என் மலர்tooltip icon

    சிவகங்கை

    கோவில் அர்ச்சகர் வீட்டின் கதவை உடைத்து மர்ம மனிதர் கள் 29 பவுன் நகையை கொள்ளையடித்துச் சென்றனர்.

    தேவகோட்டை:

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை காமாட்சி அம்மன் நகரைச் சேர்ந்தவர் சீனீவாசன், கோவில் அர்ச்ச கர். இவரது மனைவி உஷா.

    தனது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் திரு வேந்திபுரத்தில் நடை பெற்ற கோவில் கும்பாபிஷேகத் தில் பங்கேற்பதற்காக, உஷா குடும்பத்தினருடன் சென்று விட்டார்.

    இந்த நிலையில் அவர் களது வீட்டு வேலைக்காரப் பெண் சந்திரா, வாசல் தெளிப்பதற்காக சென்றுள் ளார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், சீனீவாசனுக்கு தக வல் கொடுத்தார்.

    இதுகுறித்து தேவ கோட்டை நகர் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீ சார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் முன் பக்க மரக்கதவு கடப் பாரையால் உடைத்து திறக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. மேலும் வீட்டின் பீரோவில் இருந்த துணிகள் வீடு முழுவதும் சிதறி கிடந் தன.

    இதற்கிடையில் சீனீ வாசன் அவரது மனைவி உஷா ஆகியோர் வீடு திரும் பினர். அவர்கள் திருட்டு பயம் காரணமாக 29 பவுன் நகைகளை துணி யில் சுற்றி பீரோவில் மறைத்து வைத்திருந்ததாக கூறினர். ஆனால் அதனை காண வில்லை.

    எனவே வீடு புகுந்த கொள்ளையர்கள் 29 பவுன் நகையை கொள்ளையடித் துச் சென்றிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை பதிவு செய்தனர். இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையர்கள் யார்? அவர்களுக்கு யாராவது உதவி செய்தார்களா? வீட்டில் துணியில் நகை சுற்றி வைத்திருந்தும் அதனை எடுத்துச் சென்றது எப்படி? இதுபற்றி யாராவது தகவல் கொடுத்தார்களா என்பது போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின் றனர்.

    மானாமதுரை அருகே கோஷ்டி மோதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    மானாமதுரை:

    மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் கார்த்திக் (வயது 19). சம்பவத்தன்று இவர் அந்த பகுதியில் சாலையில் செல்போன் பேசியபடி நடந்து சென்றுள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த அதே கிராமத்தைச் சேர்ந்த விஜய் (19) அவரை ஓரமாக செல்லுமாறு கூறியுள்ளார்.

    அதற்கு கார்த்திக் ஓரமாக செல்ல முடியாது என்று தெரிவித்தார். இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இந்த பிரச்சினையில் இருதரப்பினரும் கோஷ்டியாக மோதிக் கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த மானாமதுரை போலீசார் அங்கு விரைந்து சென்று கோஷ்டி மோதலில் ஈடுபட்ட இருதரப்பைச் சேர்ந்த கார்த்திக், கலைவாணன், விஜயகுமார், செல்வகுமார், சிவகுமார், ராஜா, சூர்யா, அய்யாச்சாமி, முத்துகுமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.

    மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    உரிய ஆவணம் இல்லாததால் சென்னை தொழில் அதிபரிடம் ரூ.2½ லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    சிவகங்கை:

    சிவகங்கை நகர் மானாமதுரை சாலையில் தேர்தல் கண்காணிப்புக்குழு அலுவலர் கருப்பையா, சிறப்பு சப்–இன்ஸ்பெக்டர் சவுந்திரராஜன், ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள்.

    அப்போது ராமநாதபுரத்திலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.2 லட்சத்து 5,500 இருந்தது. காரில் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த தோல் உற்பத்தி பொருட்கள் தயாரிப்பாளர் பாபுலால் மகன் சேத்தன்குமார் (வயது35) இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் காண்பித்த ஆவணங்கள் முரண்பாடாக இருந்தது.

    எனவே பணத்தை கருவூலத்தில் ஒப்படைத்திட ஆர்.டி.ஓ. அரவிந்தன் உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கருவூலத்தில் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    தேவகோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).

    இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

    கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.
    சிவகங்கை

    சிவகங்கை தனியார் மண்டபத்தில்  ெதாழிலாளர் நலத்துறையின் சார்பில்   728 கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.12.6 லட்சம் மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    கட்டுமானத் தொழி லாளர்கள் நலவாரியத்தின் தலைவர் பொன்.குமார் முன்னிலை வகித்தார். விழாவில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் கலந்து கொண்டு கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

    விழாவில் அவர் பேசுகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்ற அடிப்படையில், தமிழகத்தில் ஏழை எளிய அடித்தட்டு மக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.குறிப்பாக தொழிலாளர் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியம், அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவா ரியம் ஆகியவைகளில் பதிவு செய்யப்பட்ட தொழி லாளர்களின் நலன் கருதி, அவர்களை பயன்பெற செய்யும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்.

    சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 37 ஆயிரத்து 139 கட்டுமானத் தொழிலாளர்கள் கட்டுமான நலவாரியத்தின் கீழ் பதிவு செய்துள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் 28 ஆயிரத்து 401 தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா நல வாரியத்தில் புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும், 13 ஆயிரத்து 402 பதிவு பெற்ற அமைப்புச்சாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ. 5 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 600 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

    தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள், சமூக பாதுகாப்பு மற்றும் நல வாரியத்தினை சார்ந்த தொழிலாளர்கள் ஆகியோர் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நலத்திட்டங்களை அறிந்து கொண்டு, அதன் மூலம் பயன்பெற்று, வாழ்வில் வளம் பெற வேண்டும் என்றார். 

    விழாவில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன்,   ஆவின் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய தலைவர்  சேங்கைமாறன், ஊராட்சி ஒன்றியக் குழுத்தலைவர் மஞ்சுளா பாலசந்தர், சிவகங்கை நகர்மன்றத் தலைவர் துரைஆனந்த், ஒன்றியக்குழு உறுப்பினர் ஆரோக்கிய சாந்தாராணி, நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன், காஞ்சி ரங்கால் ஊராட்சி மன்றத்த லைவர் மணிமுத்து, தொழி லாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் கோட்டீ ஸ்வரி, ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், சிவகங்கை வட்டாட்சியர் தங்கமணி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
    திடக்கழிவு விழிப்புணர்வு பேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார்.
    மானாமதுரை

    சிவகங்கை  மாவட்டம்  மானாமதுரை  சட்டமன்ற  தொகுதியில் உள்ள இளை யான்குடி  பேரூராட்சியில்  உள்ள தெருக்களில் வீடு, வீடாக திடக்கழிவுகளை தரம் பிரித்து வழங்க  குடியிருப்பு தாரர்களுக்கு   விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.  

    பேரூராட்சிதலைவர் செய்யதுஜமிமா தலைமை யில் மன்ற  உறுப்பினர்கள்,  செயல் அலுவலர் கோபிநாத்  மற்றும் சுகாதர  ஆய்வாளர்  அலுவலக பணியாளர்கள்   ஆகியோர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

    சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கியவர்களுக்கு   பரிசுகள் வழங்கி விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்பட்டது.  மேலும் பிளாஸ்டிக்கை ஒழித்து  முதல்வரின் மஞ்சப்பை திட்டத்தை மீண்டும் கொண்டு வந்து  வருங்கால சந்ததியினருக்கு சுகாதாரமான சூழ்நிலையை ஏற்படுத்தித் தர முயற்சி செய்வோம் என்று விழிப்புணர்வு பிரசாரம்  செய்யப்பட்டது.

    தொடர்ந்து மக்களி டையே இது குறித்து விழிப்புணர்வு ஏற்படு த்தி  பிளாஸ்டிக்கை ஒழித்து மண்வளத்தை  பாதுகாக்க வேண்டும் எனபேரூராட்சி தலைவர் செய்யதுஜமிமா பொதுமக்களிடம் பிரசாரம்செய்தார். 
    மோட்டார் சைக்கிள் மோதி மூதாட்டி படுகாயமடைந்தார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள கண்ணமங்கலத்தை சேர்ந்தவர்  பாலம்மாள் (வயது 62). இவர் இளையான்குடி அருகே சாலையில் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த மணி என்பவர் ஓட்டிவந்த இருசக்கர வாகனம் மூதாட்டி மீது எதிர்பாராத விதமாக மோதியது. 

    இதில் படுகாயமடைந்த மூதாட்டி சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  

    இந்த விபத்து குறித்து இளையான்குடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஒட்டகத்தில் மணல் கடத்தியவர் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சிவகங்கை

    லாரி, டிப்பர், டிராக்டர் மூலம்  மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியா சமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர். 

    மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார். 

    நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவ மங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டி யில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர். 

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்த மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.
    லாரி, டிப்பர், டிராக்டர் மூலம் மணல் கொள்ளை கேள்விபட்டிருப்போம் ஆனால் இங்கு வித்தியாசமாக ஒட்டகத்தை வரவழைத்து மணல் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே மறவமங்கலத்தில் ஒட்டகத்தை மாட்டுவண்டியில் கட்டி மணல் கடத்தி போலீசார் வந்தவரிடம் பறிமுதல் செய்துள்ளனர்.

    மறவமங்கலம் அருகே பல்லாக்கோட்டை சரவணன் (வயது 52). இவர் சவுதி அரேபியாவில் பணிபுரிந்தார். கடந்த 2 மாதத்திற்கு முன் சொந்த ஊருக்கு வந்தார். அப்போது ராஜஸ்தானில் இருந்து ஆண் ஒட்டகம் ஒன்றை வாங்கி வந்து வளர்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவு காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் பாண்டி மற்றும் போலீசார் மறவமங்கலம் பஸ் நிலையத்தில் ரோந்தில் ஈடுபட்டனர். அப்போது மாட்டு வண்டியில் ஒட்டகத்தை கட்டி நாட்டாறு ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்ததை பார்த்தனர்.

    மணல் கடத்தி வந்த மாட்டு வண்டி மற்றும் ஒட்டகத்தை பறிமுதல் செய்து மறவமங்கலம் புறக்காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்.

    மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதிகளில் நடந்த கருணாநிதி பிறந்த நாள் விழாவில் தமிழரசி எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருப்புவனம், இளையான்குடி பகுதி களில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள் விழாவை தி.மு.க.வினர்  கொண்டாடினர். 

    திருப்புவனத்தில் நடந்த   பிறந்த நாள் விழாவில்  கருணாநிதி படத்திற்கு தி.மு.க.வினர் மாலைகள் அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.  பொதுமக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.  

    நிகழ்ச்சிக்கு சிவகங்கை மாவட்ட தி.மு.க. துணைச் செயலாளரும், திருப்புவனம் பேரூராட்சி  தலைவருமான சேங்கைமாறன் தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் வசந்தி சேங்கைமாறன், கடம்பசாமி, நாகூர்கனி, ஊராட்சி ஒன்றிய தலைவர் சின்னையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

    மானாமதுரை நகரில் தி.மு.க.வினர் ஊர்வலமாக  சென்று பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி  படத்திற்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.   பொதுமக்களுக்கு இனிப்பு  வழங்கப்பட்டது. 

    இதில் மானாமதுரை நகர்மன்ற  தலைவர் மாரியப்பன்கென்னடி,  ஒன்றிய தலைவர் லதா அண்ணாதுரை, துணைத் தலைவர் பாலசுந்தரம்,   கவுன்சிலர்  சதீஷ்குமார் உள்ளிட்ட  நிர்வாகிகள்,ந கராட்சி வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    மானாமதுரை   அண்ணா சிலை பகுதியில் கருணாநிதி படத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி மலர் தூவி கேக் வெட்டி பொது மக்களுக்கு வழங்கினார்.  இளையான்குடி ஒன்றியம்  தாயமங்கலம்  கிராமத்தில் மாற்றுதிறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டியை தமிழரசி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். 

    அங்கு வசிக்கும் நரிகுறவர் இனமக்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தி பரிசுகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.  பல கிராம ங்களில் கருணாநிதி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு   கொடி  ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு-நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.  

    இந்த நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப. மதியரசன், கண்ணமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க  தலைவர் சுப. தமிழரசன், மாநில மாற்றுதிறனாளிகள் நலவாரிய உறுப்பினர் புஷ்ப ராஜ்,  சிப்காட் காளியப்பன், தாயமங்கலம் தி.மு.க.  செயலாளர்  சக்தி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    திருப்பத்தூரில் நடந்த கருணாநிதி பிறந்தநாள் விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்த தினத்தை முன்னிட்டு 3 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. 

    இதில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருப்பத்தூர் யூனியன் சேர்மன் சண்முகவடிவேல் வரவேற்றார். 

    விழாவில் திருப்பத்தூர் பேரூராட்சி சேர்மன் கோகிலாரணி நாராயணன், பேரூராட்சி கவுன்சிலர்கள் நேரு, அபுதாஹிர், சரண்யா ஹரி, சமீம் நவாஸ், பிளாசா ராஜேஸ்வரி சேகர், கோமதி சண்முகம், ரெமி சுலைமான் பாதுஷா, சாந்தி சோமசுந்தரம், பாண்டியன் மற்றும் யூனியன் கவுன்சிலர் சகாதேவன், முன்னாள் பேரூராட்சி சேர்மன் சாக்ளா, முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர்கள் சி.பி.எம்.பிச்சை, மீரா, பேச்சாளர் ஷாஜகான்,  தம்பி பட்டி வைரமணி மற்றும் பலர் பங்கேற்றனர். நகர செயலாளர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.
    திருப்பத்தூரில் பைக் மீது லாரி மோதிய விபத்தில் கப்பல் என்ஜினீயர் பலியானார்.
    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காட்டாத்தாங்குடியைச் சேர்ந்த சுப்பிரமணியன்   மகன் பாரத் (23). இவர் கேரள மாநிலம் கொச்சியில் கப்பல் என்ஜீனி யராக பணிபுரிந்தார். 

    விடுமுறையை அடுத்து இவர் சொந்த ஊரான காட்டாத்தங்குடிக்கு 2 நாட்களுக்கு முன்பு வந்தார். இன்று கோவி லுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு  பைக்கில் திருப்பத்தூர் வந்தார்.   

    திருப்பத்தூரில் புதுக்கோட்டை சாலை தங்கமணி தியேட்டர் அருகில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே வந்த டிப்பர் லாரி பைக் மீது மோதியது.இதில் தலையில் பலத்த காயமடைந்த பாரத்,  ஆபத்தான நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அனுமதிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் விபத்தில் காயமடைந்த வர்களுக்கு   சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் இல்லாமல் உயிரிழப்பு அதிகம் ஏற்படுகிறது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
    ×