என் மலர்
சிவகங்கை
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சீனீவாசன், கோவில் அர்ச்ச கர். இவரது மனைவி உஷா.
தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் திரு வேந்திபுரத்தில் நடை பெற்ற கோவில் கும்பாபிஷேகத் தில் பங்கேற்பதற்காக, உஷா குடும்பத்தினருடன் சென்று விட்டார்.
இந்த நிலையில் அவர் களது வீட்டு வேலைக்காரப் பெண் சந்திரா, வாசல் தெளிப்பதற்காக சென்றுள் ளார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சீனீவாசனுக்கு தக வல் கொடுத்தார்.
இதுகுறித்து தேவ கோட்டை நகர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன் பக்க மரக்கதவு கடப் பாரையால் உடைத்து திறக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந் தன.
இதற்கிடையில் சீனீ வாசன் அவரது மனைவி உஷா ஆகியோர் வீடு திரும் பினர். அவர்கள் திருட்டு பயம் காரணமாக 29 பவுன் நகைகளை துணி யில் சுற்றி பீரோவில் மறைத்து வைத்திருந்ததாக கூறினர். ஆனால் அதனை காண வில்லை.
எனவே வீடு புகுந்த கொள்ளையர்கள் 29 பவுன் நகையை கொள்ளையடித் துச் சென்றிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்? அவர்களுக்கு யாராவது உதவி செய்தார்களா? வீட்டில் துணியில் நகை சுற்றி வைத்திருந்தும் அதனை எடுத்துச் சென்றது எப்படி? இதுபற்றி யாராவது தகவல் கொடுத்தார்களா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.
மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் (வயது 19). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் (19) அவரை ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார்.
அதற்கு கார்த்திக் ஓரமாக செல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை போலீசார் அங்கு விரைந்து சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்த கார்த்திக், கலைவாணன், விஜயகுமார், செல்வகுமார், சிவகுமார், ராஜா, சூர்யா, அய்யாச்சாமி, முத்துகுமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சிவகங்கை:
சிவகங்கை நகர் மானாமதுரை சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் கருப்பையா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன், ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.
அப்போது ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 5,500 இருந்தது. காரில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தோல் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பாளர் பாபுலால் மகன் சேத்தன்குமார் (வயது35) இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காண்பித்த ஆவணங்கள் முரண்பாடாக இருந்தது.
எனவே பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்திட ஆர்.டி.ஓ. அரவிந்தன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.
தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).
இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.
இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர்.
மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர்.
மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.






