, புத்தர் உள்பட பல்வேறு வகையான பொம்மைகள் ரூ.10 முதல் 7 ஆயிரம் வரை விற்பனைக்கு வைத்துள்ளேன்.
மேலும், இந்த பொம்மைகள் தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை க்காக அனுப்பப்படுகிறது.
இதனை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர் என்றார்.
- வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார்.
- அக்கம் பக்கத்தினர் வீரையனை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
பட்டுக்கோட்டை:
பட்டுக்கோட்டை அருகே உள்ள துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரையன் (வயது 50). கூலி தொழிலாளி.
இவர் துவரங்குறிச்சி- அதிராம்பட்டினம் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுபாட்டில்களை வாங்கி கொண்டு தன் ஊருக்கு திரும்பி உள்ளார்.
அவரை வழி மறித்த கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் டாஸ்மாக்கில் மதுபாட்டில் வாங்கி திருட்டு தனமாக அதிக விலைக்கு விற்கிறாயா? என்று கேட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீரையன் மகன் முருகேசனுக்கு தகவல் கொடுக்க அவர் சம்பவ இடத்திற்கு வந்து தனது தந்தையை அழைத்து சென்றார்.
வீட்டுக்கு சென்றவுடன் வீரையன் சற்று நேரத்தில் மயங்கி விழுந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த டாக்டர்கள் வீரையன் இறந்து விட்டதாக கூறினார்.
இது குறித்து தகவல் அறிந்தும் அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அவரது சாவிற்கு நீதி கிடைக்கும் வரை பிணத்தை வாங்க மாட்டோம் என்றும், மரணத்திற்கு காரணமான கலால் கவால்துறை தலைமை காவலர் குணசீலன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தமிழக காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென்று கோரிக்கை வைத்து பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான், வட்டாட்சியர் ராமச்சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மணி நேரத்திற்கு மேலாக சாலை மறியல் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
- டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தஞ்சாவூர்:
தஞ்சையில் இன்று தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பட்டுக்கோட்டையில் தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். என்னுடைய கோரிக்கையும் அதுதான். தென்னை சார்ந்த தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக 4 நிறுவனங்களிடம் பேசி உள்ளோம். இதற்காக நில தேவைகள் அதிகமாக உள்ளது. நில எடுப்பு நடந்து முடிந்த பிறகு விரைவிலே தென்னை சார் தொழிற்சாலை அமைக்கப்படும்.
தஞ்சையில் ஐ.டி பார்க் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. ஐ.டி பார்க்க செயல்பாட்டுக்கு வந்ததும் டெல்டா மாவட்டங்களில் படித்த ஏராளமானவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளின் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி சார்ந்த வேளாண் தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு தொழில்கள் நலிவடையாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு தமிழ்நாட்டில் தான் தொழில் தொடங்க ஏராளமானோர் முன் வருகின்றனர். முதலீடு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் நடக்க உள்ள முதலீட்டாளர் மாநாட்டில் அதிக அளவில் முதலீடுகள் ஈர்க்கும் வகையில் இருக்கும். அவர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு சலுகைகள் வழங்கப்படும். தமிழ்நாடு மட்டும்தான் சொன்னதை செய்கிறது. ஏற்கனவே தொழில் தொடங்கியவர்கள் மீண்டும் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க முன் வருகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.
- கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே உள்ள விசித்திரராஜபுரம் காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் பிரபாகரன் மனைவி கோகிலாம்பாள்(வயது 33). கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரபாகரன் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கோகிலாம்பாள், கபிஸ்தலம் அருகே உள்ள மேல கபிஸ்தலம் கொத்த தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் கடிகாரம் மற்றும் செல்போன் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் கோகிலாம்பாள் தனது கடையில் செல்போனை சார்ஜில் போட்டபடியே செல்போனில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென செல்போன் வெடித்து தீ பிடித்தது.
இதில் கோகிலாம்பாள் உடல் முழுவதும் தீப்பிடித்து அவர் கடையிலேயே தீயில் கருகி இறந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- காவிரி நீர் பெற்று குறுவை பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் காய்ந்து வரும் குறுவை பயிர்களை காப்பாற்ற தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டும் காவிரி நீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் போராட்டம் நடந்து வருகிறது.அந்த வகையில் இன்று தே.மு.தி.க. சார்பில் தஞ்சை பனகல் கட்டிடம் முன்பு உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை தாங்கினார். அப்போது அவர் கருகிய குறுவை பயிர்களை கண்டு மாரடைப்பால் மரணம் அடைந்த விவசாயி ராஜ்குமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து போராட்டம் தொடங்கி நடைபெற்றது.
இந்த போராட்டத்தில் தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் டாக்டர் ராமநாதன், தலைமை செயற்குழு உறுப்பினர் நடராஜன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் சூரியமூர்த்தி, தஞ்சை மாநகர மாவட்ட பொருளாளர் கரம்பை சிவா உள்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது உடனடியாக காவிரி நீர் பெற்று குறுவைப் பயிர்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது.
- தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில் கட்டப்பட்டது.
- தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் அரண்மனை வளாகம் சார்ஜா மாடி கட்டிடம் புதுப்பித்தல் மற்றும் மறு சீரமைக்கும் பணிகள், தர்பார் மண்டபம் புதுப்பிக்கும் பணிகள் மற்றும் பலவேறு இடங்களில் தமிழ்நாடு சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் குழுவினர் ஆய்வு செய்தனர்.
பின்னர் குழு தலைவர் செல்வப் பெருந்தகை நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
தஞ்சாவூரில் சரபோஜி மன்னர் கட்டிடம் ரூ. 9.12 கோடி மதிப்பிட்டில், பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.
இந்த கட்டிடம் புணரமைப்பு கவர்னர் அறிவிப்பின்படி என எழுதியுள்ளனர்.
பலகை வைக்கப்பட்டுள்ளது. கவர்னர் அறிவிக்கவில்லை,தமிழக முதல்வர் தான் அறிவித்தார். அதை மாற்ற வேண்டும் என அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம்.
அதிகாரிகள் இனிவரும் காலங்களில் இது போன்ற தவறுகளை செய்யக்கூடாது என அறியுறுத்தியுள்ளோம்.
கவர்னர் தமிழக அமைச்சரவை எழுதிக் கொடுப்பதை படிப்பவர்தான்.
அவர் சட்டம் தீட்ட முடியாது. அவர் என்றும் தனி தர்பார் நடத்த முடியாது.
தர்பார் நடத்தியவர்கள் எல்லாம் இன்று இல்லை .மராட்டியர்கள், நாயக்கரகள், கிருஷ்ணதேவராயர், சத்ரபதி சிவாஜி போன்றவர்கள் படையெடுத்தனர்.
இப்போது யாரும் படையெடுக்க முடியாது.
தற்போது நடப்பது முடியாட்சி அல்ல குடியாட்சி.எனவே இங்கு மக்களாட்சி நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
எனவே அதில் கவர்னர் பெயரை அகற்ற சொல்லியுள்ளோம்..
பொது தணிக்கை குழு, வழங்கிய பட்டியலின் அடிப்படையில், கடந்த காலங்களில் எவ்வளவு செலவு செய்யப்பட்டுள்ளது.
விரைய செலவு,காலதாமதத்தை தவிர்க்க வேண்டும்.
உலக வங்கிகளில் வட்டிக்கு தான் கடன் வாங்கிறோம்.
திட்டத்திற்கான பணத்தை எடுத்து செலவு செய்யாமல் இருப்பதை தவிர்க்க ஆய்வு செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சட்டப்பேரவை பொது கணக்கு குழுவினர் அரசு ராசா மிராசுதார் மருத்துவமனை உள்பட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.






