என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காரைக்குடி அருகே விபத்து - கணவன் கண்முன்பு மனைவி பலி
Byமாலை மலர்30 Oct 2019 8:04 AM GMT (Updated: 30 Oct 2019 8:04 AM GMT)
காரைக்குடி அருகே தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதிய விபத்தில் பஸ் டயரில் சிக்கி கணவன் கண்முன்பு மனைவி உயிரிழந்தார்.
காரைக்குடி:
இன்று காலை வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு புறப்பட்டனர்.
காரைக்குடியில் உள்ள ரெயில்வே ஜி.ஹெச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டார். அவர் முன் ரேவதி பஸ் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து காரைக்குடி சூடாமணி புரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஜேம்ஸ் (49) என்பவரை கைது செய்தார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி கழனிவாசல் பகுதியில் உள்ள பாரதியார் தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது 35). இவரது மனைவி ரேவதி (30). 2 பேரும் கட்டிட வேலைக்கு சென்று வருகின்றனர். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இன்று காலை வழக்கம் போல கணவன்-மனைவி இருவரும் மோட்டார் சைக்கிளில் கட்டிட வேலைக்கு புறப்பட்டனர்.
காரைக்குடியில் உள்ள ரெயில்வே ஜி.ஹெச் ரோட்டில் சென்று கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் பள்ளி பஸ் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சண்முகம் தூக்கி வீசப்பட்டார். அவர் முன் ரேவதி பஸ் டயரில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்த தகவலறிந்த காரைக்குடி வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரேவதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் தினேஷ் வழக்குப்பதிவு செய்து காரைக்குடி சூடாமணி புரத்தைச் சேர்ந்த தனியார் பஸ் டிரைவர் ஜேம்ஸ் (49) என்பவரை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X