என் மலர்
சிவகங்கை
பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
திருப்புவனம்:
திருப்புவனம் யூனியனை சேர்ந்த பூவந்தியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் பூவந்தியை சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 2008-ல் ஐ.எஸ்.ஓ. தரச் சான்று கிடைத்துள்ளது. மேலும் கடந்த ஏப்ரல் மாதத்தில் மாநில சுகாதாரத் துறையும் ஆய்வு மேற்கொண்டுள்ளது.
தற்போது மத்திய சுகாதாரத் துறையின் தேசிய தர உறுதிச் சான்று ஆய்வு குழு உறுப்பினர்கள் டாக்டர். அர்ச்சனா, டாக்டர். கமலேகர் பாட்டீயா ஆகியோர் கடந்த 2 நாட்களாக பூவந்தி அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் ஆய்வு செய்தனர். முன்னதாக அதிகாரிகளை சிவகங்கை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர். ராம்கணேஷ் வரவேற்றார்.
பின்பு தேசிய தர உறுதிச் சான்று குழுவினர் மருத்துவமனை வளாகத்தூய்மை, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை, அவசர சிகிச்சை பிரிவு, ரத்தப் பரிசோதனை கூடம், ஸ்கேன், எக்ஸ்ரே, இ.சி.ஜி. அறைகள், நோயாளிகள் வருகை பதி வேடுகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆய்வு செய்ததுடன் இதுகுறித்து விளக்கம் கேட்டு அறிந்தனர்.
தேசிய தர உறுதிச்சான்று குழுவினரிடம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சேதுராமு, டாக்டர்கள் ஸ்ரீகாந்த், வரதீஸ்வரி ஆகியோர் விளக்கம் அளித்தனர்.
கொட்டித் தீர்த்த கனமழையால் பெருங்குடி பகுதியில் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
அரிமளம்:
புதுக்கோட்டை மற்றும் மாவட்ட பகுதிகளில் சமீப நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் புகுந்தது. குளங்கள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. வயல்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இந்தநிலையில் அரிமளம் ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில் பெருங்குடி கண்மாய் உள்ளது. இதன்மூலம் பெருங்குடி, வடக்குப்பட்டி, கூத்தம்பட்டி, சேப்பிளான்பட்டி, பாப்பம்பட்டி, விலாங்காட்டான்பட்டி, ஓட்டுப்பாலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த பெருங்குடி கண்மாய் கலிங்கி மிகவும் மோசமான நிலையில் இருப்பதால் தேங்கிய கண்மாய் நீர் சாகுபடி செய்யப்பட்டுள்ள வயல்களில் புகுந்து நெற்பயிர்களை மூழ்கடித்துள்ளது.
இதனால் சுமார் 70 முதல் 100 ஏக்கர் வரை விவசாயம் செய்யப்பட்ட பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. ஒரு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை விவசாயிகள் செலவு செய்து நடவு செய்து இருந்தனர். நடவு செய்யப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியதால் பயிர்கள் வளர்ந்து இருந்தன. இதனால், நெற்பயிர்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி விட்டன. இதன் காரணமாக அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஆகவே, பெருங்குடி கண்மாய் கலிங்கி மற்றும் வரத்து வாரிகளை சீரமைத்து நீர் செல்லும் வழித்தடங்களின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொதுப்பணித்துறையை சேர்ந்த அதிகாரிகள் குளத்தில் மீன்களை குத்தகைக்கு விடும் பணியை மட்டுமே செய்கின்றனர். ஆனால் குளத்தின் மடை, வரத்து வாய்க்கால் கலிங்கி ஆகியவற்றை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.
பொன்னமராவதி ஒன்றியம், மேலைச்சிவபுரி ஊராட்சி பிடாரம்பட்டி அரமேடு பகுதி பாணிக்காடு கண்மாய் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கன மழையினால் கண்மாய்களில் உடைப்பு ஏற்பட்டதை ஊராட்சி மன்றத் தலைவர் மீனாள்அயோத்திராஜா பார்வையிட்டு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
பொன்னமராவதி பேரூராட்சிக்குட்பட்ட பொன்-புதுப்பட்டியில் நாகப்ப செட்டியார் நினைவு ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியின் அருகே மலையான் ஊரணி உள்ளது. மழையின் காரணமாக ஊரணியின் சுற்று சுவரின் ஒரு பகுதி திடீரென உடைந்து விழுந்தது. அதன் வழியாக பள்ளி வளாகத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கனமழையின் காரணமாக ஆலங்குடி பகுதியில் அனைத்து குளங்களும் நிரம்பி வழிகின்றன. மாஞ்சக்குளம், கோவிலூர் பெரியகுளம், ஆலங்குடி பெரியகுளம், கருமணிக்குளம், சூரன்விடுதி ஆற்றுக்குளம் ஆகியவை நிரம்பி உபரிநீர் வெளியேறுகிறது. இதுகுறித்து விவசாயி கணேசன் கூறுகையில், காலம் கடந்து பெய்த மழையால் குடிநீர் பிரச்சினை தீர்ந்துள்ளது. இனிமேல் நாற்றுப் பாவினால் பயிர் வளர ஒரு மாதம் ஆகும். அதன்பிறகு நடவு வேலை ஆரம்பிக்கும். தண்ணீரை சேமிக்காவிட்டால் கதிர் விடும் சமயத்தில் தண்ணீர் இருக்காது என்றார்.
பொன்னமராவதி புதுப்பட்டி நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள மலையா ஊரணியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் நடுநிலைப்பள்ளி எதிரே உள்ள படித்துறை பகுதியில் மண் சரிந்து வருகிறது. இதனால் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மண்சரிவை உடனடியாக சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில் பல ஏரி, குளங்கள் நிரம்பினாலும் ஆலங்குடி வட்டம் கீரமங்கலம், கொத்தமங்கலம், சேந்தன்குடி உள்பட சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கவில்லை. வரத்து வாரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளாலும், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்து கொண்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
கீரமங்கலம், கொத்தமங்கலம், மாங்காடு, வடகாடு உள்பட பல கிராமங்களில் உள்ள நீர்நிலைகளை இளைஞர்கள் சீரமைத்தனர். ஆனாலும் வரத்துவாரி ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றிக் கொடுக்காததால் சீரமைக்கப்பட்ட ஏரி, குளங்களிலும் தண்ணீர் நிறையவில்லை. இந்த நிலையில் தான் கொத்தமங்கலம் அம்புலியாறு அணைக்கட்டிலிருந்து பெரியகுளத்திற்கு தண்ணீர் கொண்டு செல்லவும், சேந்தன்குடி, நகரம், கீரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கியுள்ள பெரியாத்தாள் ஊரணி ஏரிக்கு அம்புலி ஆறு அணைக்கட்டில் இருந்து தண்ணீர் செல்லும் அன்னதானக்காவிரி கால்வாய் சீரமைப்பு பணிகளையும் கொத்தமங்கலம், கீரமங்கலம், சேந்தன்குடி, நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்கள் செய்து வருகின்றனர்.
வடகாடு பகுதியில் நேற்று முன்தினம் கன மழை பெய்த நிலையில் நேற்று மாலை மீண்டும் கன மழை பெய்தது. இதனால் கடைத்தெரு மற்றும் வீடு பகுதிகளில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. இப்பகுதியில் இதேபோல் கனமழை பெய்தால் இன்னும் நிரம்பாத நிலையில் இருக்கும் குளங்கள் நிரம்ப வாய்ப்பு உள்ளதாக இப்பகுதி விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.
காரைக்குடி அழகு நிலையத்தில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
காரைக்குடி:
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி செக்காலை ரோடு பகுதியில் அழகு நிலையம் செயல்பட்டு வருகிறது. இதன் பொறுப்பாளராக செயல்பட்டு வருபவர் லட்சுமி. இவரது 17 வயது மகள் அதே பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். தாயார் பணியாற்றி வரும் அழகு நிலையத்திற்கு தனது சக தோழிகளை அடிக்கடி அழைத்து வருவது வழக்கம்.
சிகை அலங்காரம், புருவம் சீர்செய்தல் உள்ளிட்ட பல தேவைகளுக்கு மாணவிகள் அடிக்கடி அழகு நிலையம் சென்றுள்ளனர்.
அப்போது அழகு நிலையத்தில் பணியில் இருந்த சிலர் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் இதுபற்றி வெளியே தெரிந்தால் அவமானம் என கருதி பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரிடமும் தெரிவிக்காமல் விட்டுவிட்டனர்.
இந்த நிலையில் ஒரு மாணவி தனது தந்தையிடம் பாலியல் தொந்தரவு குறித்து கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது உறுதியானது.

அதன்பேரில் அழகு நிலைய பொறுப்பாளர் லட்சுமி, அவரது 17 வயது மகள், அங்கு பணியாற்றிய விக்னேஸ்வரன் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
மேலும், முக்கிய குற்றவாளியான தப்பியோடிய மான்சில் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் சொந்த மாநிலமான மேற்கு வங்காளத்திற்கு தப்பி சென்றிருக்கலாமா? என போலீசார் சந்தேகிக்கின்றனர். அவரை தேடும் பணியை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர். அவர் சிக்கினால்தான் இந்த பாலியல் விவகாரத்தில் முக்கிய குற்றவாளி யார்? எவ்வளவு நாட்களாக இதுபோன்று மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு நடைபெற்றுள்ளது என்பது பற்றிய விவரங்கள் தெரியவரும்.
இதற்கிடையே பாலியல் தொந்தரவுக்கு ஆளான மாணவிகள் படித்த பள்ளி நிர்வாகத்திற்கு இதுபற்றி முன்பே தகவல் கிடைத்துள்ளதாகவும், அவர்கள் போலீசுக்கு தெரிவிக்காமல் மாணவிகள் மற்றும் அவர்களை சரியாக கண்காணிக்க தவறியதாக ஆசிரியைகளிடமும் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது. மேலும் பள்ளி நிர்வாகம் ஒரு ஆசிரியையை சஸ்பெண்டு செய்ததோடு, 2 மாணவிகளுக்கு மாற்றுச்சான்றிதழ் கொடுத்து நடவடிக்கை மேற்கொண்டதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது ஏன்? என்பது மர்மமாக உள்ளது.
இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இதையும் படியுங்கள்... இந்தியாவில் கொரோனா நிலவரம்- 287 நாட்களில் இல்லாத அளவு சரிவு
துலா உற்சவத்தையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மயிலாடுதுறையில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான அபயாம்பிகை உடனான மயூரநாதர்கோவில் உள்ளது. பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்ந ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டமும் நடந்தது. முன்னதாக. அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 3 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணமும், அதனை தொடர்ந்து நேற்று தேரோட்டமும் நடந்தது. முன்னதாக. அபயாம்பிகையுடன் மயூரநாதர், பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.
இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது குருமகா சன்னிதானம் அம்பலவாணதேசிக பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் முக்கிய வீதிகளின் வழியாக வலம் வந்து மாலை 3 மணியளவில் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.
கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுசந்தை அருகே வசிப்பவர் முருகேசன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது28).
வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இங்கு பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு சர்மிளா (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 4 மாத கர்ப்பிணியான அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சர்மிளாவுக்கு ‘மர்ம’ காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்தபோதும் சர்மிளா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.
ராம்நகரைச் சேர்ந்த வினோத் (42), பெரிய காரை வசந்த் (22) மற்றும் ஒருவர் என மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தேவகோட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை மாட்டுசந்தை அருகே வசிப்பவர் முருகேசன். இவரது மகன் ராமச்சந்திரன் (வயது28).
வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர் ஊருக்கு வந்திருந்தார். அதன் பிறகு கொரோனா தொற்று காரணமாக வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் இங்கு பெயிண்டர் வேலை பார்த்து வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இவருக்கு சர்மிளா (22) என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. 4 மாத கர்ப்பிணியான அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது சர்மிளாவுக்கு ‘மர்ம’ காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. அதற்கான மருத்துவ சிகிச்சை எடுத்தபோதும் சர்மிளா சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.
கடந்த சில வாரங்களாக மர்ம காய்ச்சலால் தேவகோட்டை நகர் மற்றும் கிராமப்புறங்களில் பலரும் பலியாகி வருகின்றனர்.
ராம்நகரைச் சேர்ந்த வினோத் (42), பெரிய காரை வசந்த் (22) மற்றும் ஒருவர் என மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் தேவகோட்டை பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
ஆர்எஸ்எஸ் தொண்டரை இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
திருவனந்தபுரம்:
கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்எஸ் தொண்டர் சஞ்சித் (26). இவர் பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் இன்று காலை 9 மணியளவில் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சஞ்சித்தை கொடூரமாக தாக்கிவிட்டு தப்பியது.
இதில் பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிய சஞ்சித் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனையிட்டனர். மேலும், இந்த கொலை குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை எதிரொலியால், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. இந்திய சமூக ஜனநாயக கட்சியை சேர்ந்தவர்கள் இந்த கொலையை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இது முழுக்க முழுக்க இந்திய சமூக ஜனநாயக கட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கொலை என்றும், ஆளும் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்துள்ளதால் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது என்றும் பாலக்காடு மாவட்ட பாஜக தலைவர் கே.எம். ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு மேலாக வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழ்ந்தது. இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
தேவகோட்டை:
பருவமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை தாலுகாவில் சென்ற ஆண்டுகளை விட அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கண்மாய், குளங்கள், நீர் நிலைகள் நிரம்பி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தேவகோட்டை முப்பையூர் அருகே கற்களத்தூர் ஊராட்சியில் உள்ள பொதுவாகுடி கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு மேலாக வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழ்ந்தது. இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அந்த கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் மழைநீர் செல்ல எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்து மதுரை-தொண்டி சாலையில் இன்று காலை கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் எப்போதும் பரபரப்பாக இருக்கும் இந்த சாலையில் நீண்ட தூரம் வாகனங்கள் சாலையில் இருபுறங்களிலும் நின்றன.
இதனை அறிந்த தேவகோட்டை போலீஸ் துணை கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் சரவணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மேலும் மழைநீர் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
இன்று மழைநீர் செல்ல நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என கிராமத்தினர் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 12,85,161 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உத்தரவின்படி நாளை (14-ந்தேதி) மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,00,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நாட்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கும். அரசு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து துணை சுகாதார மையங்களுக்குட்பட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மருந்து கோவிஷீல்டு 92,900 டோஸ் மற்றும் கோவாக்சின் 54,740 டோஸ் இருப்பில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 12,85,161 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது மொத்தம் 62 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், கோவிட் கவனிப்பு மையங்களில், தனியார் மருத்துவமனைகளில் 42 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 11-ந்தேதி அன்று 9 நபர்களுக்கு கொரோனா நோய்த்தோற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 60,022 பேர். இதில் 57,852 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட தடுப்பு மருந்து 1457 நபர்களுக்கும், 2-வது கட்ட தடுப்பு மருந்து 6448 நபர்களுக்கும், ஆக மொத்தம் இதுவரை நீரழிவு நோய், இணை நோய் உள்ளவர்கள் 61,565 நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்கள் 17,361 நபர்களுக்கும், பாலூட்டும் பெண்கள் 16,607 நபர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்து 10,84,637 நபர்களுக்கும், 2-வது கட்ட தடுப்பு மருந்து 4,90,183 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இன்று மட்டும் 41 நபர்களுக்கு அபராதமாக ரூ. 8,500 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,28,211 நபர்களுக்கும் அபராதமாக ரூ. 2,78,29,162 வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு உத்தரவின்படி நாளை (14-ந்தேதி) மாநிலம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் தடுப்பூசி முகாம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரி மாவட்டத்தில், 1,00,000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்களும், இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நபர்களும் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெற வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நாட்களிலும் அரசு கூடுதல் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை இயங்கும். அரசு ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரியில் 24 மணி நேரமும் இயங்கும். பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் அனைத்து துணை சுகாதார மையங்களுக்குட்பட்ட கிராம பகுதிகளில் வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி மருந்து கோவிஷீல்டு 92,900 டோஸ் மற்றும் கோவாக்சின் 54,740 டோஸ் இருப்பில் உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும், களப் பணியாளர்கள் மூலமாகவும், சோதனைச் சாவடிகள் மூலமாகவும் இதுவரை 12,85,161 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தற்போது மொத்தம் 62 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இதில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 20 பேரும், கோவிட் கவனிப்பு மையங்களில், தனியார் மருத்துவமனைகளில் 42 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 11-ந்தேதி அன்று 9 நபர்களுக்கு கொரோனா நோய்த்தோற்று ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் 60,022 பேர். இதில் 57,852 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று முதல் கட்ட தடுப்பு மருந்து 1457 நபர்களுக்கும், 2-வது கட்ட தடுப்பு மருந்து 6448 நபர்களுக்கும், ஆக மொத்தம் இதுவரை நீரழிவு நோய், இணை நோய் உள்ளவர்கள் 61,565 நபர்களுக்கும், கர்ப்பிணி பெண்கள் 17,361 நபர்களுக்கும், பாலூட்டும் பெண்கள் 16,607 நபர்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்து 10,84,637 நபர்களுக்கும், 2-வது கட்ட தடுப்பு மருந்து 4,90,183 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் முக கவசம் அணியாதது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இன்று மட்டும் 41 நபர்களுக்கு அபராதமாக ரூ. 8,500 வசூலிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,28,211 நபர்களுக்கும் அபராதமாக ரூ. 2,78,29,162 வசூலிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது.
சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் ஐப்பசி மாத கடைசி வெள்ளிக்கிழமையான நேற்று 16 வகையான சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சுவாமிக்கு சந்தனகாப்பு அலங்காரம் முருகப்பெருமான் அவதாரத்தில் சித்தர் மலர் மாலையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதேபோல் வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல் வேட்டையன்பட்டியில் உள்ள காமாட்சி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்றது. சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலையுடன் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
மாணவி தற்கொலை வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைதான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவை:
கோவையைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்நிலையில் இந்தப் பள்ளியில் தொடர்ந்து படிக்க தனக்கு விருப்பமில்லை. வேறு பள்ளியில் சேர்த்து விடுமாறு தனது பெற்றோரிடம் மாணவி கூறி உள்ளார். இதையடுத்து அவரை அவரது பெற்றோர் ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் கடந்த செப்டம்பர் மாதம் சேர்த்தனர்.
இந்தநிலையில் மாணவி கடந்த சில மாதங்களாக மிகுந்த மன உளைச்சலுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத போது மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டுக்குத் திரும்பிய பெற்றோர் தங்களது மகள் தூக்கில் தொங்குவது கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து உக்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு உக்கடம் போலீஸ் நிலையத்தில் இருந்து கோவை மேற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில், மாணவி தற்கொலைக்கு முன்பு எழுதி வைத்த கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டதாகவும், அதில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி (வயது 31) உள்பட 3 பேரின் பெயர்களை மாணவி குறிப்பிட்டு இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மாணவியின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் ஆசிரியர் மிதுன்சக்ரவர்த்தி மாணவியிடம் வாட்ஸ்அப்பில் ஆபாசமான முறையில் தொல்லை அளித்ததற்கான ஆதாரங்கள் மற்றும் அவருடன் பேசிய ஆடியோ ஆதாரங்களையும் போலீசார் கைப்பற்றினர்.

பின்னர் மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை போலீசார் நேற்று மாலை கைது செய்தனர்.
அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இரவு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஆசிரியரை வருகிற 26-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தியை உடுமலைப்பேட்டையில் உள்ள சிறையில் அடைத்தனர்.
தற்கொலை செய்து கொண்ட மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் மாணவியின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்து விட்டனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது:-
எங்களது மகளுக்கு ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லை குறித்து நாங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தோம். ஆனால் அவர் அந்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அவரும் மாணவியின் தற்கொலைக்கு காரணமாக உள்ளார். அவரையும் போலீசார் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இதனையடுத்து மேற்கு அனைத்து மகளிர் போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்த அந்த 2 பேரையும் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கும் மாணவியின் தற்கொலைக்கும் காரணம் உள்ளதா? அவர்கள் மாணவிக்கு ஏதாவது தொல்லை கொடுத்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதையும் படியுங்கள்.... தமிழகத்தில் 5 நாட்களில் சராசரியாக 10 செ.மீ. மழை பதிவு
இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்றக்குடி கோவிலில் கந்த சஷ்டி விழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக காலை முதல் பக்தர்கள் வரத்து இல்லாததால் கோவில் வளாகம் மற்றும் கோவில் மலைக்குன்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்றக்குடி கோவிலில் கந்த சஷ்டி விழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக காலை முதல் பக்தர்கள் வரத்து இல்லாததால் கோவில் வளாகம் மற்றும் கோவில் மலைக்குன்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
நமக்கு பதினாறு செல்வங்களையும் எளிதாக கொடுக்கக் கூடிய இந்த ஸ்ரீ கிருஷ்ணருடைய 108 போற்றியை தினமும் சொல்லி கிருஷ்ணரை வழிபாடு செய்யவும்.
ஓம் அனந்த கிருஷ்ணா போற்றி
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரேறே போற்றி
ஓம் அரவிந்த லோசனா போற்றி
ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆபத்சகாயனே போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
ஓம் ஊழி முதல்வனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
ஓம் எண் குணத்தானே போற்றி
ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
ஓம் எழில் மிகுதேவா போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
ஓம் கிரிதர கோபாலனே போற்றி
ஓம் கீதையின் நாயகனே போற்றி
ஓம் குசேலர் நண்பனே போற்றி
ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
ஓம் கோபியர் தலைவனே போற்றி
ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
ஓம் கோகுல பாலகனே போற்றி
ஓம் கோவிந்த ராஜனே போற்றி
ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
ஓம் சாந்த குணசீலனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
ஓம் துவாரகை மன்னனே போற்றி
ஓம் தேவகி செல்வனே போற்றி
ஓம் நந்த கோபாலனே போற்றி
ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
ஓம் நவநீத சோரனே போற்றி
ஓம் நான்மறை பிரியனே போற்றி
ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பக்த வத்சலனே போற்றி
ஓம் பலராமர் சோதரனே போற்றி
ஓம் பவள வாயனே போற்றி
ஓம் பத்ம நாபனே போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துாதனே போற்றி
ஓம் பாண்டு ரங்கனே போற்றி
ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்ணை உண்டவனே போற்றி
ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மீராவின் வாழ்வே போற்றி
ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் யமுனைத் துறைவனே போற்றி
ஓம் யசோதை செய்தவமே போற்றி
ஓம் யதுகுலத் திலகமே போற்றி
ஓம் ராதையின் நாயகனே போற்றி
ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேணு கோபாலனே போற்றி
ஓம் வைகுண்ட வாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!
ஓம் அரங்கமா நகருளானே போற்றி
ஓம் அற்புத லீலா போற்றி
ஓம் அச்சுதனே போற்றி
ஓம் அமரேறே போற்றி
ஓம் அரவிந்த லோசனா போற்றி
ஓம் அர்ஜுனன் தோழா போற்றி
ஓம் ஆதி மூலமே போற்றி
ஓம் ஆயர் கொழுந்தே போற்றி
ஓம் ஆபத்சகாயனே போற்றி
ஓம் ஆலிலை பாலகா போற்றி
ஓம் ஆழ்வார் நாயகா போற்றி
ஓம் ஆண்டாள் பிரியனே போற்றி
ஓம் ஆனையைக் காத்தாய் போற்றி
ஓம் ஆனந்த மூர்த்தியே போற்றி
ஓம் ஆனிரை காத்தவனே போற்றி
ஓம் இமையோர் தலைவா போற்றி
ஓம் உம்பர்க்கு அருள்வாய் போற்றி
ஓம் உடுப்பி உறைபவனே போற்றி
ஓம் உள்ளம் கவர் கள்வனே போற்றி
ஓம் உலகம் உண்ட வாயா போற்றி
ஓம் ஊழி முதல்வனே போற்றி
ஓம் எங்கும் நிறைந்தாய் போற்றி
ஓம் எட்டெழுத்து இறைவா போற்றி
ஓம் எண் குணத்தானே போற்றி
ஓம் எழில் ஞானச் சுடரே போற்றி
ஓம் எழில் மிகுதேவா போற்றி
ஓம் ஏழைப் பங்காளா போற்றி
ஓம் ஒளிமணிவண்ணா போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் பிறந்தாய் போற்றி
ஓம் ஒருத்தி மகனாய் வளர்ந்தாய் போற்றி
ஓம் கலியுக தெய்வமே போற்றி
ஓம் கண்கண்ட தேவா போற்றி
ஓம் கம்சனை அழித்தாய் போற்றி
ஓம் கருட வாகனனே போற்றி
ஓம் கல்யாண மூர்த்தி போற்றி
ஓம் கல்மாரி காத்தாய் போற்றி
ஓம் கமலக் கண்ணனே போற்றி
ஓம் கஸ்துாரி திலகனே போற்றி
ஓம் காளிங்க நர்த்தனா போற்றி
ஓம் காயாம்பூ வண்ணனே போற்றி
ஓம் கிரிதர கோபாலனே போற்றி
ஓம் கீதையின் நாயகனே போற்றி
ஓம் குசேலர் நண்பனே போற்றி
ஓம் குருவாயூர் அப்பனே போற்றி
ஓம் கோபியர் தலைவனே போற்றி
ஓம் கோபி கிருஷ்ணனே போற்றி
ஓம் கோவர்த்தனகிரி தாங்கியவனே போற்றி
ஓம் கோபால கிருஷ்ணனே போற்றி
ஓம் கோகுல பாலகனே போற்றி
ஓம் கோவிந்த ராஜனே போற்றி
ஓம் சகஸ்ர நாம பிரியனே போற்றி
ஓம் சங்கு சக்கரத்தானே போற்றி
ஓம் சந்தான கிருஷ்ணனே போற்றி
ஓம் சகடாசுரனை அழித்தவனே போற்றி
ஓம் சர்வ லோக ரட்சகனே போற்றி
ஓம் சாந்த குணசீலனே போற்றி
ஓம் சிந்தனைக்கினியவனே போற்றி
ஓம் சீனிவாச மூர்த்தியே போற்றி
ஓம் சுந்தரத் தோளுடையானே போற்றி
ஓம் தாமரைக் கண்ணனே போற்றி
ஓம் திருமகள் மணாளனே போற்றி
ஓம் திருத்துழாய் மார்பனே போற்றி
ஓம் துவாரகை மன்னனே போற்றி
ஓம் தேவகி செல்வனே போற்றி
ஓம் நந்த கோபாலனே போற்றி
ஓம் நந்தகோபன் குமரனே போற்றி
ஓம் நப்பின்னை மணாளனே போற்றி
ஓம் நவநீத சோரனே போற்றி
ஓம் நான்மறை பிரியனே போற்றி
ஓம் நாராயண மூர்த்தியே போற்றி
ஓம் பரந்தாமனே போற்றி
ஓம் பக்த வத்சலனே போற்றி
ஓம் பலராமர் சோதரனே போற்றி
ஓம் பவள வாயனே போற்றி
ஓம் பத்ம நாபனே போற்றி
ஓம் பார்த்த சாரதியே போற்றி
ஓம் பாற்கடல் கிடந்தாய் போற்றி
ஓம் பாண்டவர் துாதனே போற்றி
ஓம் பாண்டு ரங்கனே போற்றி
ஓம் பாரதம் நிகழ்த்தினாய் போற்றி
ஓம் பாஞ்சாலி சகோதரனே போற்றி
ஓம் பாஞ்சஜன்ய சங்கினாய் போற்றி
ஓம் பிருந்தாவன பிரியனே போற்றி
ஓம் புண்ணிய மூர்த்தியே போற்றி
ஓம் புருஷோத்தமனே போற்றி
ஓம் பூபாரம் தீர்த்தவனே போற்றி
ஓம் பூதனையை கொன்றவனே போற்றி
ஓம் மதுசூதனனே போற்றி
ஓம் மண்ணை உண்டவனே போற்றி
ஓம் மயிற்பீலி அழகனே போற்றி
ஓம் மாய கிருஷ்ணனே போற்றி
ஓம் மாயா வினோதனே போற்றி
ஓம் மீராவின் வாழ்வே போற்றி
ஓம் முத்து கிருஷ்ணனே போற்றி
ஓம் முழுமதி வதனா போற்றி
ஓம் யமுனைத் துறைவனே போற்றி
ஓம் யசோதை செய்தவமே போற்றி
ஓம் யதுகுலத் திலகமே போற்றி
ஓம் ராதையின் நாயகனே போற்றி
ஓம் வசுதேவர் புதல்வா போற்றி
ஓம் வெண்ணெய் திருடியவனே போற்றி
ஓம் வெள்ளை மனத்தானே போற்றி
ஓம் வேங்கட கிருஷ்ணனே போற்றி
ஓம் வேதியர் வாழ்வே போற்றி
ஓம் வேணு கோபாலனே போற்றி
ஓம் வைகுண்ட வாசனே போற்றி
ஓம் வையம் காப்பவனே போற்றி போற்றி!






