என் மலர்
சிவகங்கை
- நெற்குப்பை நூலகத்தில் முப்பெரும் விழா நடந்தது.
- ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் சோ மேலெ நினைவு அரசு கிளை நூலகத்தில் குழந்தை கவிஞர் வள்ளியப்பா நூற்றாண்டு விழா, உங்கள் மாவட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் மாணவர்களுக்கான போட்டி மற்றும் பரிசளிப்பு விழா, கலை மற்றும் கல்வி அரங்கம் அடிக்கல் நாட்டு விழா என முப்பெரும் விழா நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்கினார்.
நெற்குப்பை பேரூராட்சி சேர்மன் புசலான் வரவேற்றார். சோமசுந்தரம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், ஆத்திசூடி ஜெயராமன், மகிபாலன்பட்டி சாத்தப்பசெட்டியார், வட்டாட்சியர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கல்வி மற்றும் கலை அரங்க கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில் செயல் அலுவலர் கணேசன், மண்டலதுணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், இளநிலை உதவியாளர் சேரலாதன், கிராம நிர்வாக அலுவலர் சரவணன், அலமேலு அழகப்பன், அருணாச்சலம், உமா வள்ளியப்பன், தேவி மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிளை நூலக நல்நூலகர் விஜயா நன்றி கூறினார்.
- சிவகங்கை மாவட்ட அளவிலான தேசிய மக்கள் நீதிமன்றம் மூலம் 1,120 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
- இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள் செய்திருந்தனர்.
சிவகங்கை
தேசிய சட்டப் பணிகள் ஆணையத்தின் உத்தரவுப்படியும், தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத்தின் வழிகாட்டுதலின் படியும், சிவகங்கை மாவட்டத்தில் 10 மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டது.
இதையடுத்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்க ளிலும் நிலுவையில் உள்ள சிவில் வழக்குகளும், சமரச குற்றவியல் வழக்குகளும், மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்குகளும் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா, கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச்சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர்/சார்பு நீதிபதி பரமேஸ்வரி, ஊழல் தடுப்பு சிறப்பு நீதிபதி இன்பகார்த்திக், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிறிஸ்டி, சத்திய நாராயணன், கூடுதல் மகிளா குற்றவியல் நீதிதுறை நடுவர் ஆப்ரின் பேகம் மற்றும் வழக்கறிஞர்கள் வழக்குகளை விசாரித்தனர்.
இந்த தேசிய மக்கள் நீதிமன்றங்களில் 100 குற்றவியல் வழக்குகளும், 164 காசோலை மோசடி வழக்குகளும், 185 வங்கிக் கடன் வழக்குகளும், 112 மோட்டார் வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகளும், 86 குடும்பப் பிரச்சினை சம்பந்தப்பட்ட வழக்குகளும், 405 சிவில் சம்பந்தப்பட்ட வழக்குகளும், 991 மற்ற குற்றவியல் வழக்குகளும் என மொத்தம் 2,043 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டது.
இதில் 1060 வழக்குகள் சமரசமாக தீர்க்கப்பட்டு ரூ.2 கோடியே 99 லட்சத்து 34 ஆயிரத்து 270 வரை வழக்காடிகளுக்கு கிடைத்தது. அதேபோல் வங்கி கடன் நிலுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத வழக்கு களில் 850 வழக்குகள் பரிசீலனைக்கு எடுக்கப் பட்டது. இதில் 60 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன் மூலம் ரூ.78 லட்சத்து 14 ஆயிரத்து 850 வரை வங்கிகளுக்கு வரவானது.
இதற்கான ஏற்பாடு களை மாவட்ட சட்டப்ப ணிகள் ஆணைக்குழு பணியாளர்கள்
செய்திருந்தனர்.
- அறிவியல் வளர்ச்சியால் வேலைவாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் என முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டியில் கூறினார்.
- அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம் என்றும் பேசினார்.
நெற்குப்பை
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயண பெருமாள் கோவிலில் முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
எஸ்.எஸ்.எல்.வி. டி2 ராக்கெட் வெற்றிகரமாக ஏவியதன் மூலம் இனி வணிக ரீதியான ராக்கெட்டுகளை ஏவ முடியும். நிலவுக்கு செயற்கை கோள்களை அனுப்ப சோத னைகள் நடைபெற்று வருகிறது. இந்த பணி நிறைவடைந்தவுடன் நிலவுக்கு ராக்கெட் மூலம் செயற்கைகோள் ஏவப்படும்.
ஆன்மீகமும், அறிவி யலும் முக்கியமானது. ஆன்மீகத்தில் அறிவிய லையும், அறிவியலில் ஆன்மீகத்தையும் பார்க்க கூடாது. இவற்றின் மூலம் மக்கள் முன்னேற முயற்சிக்க வேண்டும் என்றார்.
அரசு பள்ளியில் படிப்பது இழிவு கிடையாது. அரசு பள்ளிகள் தனியார் பள்ளிகளுக்கு சளைத்தது கிடையாது. நான் அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்து ரையாடிய போது அவர்கள் திறமையானவர்களாக உள்ளனர் என்பதை கண்டறிந்தேன்.
அரசு பள்ளி, தனியார் பள்ளி என நாம் தான் தேவையில்லாமல் வேறு படுத்தி பார்க்கிறோம். குறிப்பிட்ட தேர்வில் மாணவர்கள் தோல்வி அடைந்தால் அதற்கு காரணம் பள்ளி அல்ல, மாணவர்கள் போதிய பயிற்சி எடுக்காததே காரணமாகும். ஆண்டு தோறும் அறிவி யல் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் வேலை வாய்ப்பு குறையாது. அறிவியல் வளர்ச்சியால் வேலை வாய்ப்பு பறிபோகும் என்பது வீண் பயம் ஆகும். புது, புது முயற்சிகளை மேற்கொண்டால் நிறைய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ரூ.4.51 கோடியில் இலங்கை அகதிகளுக்கு 90 வீடுகள் கட்டும் பணிகளை மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் ஆய்வு செய்தார்.
- முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர்.
சிவகங்கை
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், ஒக்கூர் ஊராட்சியில் இலங்கை அகதிகளுக்கான குடியிரு ப்புக்கள் கட்ட ப்பட்டு வருகிறது. இதன் கட்டுமான பணிகள் குறித்து, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் (முழு கூடுதல் பொறுப்பு) ஜெசிந்தா லாசரஸ் , கலெக்டர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் முகாம் வாழ் தமிழர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வின்போது, கலெக்டர் மதுசூதன்ரெட்டி கூறியதாவது:-
நமது அண்டை நாடான இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை யின் காரணமாக, பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு தமிழகம் வந்த ஈழத்தமிழர்களின் நலனை காக்கும் வகை யில் அவர்களின் தாய் தமிழகமாக திகழ்ந்து வரும் தமிழகத்தில் உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் மற்றும் அடிப்படைத் தேவைகள் அனைத்தையும் தமிழக அரசு அவர்களுக்கு வழங்கி பாதுகாத்து வருகிறது.
அதன்படி சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம், காரையூர், மூங்கில்ஊரணி, சென்னாலக்குடி, ஒக்கூர், தாழையூர் ஆகிய
6 பகுதிகளில் முகாம் வாழ் தமிழர்கள் வாழும் பகுதிகள் உள்ளது. அந்த பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கென அரசுத்துறைகளுடன் தனியார் தொண்டு நிறுவ னங்களின் பங்களிப்புடன் ஆய்வு செய்து, அதனை ஆலோசனைக் குழுவின் மூலம் பரிசீலித்து, அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டத்தில் முகாம் வாழ் தமிழர்கள் மொத்தம் 1,609 குடும்பங்களை சேர்ந்த 3ஆயிரத்து 242 பேர் உள்ளனர். அதில் ஒக்கூர் ஊராட்சியில் மட்டும் 236 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஒக்கூர் ஊராட்சியில், ஒரு குடும்பத்திற்கு 300 சதுர அடி வீடும், 20 சதுர அடி கழிப்பிடமும் என 320 சதுர அடியில் 88 தொகுப்பு வீடுகளும், 2 தனி வீடுகளும் மொத்தம் 90 வீடுகள் என ரூ.4.51 கோடி மதிப்பீட்டில் வீடுகளின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த பணிகளை விரைந்து தரமான முறையில் முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலர் விசாலாட்சி, உதவி செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், ஒக்கூர் ஊராட்சி மன்றத்தலைவர் பூமா அருணாசலம், வட்டாட்சியர் பாலகுரு, தனி வட்டாட்சியர் (இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு) உமா உள்பட பலர் உடனிருந்தனர்.
- இடைக்காட்டூர் ஊராட்சியில் நெல்கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
- இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மானாமதுரை
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ளது இடைக்காட்டூர். இங்கு கடந்தாண்டு நெல் அறுவடையின்போது கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூடை களை விவசாயிகள் கொள்முதல் செய்தனர்.
இந்தாண்டு மீண்டும் கொள்முதல் நிலையம் திறக்காததால் இடைக்காட்டூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியான சிறுகுடி, பெரிய கோட்டை, பதினெட்டாம்கோட்டை, அருளானந்தபுரம், செட்டி குளம், தெக்கூர், காளிபட்டி உள்பட ஏராளமான கிராமங்களில் இருந்து பல ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.
ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்தாண்டு நெல் அறுவடை பணி முடிந்த நிலையில் தற்போது நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் விவசாயிகள் விளைவித்த சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட நெல்மூடைகளை திறந்த வெளியில் ஆங்கா ங்கே விவசாயிகள் இறக்கி அடுக்கி வைத்தனர். மேலும் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் இந்த நெல் மூடைகள் மழையில் நனையும் அவல நிலை ஏற்பட்டது.
இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் உடனடியாக நடவடிக்கை எடுத்து இனி வரும் நெல்லை பாதுகாக்க உடனடியாக நெல்கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும் விவசாயிகள் இதுகுறித்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி, அமைச்சர் பெரியகருப்பனிடம் தகவல் தெரிவித்தனர்.இதையடுத்து அமைச்சர் பெரியகருப்பன் உடனடியாக இடைகாட்டூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். அதை தொடர்ந்து உடனடியாக நேற்று இடைக்காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகநாதன் தலைமையில் நெல்கொள் முதல் நிலையம் திறக்கப்பட்டது.இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை ப.சிதம்பரம் வாழ்த்தினார்.
- திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி- தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம். மதுமிதாவிற்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழி லதிபர் சத்குரு தேவனின் மைத்துனருமாகிய பொறி யாளர் கே.மெய்யப்பனிற்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டிருந்தது. மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி பேலஸில் விமரிசையாக நடந்தது.
முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தலைமை தாங்கினார். சிவகங்கை எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலை வகித்தார்.
திருமணவிழாவில் ஸ்ரீநிதி கார்த்தி சிதம்பரம், முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயதாரணி, செல்வப்பெருந்தகை, ராமச்சந்திரன், காரைக்குடி நகர்மன்ற தலைவர் முத்துதுரை, மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மற்றும் அரசின் முதன்மை செயலர்கள், அரசு துறை செயலாளர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகி கள், தொண்டர்கள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எம்.எல்.ஏ. எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.
- அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை.
- அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது.
சிவகங்கை :
முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சிவகங்கையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து பிரதமர் பேசியது உரையல்ல. குறிப்பாக எதிர்க்கட்சிகளை திட்டினார். காங்கிரஸ் கட்சி 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்தவில்லை என்று கூறவில்லை. முந்தைய காலத்தில் இருந்த சூழ்நிலையில், 356-வது சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. அதை தவறாக பயன்படுத்தி இருந்தால் அன்றைக்கே மக்கள் அரசை தண்டித்து இருப்பார்கள்.
இவர்கள் 356-ஐ பயன்படுத்தி அரசை நீக்குவது கிடையாது. அதற்கு பதிலாக எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி விடுகிறார்கள். அரசை நீக்கி தேர்தல் நடத்தினால்கூட பரவாயில்லை. ஆனால் இவர்கள் விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் விலைக்கு வாங்கியது கோவாவில் நடந்தது. 12 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் 8 பேரை விலைக்கு வாங்கினார்கள்.
ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் ஆளுங்கட்சி சந்திக்கின்ற முதல் இடைத்தேர்தல். தன்னுடைய முழு பலத்தையும் காட்டத்தானே செய்வார்கள். அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஆட்சியில் இடைத்தேர்தல் வந்தபோது, அமைச்சர்கள் எல்லாம் வீட்டிலா இருந்தார்கள்?.
அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணி 2024-ல் தொடரும் என்று அறிவித்துள்ளார்கள். அது தொடரட்டும். பா.ஜனதா என்ற பாம்பை கழுத்தில் மாலையாக போட்டுக்கொண்டு அ.தி.மு.க. வரட்டும். அதானிக்கு மோடி நண்பர் என்பதை மறுக்க முடியாது. அவர் நாடாளுமன்றத்திலும் அதை மறுக்கவில்லை
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.
- வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
- இந்த தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சிசிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்களிடமிருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியலுடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதிகளில் அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு, ஆதார் எண் விவரங்கள் படிவம்-6பி-ல் வாக்காளர்களின் சுய விருப்பத்தின் அடிப்படையில் பெற்று வருகின்றனர்.
இந்த வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் போதிய முன்னேற்றம் காணப்படாததால், பொதுமக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு வசதியாக நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் தங்கள் வாக்குச்சாவடி மையத்தில் நடைபெறும் சிறப்பு முகாமில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை படிவம் 6-பி இணைத்துக் கொள்ளலாம். மேலும், ஆதார் எண் இல்லாத வாக்காளர்கள், அவர்கள் படிவம்-6பி-ல் குறிப்பிடப்பட்டுள்ள இதர 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றின் நகலினை அளித்து அட்டையுடன் இணைக்கலாம். எனவே, இந்த அறிய வாய்ப்பினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காரைக்குடியில் மாங்குடி எம்.எல்.ஏ. இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை மணமக்களின் குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி -தேவி மாங்குடி தம்பதியரின் மகள் பொறியாளர் எம்.மதுமிதா.
இவருக்கும், காரைக்குடி தாலுகா கோட்டையூர் கரு.குமார்-ஜெயந்தி கொப்பாத்தாள் தம்பதியரின் மகனும், தொழிலதிபர் சத்குரு தேவனின் மைத்துன ருமாகிய பொறியாளர் கே.மெய்யப்பனிற்கும் பெரியோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
மதுமிதா-மெய்யப்பன் திருமணம் காரைக்குடி பி.எல்.பி. பேலஸில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. முன்னாள் மத்திய நிதி மற்றும் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் தலைமையில், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் முன்னிலையில் திருமணம் நடைபெறுகிறது.
இதில் பல்வேறு துறைக ளின் அமைச்சர்கள், சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பி னர்கள், தமிழ்நாடு அரசு முதன்மை செயலாளர்கள், அரசுத்துறை செயலா ளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், உள்ளாட்சி தலைவர்கள், பிரதிநிதிகள், தொழிபதிபர்கள், காங்கி ரஸ் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள், நண்பர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.திருமண விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.மாங்குடி-தேவி மாங்குடி மற்றும் கரு.குமார்- ஜெயந்தி கொப்பாத்தாள் குடும்பத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
- திருப்பத்தூரில் கியாஸ் கசிவால் ‘தீ’ விபத்து ஏற்பட்டது.
- இதில் கட்டுமான தொழிலாளர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
திருப்பத்தூர்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் புதுத்தெரு மகளிர் போலீஸ் நிலையம் பின்புற பகுதியில் புதுக்கோட்டையைச் சேர்ந்த கட்டுமான பணியாளர்கள் வீடு ஒன்று வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர்.
நேற்று வேலை முடிந்து வந்த தொழிலாளர்கள் வீட்டின் ஒரு அறையில் இரவு நேர சமையல் செய்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக சமையல் கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு தீ பற்றி எரிந்தது. இதனை கண்ட தொழிலாளர்கள் தீயை அணைக்க முற்பட்டனர். இருப்பினும் தீ வேகமாக அருகே இருந்த சிமெண்ட் மூடையிலும் பற்றி எரிய ஆரம்பித்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலாளர்கள் சிலிண்டர் வெடிக்கும் என்ற அச்சத்தில் வீட்டை விட்டு வெளியேறினர்.
இந்த தீ விபத்து குறித்து தகவலறிந்த திருப்புத்தூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள்நிலைய அலுவலர் கணேசன் தலைமையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். வீரர்களின் உடனடி நடவடிக்கை காரணமாக தீ அணைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொழிலா ளர்கள் தீ விபத்து நடந்த சிறிது நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறியதால் உயிர் தப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 606 கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது.
- இதனை சிவகங்கை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
சிவகங்கை
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தினை தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அரங்கில் கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1000 வழங்கும் உயர்கல்வி உறுதி திட்டத்தை கலெக்டர் மதுசூதன்ரெட்டி தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்வி பயின்று வரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் 2-ம் கட்ட திட்டத்தின் கீழ் சிவ கங்கை மாவட்டத்தில் முதற் கட்டமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள 42 கல்லூரிகளில் பயின்று வரும் 1,759 மாணவிகளுக்கு, அவர்களது வங்கிக்கணக்கில் தலா ரூ.1,000 வரவு வைக்கப்பட்டு, அப்பணத்தை எடுப்பதற்கான வங்கி ஏ.டி.எம். கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரேவதி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இளவழகன், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, வங்கிகளின் முதன்மை மேலாளர்கள் விமல்காந்த், (இந்தியன் வங்கி), ராமகிருஷ்ணன் (ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா) மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் கொள்முதல் மையத்தில் 400 மூடை நெல் மழையில் நனைந்து முளைத்து விட்டது.
- சிங்கம்புணரி விவசாயிகள் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.
சிங்கம்புணரி
சிவகங்கை மாவட்டத்தில் போதிய அளவு நீர்நிலைகள் இல்லாததால் விவசாயிகள் மழையை நம்பி விவசாயம் செய்து வருகிறார்கள். வானம் பார்த்த பூமியான இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டு பருவ மழை கையொடுத்ததன் காரணமாக விவசாயிகள் மகிழ்ச்சியோடு நடவு பணிகளை மேற்கொண்டனர்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி மற்றும் எஸ்.எஸ்.கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் விவசாய பணிகள் தீவிரமாக நடந்தன. 10 ஆயிரம் ஏக்கருக்குமேல் இங்கு நெல் நடவு செய்யப்பட்டது. போதிய அளவு தண்ணீர் கிடைத்ததால் நெற்கதிர்கள் முளைத்து மகசூல் கிடைத்தது. தற்போது 80 சதவீதம் அறுவடை பணிகள் முடிந்து விட்டது.
சிங்கம்புணரி பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எஸ்.எஸ்.கோட்டை பகுதியில் அரசு தற்காலிக நெல் கொள்முதல் மையத்தை அமைத்துள்ளது. இதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்களை மூடை மூடையாக விவசாயிகள் ஆர்வத்துடன் கொள்முதல் மையத்திற்கு கொண்டு வந்தனர்.
ஆனால் இதில் ஒரு சில அதிகாரிகள் விவசாயிகளின் நெல் மூடைகளை உடனடியாக கொள்முதல் செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாக புகார் எழுந்துள்ளது. மூடைக்கு ரூ.50 கமிஷன் கொடுத்தால் தான்நெல் கொள்முதல் செய்யப்படுவதாக கூறப்ப டுகிறது. இதில் பணம் கொடுத்த விவசாயிகள் நெல் மூடைகள் முன்னுரிமை அடிப்படையில் முதலில் கொள்முதல் செய்வதாகவும், பணம் கொடுக்காதவர்களை அலைக்கழிப்பதாகவும் அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். தற்போது வரை எஸ்.எஸ்.கோட்டை நெல் கொள்முதல் நிலையத்தில் 2 ஆயிரம் நெல் மூடைகள் தேக்கம் அடைந்துள்ளன. இதில் 400-க்கும் மேற்பட்ட நெல்மூடைகள் போதிய பாதுகாப்பு வசதி இல்லாமலும், அதிகாரிகளின் அலட்சியத்தாலும் மழையில் நனைந்து முளைத்து விட்டது. இதை பார்த்து விவசாயிகள் ரத்த கண்ணீர் வடிக்கின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதி விவசாயிகள் கூறுகையில், இந்த வருடம் பெய்த மழை கரணமாக நல்ல மகசூல் கிடைத்தது. விளைந்த நெல்களை அரசிடம் விற்றுவிடலாம் என்று நம்பிக்கையுடன் வந்தால், அதனை வாங்காமல் அதிகாரிகள் சாக்குப்போக்கு சொல்கிறார்கள். மேலும் கமிஷனும் கேட்கிறார்கள். இதுகுறித்து கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.






