search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விபத்து
    X
    விபத்து

    கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்து- கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலி

    தேவகோட்டை அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதி விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 3 பேர் பலியாகினர்.
    தேவகோட்டை:

    தேவகோட்டை அருகே உள்ள கொசவக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த சோனை முத்து மகன் பசுபதி (வயது26), அதே கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் முத்து, புதுக்கோட்டை மாவட்டம் பொண்ண மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த கோட்டைராஜ் மகன் மகாலிங்கம் என்ற அருண் (24).

    இவர்கள் 3 நபர்களும் காரைக்குடியிலிருந்து கொசவக்கோட்டை கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். திருச்சி-ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் சடையன்காடு அருகே வரும் பொழுது எதிரே காரைக்குடியை சேர்ந்த என்ஜினீயர் அப்துல்அஜீத் என்பவர் ஓட்டிவந்த காரும் மோட்டார் சைக்கி ளும் நேருக்கு நேர் மோதிக்கொண்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே பசுபதி, மகாலிங்கம் என்ற அருண் ஆகியோர் பலியாகினர். உயிருக்கு ஆபத்தான நிலையில் முத்து மதுரை அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டார். என்ஜினீயர் அப்துல் அஜித் காரைக்குடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த நிலையில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த முத்து இன்று அதிகாலை பரிதாபமாக இறந்தார். இதன் மூலம் விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுகா ஆய்வாளர் சுப்பிர மணியன் ஆறாவயல் சார்பு ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    தேசிய நெடுஞ்சாலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் தொடர் வாகன விபத்து நடந்து வரும் சூழலில் நேற்று நடந்த வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே இரண்டு பேர் பலியானது குறித்து காரைக்குடி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் இன்று காலை வாகன தணிக்கையில் ஈடுபட்டு அதிவேகத்தில் வரும் வாகனங்களுக்கு அபராதம் விதித்தார்.

    Next Story
    ×