என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
ஆன்மிகம்
X
குன்றக்குடி கோவிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து: மூலவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது
Byமாலை மலர்10 Nov 2021 6:01 AM GMT (Updated: 10 Nov 2021 6:01 AM GMT)
இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி அருகே குன்றக்குடி சண்முகநாதன் பெருமான் கோவிலில் கந்த சஷ்டி விழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்றக்குடி கோவிலில் கந்த சஷ்டி விழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக காலை முதல் பக்தர்கள் வரத்து இல்லாததால் கோவில் வளாகம் மற்றும் கோவில் மலைக்குன்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் கொரோனா தொற்று பரவல் காரணமாக குன்றக்குடி கோவிலில் கந்த சஷ்டி விழா எளிமையாக நடந்தது. இந்நிலையில் இந்தாண்டும் கொரோனா தொற்று மற்றும் வடகிழக்கு பருவ மழை காரணமாக நேற்று சூரசம்ஹாரம் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் விழா எளிமையாக நடைபெற்றது.
முன்னதாக நேற்று காலை முதல் இரவு வரை தொடர்ந்து மழை பெய்து வந்ததால் கோவிலில் பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது. இதையடுத்து கோவிலுக்கு வந்த பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். மேலும் மூலவர் சண்முகநாதபெருமானுக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நேற்று பெய்த தொடர் மழை காரணமாக காலை முதல் பக்தர்கள் வரத்து இல்லாததால் கோவில் வளாகம் மற்றும் கோவில் மலைக்குன்று பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X