என் மலர்
சிவகங்கை
திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் கவியரசு (வயது 24), ஹோமியோபதி டாக்டர். இவர் திண்டுக்கல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த கபிர் மகள் ஜன்னத்துல் ஷாகிரா (வயது 21), இவர் கதிரவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக காதலித்துவந்தனர்.
பின்னர் கவியரசு மதம் மாறி ஜன்னத்துல் ஷாகிராவை திருமணம் செய்து கொண்டார். மகன் மதம்மாறி திருமணம் செய்து கொண்டதிற்கு கதிரவனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் நேற்றிரவு ஜன்னத்துல் ஷாகிரா, தனது கணவருடன் திருப்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தார்.
இதையடுத்து போலீசார் கதிரவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
திருப்பத்தூர் அருகே உள்ள மடவாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் உள்ள கழிவறைக்கு போதுமான தண்ணீர் வசதி இல்லை. கழிவறைக்கு செல்லும் மாணவிகள் தொற்று வியாதிகளால் அவதியடைந்து வருகின்றனர்.
இதனால் கழிவறை பயன்படுத்த முடியாதநிலையில் உள்ளது.
பள்ளி கழிவறையை சுகாதாரமாக வைத்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வி அதிகாரிகளுக்கு மாணவிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனை கண்டித்து இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பள்ளிக்கு பூட்டு போட்டு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதனால் பள்ளியில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் உலகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மழை காரணமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டதால் மாணவிகள் காலை பள்ளிக்கு வரவில்லை .
ஆனால் அறிவித்தபடி விடுதலை சிறுத்தைகள்கட்சி மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் கட்சியினர் பள்ளி முன்பு திரண்டனர்.
திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை மற்றும் போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இன்று காலை வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு புறப்பட்டனர்.
காரைக்குடியில் உள்ள ரெயில்வே ஜி.ஹெச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டார். அவர் முன் ரேவதி பஸ் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து காரைக்குடி சூடாமணி புரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஜேம்ஸ் (49) என்பவரை கைது செய்தார்.
மானாமதுரை:
மானாமதுரை அருகேயுள்ள பாரதி நகரைச் சேர்ந்தவர்கள் மூர்த்தி (47). முருகன் (46), சகோதரர்களான இவர்கள் இருவரும் மொபட்டில் மானாமதுரைக்கு புறப்பட்டனர்.
மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலையில் மானாமதுரை எல்லையில் நகருக்குள் செல்லும் சாலையில் செல்ல முயன்றனர்.
அப்போது ராமேசுவரத்தில் இருந்து மதுரை நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மொபட் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் மொபட்டில் பயணம் செய்த சகோதரர்களான மூர்த்தியும், முருகனும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மானாமதுரை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். விபத்தில் பலியான இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து காரணமாக அந்தப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் மருது சகோதரர்கள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியபின் நடிகரும், திருவாடனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான கருனாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாமன்னர்கள் மருது பாண்டியர்கள் வீரத்திற்கு தலைவணங்குகிறேன். ஆழ்துளைக்குள் சிக்கி தவிக்கும் குழந்தை சுர்ஜித்தை மீட்கும் பணியில் தமிழக அரசை குறை சொல்ல முடியாது.

வின்வெளிக்கு ராக்கெட் அனுப்பும் நிலையில் போர் வெல்லில் விழுந்த குழந்தைகளை மீட்க போதுமான கருவிகள் இல்லை என்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்குமான அவமானம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுண் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்களின் விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கவும், அதை வெளிக்கொணரவும் அம்மா இளைஞர் விளையாட்டுத் திட்டம் என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்த திட்டதின்படி, அனைத்து கிராம ஊராட்சிகள் மற்றும் டவுண் பஞ்சாயத்துகளில் இருபாலருக்கும் தனி தனியாக அம்மா இளைஞர் விளையாட்டுக் குழு அமைக்கப்படும்.
ஒவ்வொரு கிராமத்திலும் கபடி, வாலிபால் மற்றும் கிரிக்கெட் (அல்லது) பூப்பந்து (அல்லது) இதர விளையாட்டுகள், இவற்றில் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு மைதானம் அமைக்கப்படும். மேலும், இளைஞர்களுக்கு போதிய பயிற்சி அளித்து ஊராட்சி ஒன்றிய, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
அதன்படி போட்டியில் கலந்து கொள்ள 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தகுதி உடையவர். போட்டியில் கபடி அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், வாலிபால் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும், கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் அணியில் குறைந்தபட்சம் 17 நபர்களும் (இருபாலரும்) கலந்து கொள்ளலாம்.
எனவே, சிவகங்கை மாவட்டத்தில் 445 கிராம ஊராட்சிகளிலும், 12 டவுண் பஞ்சாயத்துகளிலும் உள்ள இளைஞர்கள் கபடி, வாலிபால் கிரிக்கெட் அல்லது பேட்மிண்டன் ஏதேனும் மூன்று விளையாட்டுகளுக்கு அந்தந்த கிராம ஊராட்சி செயலாளர்கள் மற்றும் டவுண் பஞ்சாயத்து செயலாளர்களிடம் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும், விபரங்களுக்கு 7401703503 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, விபத்து நிவாரணம் கோருதல், பசுமை வீடு கேட்டல், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கி கடன், மாவட்ட ஊனமுற்றோர் மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல், இலவச தையல் எந்திரம் வழங்க கேட்டல், ஆக்கிரமிப்பு அகற்ற கேட்டல், பட்டா ரத்து தொடர்பான மேல்முறையீடு, மின் இணைப்பு தொடர்பான மனுக்கள் உள்ளிட்ட 195 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.
கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை கோரி மனுக்கொடுத்த 2 பேருக்கு உடனடி நடவடிக்கை எடுத்து முதியோர் உதவித்தொகைக்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார். மற்ற மனுக்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், தனித்துணை கலெக்டர் காளிமுத்தன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன் உள்பட அனைத்துத்துறை அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொன்னகுளம் கிராம பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது:- எங்கள் கிராமத்து இளைஞர்கள் ஒன்றாக இணைந்து மரக்கன்றுகள் நட திட்டமிட்டுள்ளோம். எனவே அரசுக்கு சொந்தமான இடத்தில் மரக்கன்றுகள் நட அனுமதியளிக்க வேண்டும். அத்துடன் அரசு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி அங்கு மரக்கன்றுகளை நடுவதற்கு உதவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியிருந்தனர். இதே போல தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரிய மாவட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொது செயலாளர் சேவியர் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் செயல்படும் ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் சிவகங்கை மாவட்ட எல்கையான நெற்குப்பையில் இருந்து இளையான்குடி, தாலுகாவாணி உள்ளிட்ட பகுதிகளில் 48 குடிநீர் நீரேற்று நிலையங்கள் உள்ளன.
இந்த பகுதியில் 24 மணி நேரமும் திட்ட பணிகளை செயல்படுத்த சுமார் 159 ஊழியர்கள் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக குறைவான எண்ணிக்கையில் சுமார் 81 தொழிலாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இவர்களுக்கும் மிக குறைவான ஊதியம் தரப்படுகிறது.
எனவே இவர்களுக்கு குடிநீர் வாரிய நிர்ணயத்தின்படி ஒரு ஊழியருக்கு மாத சம்பளமாக ரூ.13 ஆயிரத்து 350 வழங்க வேண்டும் அத்துடன் தீபாவளி போனசாக ஒருமாத சம்பளம் வழங்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறியிருந்தனர்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியதை முன்னிட்டு மாநிலம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் கன்னியாகுமரியையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள வளி மண்டல சுழற்சி காரணமாக சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த வாரம் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வந்தது. நேற்று மாலையில் ஒரு சில இடங்களில் கனமான முதல் மிதமான மழை பெய்தது. இரவு 12 மணி முதல் மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்தது.
5 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித்தீர்த்த கனமழையால் சிவகங்கை நகர், காளையார்கோவில், தேவகோட்டை, காரைக்குடி, மானாமதுரை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
முக்கிய சாலைகளில் மழைநீர், வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் மின்தடையும் ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின்னர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இன்று காலையும் இடைவிடாது சாரல் மழை பெய்ததால் சிவகங்கை மாவட்டத்தில் இன்று ஒருநாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டது. கல்லூரிகள் வழக்கம் போல் செயல்பட்டன.
சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் மில்லி மீட்டரில் வருமாறு:-
சிவகங்கை-5.9
திருப்புவனம்-12.4
தேவகோட்டை-33.2
சிங்கம்புணரி-2.4.






