search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    திருப்பத்தூர் போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

    திருப்பத்தூர் அருகே மதம்மாறி திருமணம் செய்த காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த சின்னாரம்பட்டையை சேர்ந்தவர் முருகன் மகன் கவியரசு (வயது 24), ஹோமியோபதி டாக்டர். இவர் திண்டுக்கல் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவரது ஆஸ்பத்திரிக்கு திண்டுக்கல்லை சேர்ந்த கபிர் மகள் ஜன்னத்துல் ஷாகிரா (வயது 21), இவர் கதிரவன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு வந்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு பின்பு காதலாக மாறியது. கடந்த சில மாதங்களாக காதலித்துவந்தனர்.

    பின்னர் கவியரசு மதம் மாறி ஜன்னத்துல் ஷாகிராவை திருமணம் செய்து கொண்டார். மகன் மதம்மாறி திருமணம் செய்து கொண்டதிற்கு கதிரவனின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனால் நேற்றிரவு ஜன்னத்துல் ஷாகிரா, தனது கணவருடன் திருப்பத்தூர் போலீஸ் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு பாதுகாப்பு வழங்குமாறு மனு அளித்தார்.

    இதையடுத்து போலீசார் கதிரவனின் பெற்றோரை அழைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
    Next Story
    ×