என் மலர்
சிவகங்கை
சிவகங்கை கலெக்டர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட பணிகளை மேற்கொண்டு செயல்பட்டு வருகின்றது. அதனடிப்படையில் சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்புகள் எதுவும் இல்லை.
இருந்தபோதிலும் வருங்காலங்களிலும் இந்த வைரஸ் பரவாமல் இருக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக, கிராமப்பகுதிகளை முழுமையாக கண்காணிக்க வேண்டும் என்ற அடிப்படையில் பொதுசுகாதாரத்துறையுடன் வருவாய்த்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து செயல்பட்டு வரும் நிலையில் அங்கன்வாடி பணியாளர்களும் இணைந்து செயல்பட வேண்டும்.
குறிப்பாக வெளிநாட்டிற்கு பணிக்கு சென்றவர்களில் அதிகமானவர்கள் கிராம பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் வருகை குறித்து அங்கு வசிக்கும் உங்களை போன்ற பணியாளர்களுக்குத்தான் நன்றாக தெரியும்.
அவ்வாறு வெளிநாட்டிலிருந்து மார்ச் 1-ந்தேதிக்கு பிறகு வந்தவர்கள் பதிவு செய்தவர்கள் போக மீதமுள்ளவர்கள் யாரேனும் இருந்தால் உடனடியாக அருகாமையிலுள்ள சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு தெரிவித்து பதிவு செய்ய வேண்டும்.
மேலும், அவ்வாறு வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் என்பதை கண்டறிந்து மருத்துவ கண்காணிப்பில் இருக்க ஏதுவாக அவர்கள் வீட்டின் முகப்பில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். ஸ்டிக்கர் ஒட்டப்பட்டவுடன் அந்த வீட்டு நபர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இதன் நோக்கம் எல்லோரையும் பாதுகாக்க வேண்டும் என்பதேயாகும்.
பொதுவாக வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து வந்தாலும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெளியில் இருந்து வந்த நபர்களுக்கு 14 நாட்களுக்கு பிறகுதான் அதன் அறிகுறி தெரியும். எனவே பாதுகாப்பு நலன் கருதி தனிமைப்படுத்துவதை பொருட்படுத்தாமல் ஒத்துழைப்பு கொடுத்து எல்லா பரிசோதனை செய்து ஒவ்வொரையும் பாதுகாத்து கொள்ள வேண்டும்.
இந்த வைரஸ் ஒருவருக்கு இருந்தால் அடுத்தவருக்கு எளிதாக பரவும் என்பதால் அரசு வழங்கும் விதிமுறைகளை கடைப்பிடித்து சுகாதார முறைகளை பின்பற்றி செயல்பட்டு ஒவ்வொருவரும் வைரஸ் தாக்குதலிருந்து பாதுகாத்து கொள்ள வேண்டும். யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு கிடையாது. மேலும் வராமல் இருக்க பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மத்திய-மாநில அரசு அறிவுரையின்படி வருகிற 31-ந்தேதி வரை பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். கூடுமானவரை வீட்டிலேயே இருப்பது நல்லது.
அதேபோல் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள பொது மக்கள் தங்கள் பகுதிகளில் யாரேனும் வெளிநாட்டில் இருந்து வந்தால் உடனடியாக வருவாய்துறை அல்லது சுகாதாரத்துறை பணியாளரிடம் பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வெளிநாட்டில் இருந்து வந்த அனைவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்ற நிலை இல்லை. இருந்தபோதிலும் மருத்துவ பரிசோதனை என்பது தன்னை பாதுகாத்துக்கொள்ள மட்டுமின்றி உறவினர்களையும் பாதுகாத்துக்கொள்ள பயனுள்ளதாக இருக்கும்.
சிவகங்கை மாவட்டம் முழுவதும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதிக அளவில் பொதுமக்கள் கூடாத வண்ணம் பார்த்துக் கொள்வதுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை தொடங்கப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவக்குழு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பொதுமக்கள் ஏதேனும் தகவல் தெரிவிக்க விரும்பினால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் தகவல் தெரிவிக்கலாம்.
அதேபோல் காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்கள் அரசு வாகனங்களில் வராமல் சுகாதாரத்துறை பணியாளருக்கு தெரிவித்து 108 வாகனம் மூலம் வரவேண்டும்.
பொதுவாக இரண்டு வார காலத்திற்கு அவரவர் சொந்த வாகனங்களில் பயணிப்பது மிக நன்று. மருத்துவத்துறையின் மூலம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி தலைமை மருத்துவமனையில் 100 படுக்கைகள் கொண்ட மருத்துவ வசதிகள் தயார் நிலையில் உள்ளது.
மேலும் காரைக்குடி, தேவகோட்டை மற்றும் சிவகங்கை நகர் பகுதிகளில் புதிய கட்டிடங்கள் கண்டறிந்து தேவைக்கு ஏற்ப மருத்துவ சிகிச்சைக்கான படுக்கை வசதிகள் உருவாக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.
தற்போது வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, பேரூராட்சித்துறை, நகராட்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து தங்கள் பகுதிக்கு உட்பட்ட இடங்களில் தூய்மை பணிகளை மேற்கொள்வதுடன் பொதுமக்களின் சரா சரி நிலைமையும் கண்காணித்து காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனுக்குடன் மருத்துவக்குழுவிற்கு தெரிவித்து உரிய சிகிச்சை வழங்க உறுதுணையாக இருக்க வேண்டும்.
அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாவட்டமாக உருவாக்க முடியும். அதற்கு பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அதேபோல் பொதுமக்கள் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் தினந்தோறும் வெந்நீர் குடிக்க வேண்டும். முடிந்த அளவு வயதுக்கு ஏற்றாற்போல் மூச்சுப்பயிற்சி செய்து கொள்ள வேண்டும். மாவட்ட நிர்வாகம் முழு தயார் நிலையில் உள்ளது. யாரும் அச்சப்பட தேவையில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, பொது சுகாதாரத்துறை துணை இயக்குநர் யசோதா மணி, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேந்திரன் (தேவகோட்டை), சிந்து (சிவகங்கை), கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராமபிரதீபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள விபத்து சிகிச்சை பிரிவு மற்றும் மாவட்ட தொடக்கநிலை சேவை மையம் மற்றும் விரிவுரை அரங்கம் ஆகிய 3 கட்டிடங்களின் திறப்புவிழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை தாங்கினார். மருத்துவமனை டீன் டாக்டர் ரத்தினவேல் வரவேற்று பேசினார்.
இதில் அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்து கொண்டு புதிதாக கட்டப்பட்ட 3 கட்டிடங்களை திறந்து வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் லதா, அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மருத்துவ துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், துைண இயக்குனர்கள் யசோதாமணி, யோகவதி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஷீலா, மருத்துவ அலுவலர் மீனா, சிவகங்கை ஒன்றியத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், துைண தலைவர் கேசவன், அறங்காவலர் குழு தலைவர் மானாகுடி சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த ேபட்டியில் கூறியதாவது:- தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த விபத்து சிகிச்சை பிரிவு திறக்கப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது சிவகங்கையிலும் இந்த பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இது தவிர பள்ளி குழந்தைகளின் பிறவி குறைபாடுகளை கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மையமும் தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த 2012-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கல்லூரியில் இதுவரை பட்ட மேற்படிப்பு இல்லாமல் இருந்தது. தற்போது எம்.டி., எம்.எஸ். போன்ற படிப்புகள் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. அதைத்தொடர்ந்து வரும் கல்வி ஆண்டில் மத்திய அரசின் அனுமதியை பெற்று புதிய படிப்புகள் தொடங்கப்படும்.
இன்றைக்கு மிக பெரிய சவாலாக உள்ளது கொரோனா பிரச் சினை. தமிழகத்தை பொருத்தமட்டில் 45 வயது மதிக்கத்தக்க காஞ்சீபுரத்தை சேர்ந்த என்ஜினீயருக்கு கொரோனா அறிகுறி இருந்த நிலையில், அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு 2 கட்டமான பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பில்லை என்பது தெரியவருகிறது.
இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பப்பட உள்ளார். அதுமட்டுமில்லாமல் வெளிநாட்டில் இருந்து வந்து வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு என்னுடைய நேரடி கண்காணிப்பில் உள்ள 8 பேருக்கும், கொரோனா பாதிப்பு குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை, அவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கொரோனா பாதிப்பிற்கு சிகிச்சை அளிக்க தமிழகத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 330 படுக்கைகள் கொண்ட தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. இது தவிர தனியார் மருத்துவமனைகளிலும் இதுபோன்ற வசதிகளுடன் தனி வார்டுகள் ஏற்படுத்த நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் வெளியில் சென்று விட்டு வீடுகளுக்கு வந்தால் கைகழுவும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த வார்டில் 14 படுக்கை கொண்டதாகும். பாதிக்கப்பட்டவருக்கு உடனடி சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் சிலிண்டர், பல்டிபாரா மீட்டர், வென்டிலேட்டர் வசதி, முக கவசங்கள், டாக்டர்கள், நர்சுகள் பயன்படுத்தும் பிரத்யோக ஆடை கொரோனா வைரஸ் தாக்கிய நோயாளிகளைக் கவனிக்க டாக்டர்கள் மற்றும் நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கவனிக்க 24மணி நேரமும் தனியறையில் தங்கி கவனிக்க நர்சு பிரத்யேகஅறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் அரசு மருத்துவ அலுவலர் டாக்டர் திலீபன் கூறியதாவது:-
திருப்பத்தூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு யாருக்கும் இல்லை சீனாவில் இருந்த வந்த 9 பேர் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் வெளிநாடுகளில் இருந்த வந்த 23 பேர் தனிமைபடுத்தப்பட்டு அங்கேயே தொடர் கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்க திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனைத்து வசதிகளுடன் ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக கூடிய தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க தனியறை அவர்களை வெளியே கொண்டு செல்ல தனி வழி உள்ளது.
டாக்டர்கள் மற்றும் நர்சுகள் தினமும் பிரத்தியோக உடை ஒரு முறை பயன்படுத்தப்படும். பிறகு (அவர்கள் வீட்டுக்குச் செல்லும்போது கழட்டிப் போட்டுவிட்டு அழிக்க கூடிய வகையில்) தேவையான உடை உள்ளது. முக கவசம் தேவையான அளவு உள்ளது.
கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண் என்ஜினீயர் மேரிஜேன். இவரும் சிங்கப்பூரில் உள்ள அதே கம்பெனியில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதல் மலர்ந்தது. பின்னர் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்தனர்.
இந்த திருமணத்துக்கு நிர்வினின் பெற்றோர் சம்மதம் தெரிவித்து பச்சை கொடி காட்டினர். இதே போல் பிலிப்பைன்ஸ் பெண் மேரிஜேன் தரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தமிழ் காலசாரப்படி தமிழ் கடவுள் முருகப்பெருமானின் திருமண தலமான திருப்பரங்குன்றத்தில் திருமணத்தை நடத்த முடிவு செய்தனர். அங்குள்ள ஒரு மண்டபத்தில் குடும்பத்தினர், உறவினர்கள் முன்னிலையில் நேற்று திருமண விழா நடந்தது.
மணமகள் மேரிஜேன் பட்டு சேலை உடுத்தி இருந்தார். மூக்குத்தியும், காதுகளில் தோடு, ஜிமிக்கியும், காலில் கொலுசும் அணிந்து இருந்தார். மேரிஜேன் கழுத்தில் நிர்வின் தாலி கட்டி அவரை கரம் பிடித்தார். இதே போல் தமிழ் கலாசாரப்படி திருமண சடங்குகள் நடத்தப்பட்டன.
இதுகுறித்து மேரிஜேன் கூறும்போது, ‘எனக்கு எல்லாமே புதுமையாக இருக்கிறது, கடல் கடந்த காதல் கைகூடியதை நினைக்கையில் மகிழ்ச்சியாக உள்ளது’ என்றார்
நிர்வின் கூறுகையில், ‘தமிழ் கலாசாரம் மற்றும் இந்து முறைப்படி பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த என் காதலியை கரம் பிடித்து உள்ளேன். சிங்கப்பூரில் இருவரும் வேலை பார்த்தாலும் எதிர்காலத்தில் மானாமதுரையில் குடியேறுவோம்’ என்று கூறினார்.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காரைக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். தனது கட்சியில் மாற்று கட்சியினர் வந்து சேர்ந்தால் சட்டசபை தேர்தலில் 30 முதல் 35 சதவீதம் வாய்ப்பு அளிக்கப்படும் என்று அழைப்பு விடுக்கிறார்.
இது கட்சி தாவலை தூண்டுவதாகும். தனது அமைப்பில் திறமையானவர்கள் இல்லை என்பதை அவரே ஏற்றுக்கொள்கிறார்.
ரஜினிகாந்த் கட்சியை தொடங்கி அதன் கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
தேர்தல் நேரத்தில் கட்சிக்காக பணியாற்ற தேர்வு செய்யப்படுபவர்கள் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கிறார். கட்சி நல்ல முறையில் செயல்பட்டால் தானே ஆட்சி நீடிக்கும்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் ஏற்பதா? நிராகரிப்பதா? என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். ரஜினிகாந்த் தற்போது குழப்பத்தில் இருக்கிறார். அவரும் குழம்பி ரசிகர்களையும் குழப்பிக் கொண்டிருக்கிறார்.
தமிழ்நாட்டில் அரசியல் வெற்றிடம் உள்ளது என்ற ஏற்க முடியாத கருத்தை ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அரசியல் வெற்றிடம் எதுவும் தமிழகத்தை பொறுத்தவரை இல்லை.
கொரோனா வைரஸ் குறித்து செல்போன்களில் வரும் விளம்பரம் அருவெறுக்கத்தக்கதாக உள்ளதால் அதனை உடனடியாக கைவிட வேண்டும்.
கொரோனா நோய் பாதிப்பு விஷயத்தில் தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை போதுமானதாக இல்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
மதுரை:
நெல்லை-தாம்பரம் இடையே சிவகங்கை, விருதுநகர் வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதுதொடர்பாக மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அதிகாரி வீராசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
நெல்லை-தாம்பரம் இடையே அடுத்த மாதம் 2-ந்தேதி முதல் ஜூன் 25-ந்தேதி வரை வியாழக்கிழமை தோறும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.06036) இயக்கப்படுகிறது.
இது நெல்லையில் இருந்து மாலை 5.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.20 மணிக்கு தாம்பரம் செல்லும்.
இதேபோல் தாம்பரத்தில் இருந்து அடுத்த மாதம் 3-ந்தேதி முதல் ஜூன் 26-ந்தேதி வரை வெள்ளிக் கிழமை தோறும் புதிய எக்ஸ்பிரஸ் ரெயில்கள் (வண்டி எண்.06035) இயக்கப்படுகின்றன.
இது அன்றைய நாட்களில் தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட்டு மறு நாள் காலை 11 மணிக்கு நெல்லை செல்லும்.
மேற்கண்ட ரெயில்கள் சேரன்மகாதேவி, அம்பை, தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக் கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, விழுப்புரத்தில் நின்று செல்லும்.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் குறப்பட்டுள்ளது.
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில், கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மூலம் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பது தொடா்பாக முதலீட்டாளா்கள் மற்றும் ஜவுளித்தொழில் முனைவோர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
ஜவுளித்தொழில் என்பது பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் நிலையான தொழிற்கூடமாகும். தற்போது ஜவுளித்தொழிற்கூடங்களை நவீன தொழில்நுட்பத்துடன் செயல்படுத்திடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை மானிய உதவியுடன் வழங்கி வருகின்றது.
அதன்அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள ஜவுளி மையங்களில் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்காக்கள் அமைப்பதை ஊக்குவிக்கும் விதமாக, ஒருங்கிணைந்த ஜவுளிப்பூங்கா அமைக்க முன்வரும் தொழில் முனைவோருக்கு ரூ.2 கோடியே 50 லட்சம் வரை அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்களுக்கு 2 ஏக்கர் நிலம் இருந்தால் போதும். மூன்று நபர்கள் சேர்ந்து இந்த திட்டத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். சிவகங்கை மாவட்டம் தொழில் மையங்களை உருவாக்க ஏதுவான மாவட்டமாகும். தொழில் தொடங்குவதற்கு தேவையான பயிற்சி மற்றும் வங்கிக்கடன் வழங்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாவட்ட கைத்தறி மற்றும் துணிநூல்துறை உதவி இயக்குனர் ராகவன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மடிசியா தொழில் கூட்டமைப்பு சங்க முன்னாள் தலைவர் ஞானசம்பந்தம், காரியாபட்டி ஜவுளிப்பூங்கா கூட்டமைப்பு சங்கத்தலைவர் இளங்கோ, கைத்தறி துறை கண்காணிப்பு அலுவலர்கள் பாண்டி, ராஜேந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள், சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் இணைந்து நடந்தும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை பட்டாதாரிகளும், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கு பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில்நெறி ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 40 வயது வரையிலான வேலை நாடுபவர்கள் தங்களது முழுவிவரம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட மகளிர் திட்டத்தின் மூலம் உலக மகளிர் தினம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமை வகித்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மகளிர் குழுக் களுக்கு பரிசுகள் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
பெண்களின் சம உரிமை என்ற நிலை மாறி இன்றைக்கு ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கு அதிகளவு உள்ளது. குறிப்பாக பணிபுரியும் ஒவ்வொரு அலுவலகத்திலும் சரி, பள்ளிக் கல்லூரிகளிலும் சரி பெண்களே அதிகமாக பங்கேற்றுள்ளனர்.
அதற்கு காரணம் தன்னம்பிக்கை மற்றும் முன்னேற்றம். இவை இரண்டும் சரியான முறையில் கையாளப்பட்டு வருகிறது. பெண்களின் முன்னேற்றத்திற்காக அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது.
கிராமப்பெண்கள் முன்னேற்றம் பெற அரசு பல்வேறு நலத்திட்டங் களை வழங்கி வருகிறது. அதை உணர்ந்து கிராம பகுதியிலுள்ள பெண்கள் சுயஉதவிக் குழுவை பயன்படுத்தி பொருளாதாரம் பெற்றிட வழிவகுத்திட வேண்டும்.
ஒவ்வொரு ஆண்டும் உலக மகளிர் தின விழாவை கொண்டாடுவதன் நோக்கம் பெண்கள் முன்னேற்றத்தில் சிறந்து விளங்கிடவும் சாதனை படைத்திட வேண்டும் என்பதே ஆகும். அதை நிலை நிருத்தும் விதமாக பெண்கள் அரசின் திட்டங்களை பெற்று பயனடைந்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண் இயக்குநர் பழனீஸ்வரி, முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், மாவட்ட தொழில் மைய மேலாளர் கணேசன், வருவாய் கோட்டாட்சியர் (பொ) சிந்து, மாவட்ட சமூக நல அலுவலர் வசந்தா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் மேரிதபித்தாள் (சட்டம்), சாந்தி (ஊரக வளர்ச்சித் துறை) மற்றும் அரசு அலு வலர்கள், தொண்டு நிறுவன அமைப்புகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.






