என் மலர்
செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்
சிவகங்கை அருகே தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் 14-ந்தேதி நடக்கிறது
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் இணைந்து நடந்தும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் இணைந்து நடந்தும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை பட்டாதாரிகளும், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கு பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில்நெறி ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 40 வயது வரையிலான வேலை நாடுபவர்கள் தங்களது முழுவிவரம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்ககம் இணைந்து நடந்தும் தனியார் துறை சிறப்பு வேலைவாய்ப்பு முகாம் வருகிற 14-ந் தேதி நடைபெற உள்ளது.
சிவகங்கை மாவட்டம் காஞ்சிரங்காலில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளது.
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 50-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலை நாடுநர்களை தேர்வு செய்ய இருக்கின்றனர்.
முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு வரை படித்தவர்களும், ஐ.டி.ஐ, டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகளும், முதுகலை பட்டாதாரிகளும், இளங்கலை பட்டதாரி ஆசிரியர்கள், செவிலியர் மற்றும் லேப் டெக்னீசியன் கல்வித்தகுதியுடைய அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் இலவச திறன் மேம்பாடு பயிற்சிகளுக்கு பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெற உள்ளது. அயல்நாட்டு வேலை வாய்ப்புக்கு வழிகாட்டுதல், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் தொழில்நெறி ஆலோசனைகள், வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்குவதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் போன்றவற்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிவாய்ப்பு பெறுபவர்களுக்கு வேலைவாய்ப்பு பதிவுமூப்பு ரத்து செய்யப்படமாட்டாது. எனவே சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 18 முதல் 40 வயது வரையிலான வேலை நாடுபவர்கள் தங்களது முழுவிவரம், அனைத்து அசல் கல்விச்சான்றுகள், குடும்ப அட்டை, ஆதார் அட்டை மற்றும் மார்பளவு புகைப்படம் ஆகியவற்றுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ் தெரிவித்துள்ளார்.
Next Story






