என் மலர்tooltip icon

    சேலம்

    • தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார்.
    • நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார்.

    தாரமங்கலம்:

    சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள பொத்தியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் தங்கம் (51). கூலித் தொழிலாளியான இவர் மது போதைக்கு அடிமையாகி சரிவர வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதுபோதையில் இருந்த தங்கம் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை மது என நினைத்து குடித்துள்ளார். சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த தங்கத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் தங்கம் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது பற்றி தங்கத்தின் மகன் கோகுல்நாத் கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது.
    • நேற்று இரவும் சாரல்மழையாக தொடங்கி இன்று காலை வரை விடாமல் பெய்தது.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி, தாரமங்கலம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 நாட்களாக இரவில் மழை பெய்து வருகிறது. நேற்று இரவும் சாரல்மழையாக தொடங்கி இன்று காலை வரை விடாமல் பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகள், மக்கள் செல்லும் பாதைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

    குள்போல் தேங்கிய வெள்ளம்

    மேலும் ஓமலூர் தாலுகா அலுவலக வளாகத்தில் மழைநீர் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் மனுக்களை கொடுக்க வந்த மக்கள் மழை நீரிலேயே நடந்து சென்று அதிகாரிகளை சந்தித்தனர். இங்கு தண்ணீர் வெளியேறும் வகையில் மழைநீர் கால்வாய் இல்லாததால் எப்போது மழைபெய்தாலும் தண்ணீர் தேங்கி பொதுமக்களும், அதிகாரிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    அதேபோல ஓமலூர் வருவாய் ஆய்வாளர் அலுவலக வளாகத்திலும் மழைநீர் குளம்போல தேங்கி யுள்ளது. அலுவலகத்தின் முன்பாக உள்ள பாதையில் அதிகளவில் மழைநீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இங்கு வரும் அதிகாரிகளும், மக்களும் மழைநீரிலேயே நடந்து சென்று வருகின்றனர். எனவே தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றவும், மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இந்த ஆண்டு ஆத்தூர் நகரில் எந்த பட்டாசு கடைக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை.
    • ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பு ஓடை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் கடைவீதி பஸ் நிலையம் பகுதிகளில் தங்களுக்கு சொந்தமான இடங்களிலேயே பட்டாசு கடைகள் நடத்தப்பட்டு வந்தது.

    ஆனால் இந்த ஆண்டு ஆத்தூர் நகரில் எந்த பட்டாசு கடைக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஆத்தூரில் இருந்து 3 கிலோமீட்டர் தூரம் உள்ள உப்பு ஓடை பகுதியில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பட்டாசு கடை அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

    முற்றுகை

    இந்த இடத்தை பார்வையிட தாசில்தார் வெங்கடேசன் வந்தார். அப்போது பழைய பட்டாசு கடை உரிமையாளர்கள் இந்த இடம் சரியானதாக இல்லை. நாங்கள் ஏற்கனவே வைத்திருந்த இடத்திலேயே பட்டாசு கடை வைக்க எங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கேட்டனர். மேலும் பட்டாசு கடை வியாபாரிகள் தாசில்தாரை முற்றுகையிட்டனர்.

    அப்போது அங்கு வந்த ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. தாசில்தாரிடம் இந்த இடம் போதுமானதாக இல்லை. வியாபாரிகள் கொண்டு வந்த பட்டாசுகளை பாதுகாக்கவும் முடியாது. மழை நேரம் என்பதால் இந்த இடத்தில் விற்பனை செய்ய இயலாது. வேறு இடம் வழங்க வேண்டும் என கூறினார். இது பற்றி கலெக்டரிடம் தெரிவிக்கப்படும் என தாசில்தார் வெங்கடேசன் தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    கோரிக்கை

    இது குறித்து ஜெய்சங்கரன் எம்.எல்.ஏ. கூறியதாவது:-

    தற்போது 3 கிலோ மீட்டர் தூரம் ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், வெளியூர் பயணிகள் யாரும் வாங்க முடியாத அளவிற்கு வாகன வசதி இல்லாத இடத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பட்டாசு கடைகள் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பட்டாசு கடைகாரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பொதுமக்கள் பட்டாசுகள் வாங்குவதற்கு மிகுந்த சிரமம் ஏற்படும். மாவட்ட கலெக்டர் இந்த இடத்தை மாற்றி பழைய இடத்திற்கே வியாபாரிகளுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது நிலக்கடலை மற்றும் தேங்காய் கொப்பரை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
    • விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 100 குவிண்டால் தேங்காய் கொப்பரை ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 188-க்கு விற்பனையானது.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அடுத்துள்ள கருங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தற்போது நிலக்கடலை மற்றும் தேங்காய் கொப்பரை பொது ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்த சுமார் 100 குவிண்டால் தேங்காய் கொப்பரை ரூ.7 லட்சத்து 38 ஆயிரத்து 188-க்கு விற்பனையானது. இதில் முதல் தர தேங்காய் கொப்பரை குவிண்டால் ஒன்று ரூ.8,348 முதல் ரூ.8,900 வரை விலை போனது. இதே போல் 2-ம் தர தேங்காய் கொப்பரை குவிண்டால் ஒன்று ரூ.5,055 முதல் ரூ.8,010 வரை விற்பனையானது. தொடர்ந்து இம்மையத்தில் பொது ஏலத்தில் சுற்றுப்புற விவசாயிகள் எந்த கட்டணமும் இன்றி தங்கள் விலை பொருள்களை விற்பனை செய்து கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரிப்பு.

    சேலம்:

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்ததால் அணையின் நீர்மட்டம் குறைந்தது. இதே போல் தென் மேற்கு பருவ மழை சரிவர பெய்யாததாலும், கர்நாடக அணைகளில் இருந்து உரிய தண்ணீர் திறக்காததாலும் நீர்வரத்தும் குறைந்தது.

    இதையடுத்து கடந்த மாதம் 10-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது. இதே போல் இந்த மாதம் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டிய தண்ணீரும் கர்நாடக அணைகளில் இருந்து இன்று வரை திறந்து விடப்படவில்லை.

    இதற்கிடையே கடந்த ஒரு மாதமாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் வந்து கொண்டு இருந்தது. மேலும் அணைக்கு வரும் நீரை விட குறைந்த அளவிலேயே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்ததால் நீர்மட்டம் மெதுவாக உயர்ந்து வருகிறது.

    கடந்த 2 நாட்களாக தமிழக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. நேற்று அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரத்து 498 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று வினாடிக்கு 10ஆயிரத்து 514 கனஅடியாக அதிகரித்து உள்ளது.

    இதே போல் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 55.82 அடியாக உயர்ந்தது. கடந்த மாதம் 10-ந் தேதி அணையில் தண்ணீர் நிறுத்தப்பட்ட போது 30 அடியாக இருந்த நீர்மட்டம் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 25 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 250 கனஅடியாக குறைக்கப்பட்டு உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து நீர்மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அைடந்து உள்ளனர்.

    • சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.
    • சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் வியாபாரம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்தது.

    போராட்டம்

    இதையடுத்து விவசாயிகளுக்கு ஆதரவாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் வேளாண் துறை அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள் சூரமங்கலம் உழவர் சந்தை முன்பாக காலை 6 மணி முதல் 8 மணி நேரம் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அவர் சேலம் மாவட்ட வேளாண் அதிகாரி இ-நாம் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் விற்கப்படும் காய்கறிகளுக்கு வெளி மார்க்கெட்டுகளை விட கூடுதல் விலை நிர்ணயிப்பதாகவும், விவசாயிகள் அல்லாத நபர்களிடம் இருந்து கமிஷன் பெற்றுக்கொண்டு தக்காளியை மொத்தமாக கொள்முதல் செய்து உழவர் சந்தை மூலம் விற்பனை செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகள் மூலம் மாதத்திற்கு 10 லட்சம் ரூபாய் வரை வசூல் செய்வதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.

    இந்த நிலையில் அவரையும், அவருக்கு துணை நிற்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 1 மாதத்தில் அவரை மாற்றவில்லை என்றால் போராட்டம் தீவிரமடையும் என்று அருள் எம்.எல்.ஏ கூறினார்.

    • பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.
    • உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர்.

     சேலம்:

    தமிழகத்தில் காலியாக உள்ள பெண் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் சார்பில் எழுத்துத் தேர்வு நடைபெற்றது.

    இந்த தேர்வில் சேலம் மாவட்டத்தில் 316 பேர் வெற்றி பெற்றனர். அவர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலம் குமார சாமிப்பட்டி ஆயுதப்படை மைதானத்தில் நேற்று தொடங்கியது. 316 பேருக்கு கடிதம் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 250 பேர் மட்டுமே பங்கேற்று இருந்தனர். அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல், எடை, உயரம் அளவு மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் ஆகியவை நடத்தப்பட்டது.

    2-வது நாள்

    நேற்று நடந்த உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி அடைந்த வர்களுக்கு இன்று 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஒட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.

    இதில் பெண்கள் ஆர்வமாக பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

    அனைத்து போட்டி களையும் காவல்துறை சார்பில் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

    கண்காணிப்பு

    இந்த போட்டியினை சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன், துணை கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

    தேர்வாளர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளையும் காவல்துறை சார்பில் மைதானத்தில் செய்யப்பட்டிருந்தது. உடல் தகுதி தேர்வினை முன்னிட்டு ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • நாகராஜ் அவரது உறவினர்கள்மற்றும் உதவியாளர் ஒருவர் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டிற்காக 1200 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளார்.
    • கடந்த மாதம் 10-ந் தேதி தீபாவளி சீட்டு பணத்தை பரிசுடன் வழங்குவதாக கூறிய நாகராஜ் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார்.

    சேலம்:

    சேலம் மெய்யனூரை சேர்ந்தவர் நாகராஜ் (32), இவர் சர்க்கார் கொல்லப்பட்டி முனியப்பன் கோவில் அருகில் கம்மங்கூழ் கடை நடத்தி வந்தார்.

    தீபாவளி சீட்டு

    அப்போது அந்த பகுதி மக்கள் பழக்கமானதால் கடந்த 4 ஆண்டுகளாக தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். அதை நம்பி அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானோர் அவரிடம் சீட்டு சேர்ந்து தீபாவளி பண்டிகையின் போது பணத்துடன் பரிசுகளையும் பெற்று வந்தனர்.

    நடப்பாண்டில் நாகராஜ் அவரது உறவினர்கள்மற்றும் உதவியாளர் ஒருவர் மூலம் தீபாவளி பண்டிகை சீட்டிற்காக 1200 பேரிடம் ரூ.3 கோடி வரை வசூலித்துள்ளார். கடந்த மாதம் 10-ந் தேதி தீபாவளி சீட்டு பணத்தை பரிசுடன் வழங்குவதாக கூறிய நாகராஜ் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டார். பாதிக்கப்பட்டவர்கள் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 20-ந் தேதி புகார் கொடுத்தனர்.

    தொடர்ந்து குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஜெய்சல்குமார் பாதிக்கப் பட்டவர்களிடம் விசாரணை நடத்தினார். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் ஆவணங்கள் பெறப்பட்டு வருகிறது.

    நடவடிக்கை

    வழக்கு பதிவு செய்து தலைமறைவான நாகராஜை கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கலெக்டர் கார்மேகம், மேற்கு தொகுதி எம்.எல்.ஏ. அருளிடமும் புகார் அளித்ததால் பரபரப்பு நிலவி வருகிறது.

    • ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.
    • நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது.

    ஏற்காடு:

    சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றிரவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. குறிப்பாக ஏற்காட்டில் நேற்று காலை தொடங்கிய மழை இன்று காலை வரை இடி, மின்னலுடன் சாரல் மழையாக கொட்டியது.

    இந்தநிலையில் ஏற்காடு மாரமங்களம் பஞ்சாயத்து கொம்புதூக்கி கூத்து முத்தல் கிராமம் மந்திரி தெருவை சேர்ந்த தொழிலாளி வெங்கட்ராமன் (52) என்பவர் நேற்றிரவு வீட்டின் வெளியில் படுத்திருந்தார். வீட்டிற்குள் அவரது மனைவி தனம் (46), மற்றும் அவ ரது குடும்பத்தினரான ராஜேந்திரன் (29), சந்தியா (24), பிரபாகரன் (27), மகேஷ்வரி (24), வர்ஷிணி (3), கனிஷ்கா (1) ஆகியோர் படுத்திருந்தனர்.

    எரிந்து சாம்பல்

    இந்தநிலையில் நேற்றிரவு 10 மணியளவில் வீட்டில் இடி விழுந்தது. இதில் வீடு மற்றும் வீட்டில் இருந்த பொருட்களும் எரிந்து சாம்பலானது. இந்த விபத்தால் வீட்டில் வெளியில் படுத்திருந்த வெங்கட்ராமனின் கை மற்றும் கால் செயலிழந்தது. அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வீட்டில் படுத்திருந்தவர்கள் அனைவரும் காயமின்றி தப்பினர்.

    ஆனால் வீட்டில் இருந்த அத்தியாவசிய பொருட்கள் எரிந்து சாம்பலானது. தகவல் அறிந்த ஏற்காடு போலீசாரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.
    • இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காசோளம், கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளன.

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் எடப்பாடி அடுத்த பூலாம்பட்டி கூடக்கல், குப்பனூர், மோளப்பாறை, பில்லுக்குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசன பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது.

    இதனால் இப்பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில் நேற்று இரவு பூலாம்பட்டி சுற்று வட்டார பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்தது.

    இதனால் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல், மக்காசோளம், கரும்பு, பருத்தி, வாழை, மரவள்ளி கிழங்கு வயல்களில் தண்ணீர் சூழ்ந்து சேதம் அடைந்துள்ளன.

    இதேபோல் பூலாம்பட்டி அடுத்த குப்பனூர் பகுதியில் விவசாயி சக்திவேல் என்பவர் வீட்டு அருகில் இருந்த தென்னை மரத்தில் இடி தாக்கியதில் தென்னை மரம் பற்றி எரிய தொடங்கியது. அப்போது சக்திவேலின் வீட்டிலிருந்த மின்சாதன பொருட்கள் அனைத்தும் வெடித்து சிதறின. மேலும் அப்பகுதியில் உள்ள பல வீடுகளில் மின்சாதன பொருட்கள் பழுதடைந்தது.

    பூலாம்பட்டி மற்றும் சுற்று வட்டார காவிரி பாசன பகுதியில் பெய்து வரும் தொடர் கனமழையால் இப்பகுதி விவசாயிகள் மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் ‘கொட்டைப்பாக்கு’ தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு அனுப்பப்படுகிறது.
    • எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் விளையும் பாக்குக்காய்களை பதப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் 'கொட்டைப்பாக்கு' தமிழகத்தில் வாசனை பாக்கு தயாரிப்பு நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், பீகார், குஜராத் உள்ளிட்ட பிற மாநிலங்களில் பான்பராக், பான் மாசாலா, குட்கா போன்ற பாக்கு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

    வாழப்பாடி அடுத்த சிங்கிபுரம், கொட்டவாடி, குறிச்சி, பொன்னாரம்பட்டி பகுதியில் பாக்குக்காய்களின் இருந்து கொட்டைப்பாக்கு பிரித்தெடுத்த பிறகு எஞ்சிய பாக்குத்தோலை சாலையோரம், மயானம், ஏரிகள், ஆறு, ஓடை, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகள், பொது இடங்களில் கொட்டுவது வாடிக்கையாகி விட்டது. இதுமட்டுமின்றி இந்த பாக்குத்தோலை சிலர் தீ வைத்து எரிக்கவும் செய்கின்றனர். இதனால் சுற்றுச்சூழல் மாசுபடுவதோடு மழை காலத்தில் துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.

    எனவே பொது இடங்களில் பாக்குத்தோல் கொட்டுவதை தடுத்து இவற்றை பதப்படுத்தி ஊதுபத்தி, சாம்பிராணி, கொசுவிரட்டிகள், கலப்பு உரம் தயாரிக்கவும், நாரை பிரித்தெடுத்து இன்னும் பிற மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வதற்கும் தோட்டக்கலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து வழிவகை செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    பாக்குத் தோலை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவும், முதற்கட்டமாக இதனை பதப்படுத்தி எரிபொருளாக பயன்படுத்துவதற்கும் வட்டார வளர்ச்சி அலுவலர்களும், ஊராட்சி மன்றமும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென சேலம் கலெக்டர் கார்மேகம் கடந்தாண்டு உத்தரவிட்டார். ஆனால் இத்திட்டம் இதுவரை செயல்வடிவம் பெறவில்லை.

    குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம் ஒன்றியம் கொட்டவாடி மற்றும் பேளூர் கரடிப்பட்டி ஊராட்சி எல்லையில் உள்ள வசிஷ்ட நதியால் நீர்வரத்து வரும் கொட்டவாடி ஏரியிலும் பாக்குத் தோல் குவியல்கள் தொடர்ந்து கொட்டப்பட்டு வருவதால் சுற்றுச்சூழல் பாதிப்பும், சுகாதார சீர்கேடும் ஏற்பட்டுள்ளது.

    எனவே கொட்டவாடி ஏரியில் கொட்டப்பட்டுள்ள பாக்குத்தோல் குவியல்களை அகற்றவும், இனிவரும் காலங்களில் பாக்குத்தோல் கொட்டப்படுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் கிழக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் வாழப்பாடி கோபிநாத் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
    • இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி ஒன்றியம் காட்டுவேப்பி லைப்பட்டி ஊராட்சியில் காளியம்மன் புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் கடந்த 2019–-ம் ஆண்டில் 3 மாணவர்கள் மட்டுமே படித்ததால் மூடப்படும் நிலையில் இருந்தது.

    அர்ப்பணிப்பு

    இந்நிலையில் இப்பள்ளிக்கு நியமிக் கப்பட்ட தலைமை யாசிரியர் ஸ்ரீதர், இடைநிலை ஆசிரியர் புவனேஸ்வரி ஆகியோரது முயற்சி, அர்ப்பணிப்பு கல்விப் பணியால், மாணவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்தது.

    இதுகுறித்து தகவலறிந்த முத்தம்பட்டி தனியார் பால் பண்ணை இயக்குனர் கோபால்சாமி இப்பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க உதவினார். கிராம மக்கள், மாணவர்களின் பெற்றோர்கள், தன்னார்வ லர்கள் ஒத்துழைப்பால் பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றது.

    சிறந்த தொடக்கப் பள்ளி விருது

    இப்பள்ளி பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதருக்கு தமிழக அரசு டாக்டர் ராதா கிருஷ்ணன் நல்லாசிரியர் விருது வழங்கி கவுரவித்தது. இதனைத் தொடர்ந்து 2022- 2023- ம் ஆண்டிற்கான தமிழக பள்ளி கல்வித்துறை வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த தொடக்கப் பள்ளி விருதுக்கு காளியம்மன் புதூர் பள்ளி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சிறந்த பள்ளிக்கான கேடயத்தை வழங்க உள்ளார். இவ்விருதை பள்ளி தலைமையாசிரியர் ஸ்ரீதர், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, ஆசிரியை புவனேஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.

    அரசு வழங்கும் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிக்கான விருது பெறும் காளியம்மன் புதூர் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர் மற்றும் மாண வர்களுக்கு ஊராட்சி மன்றத் தலைவர் சிவராஜ், துணைத் தலைவர் சரவணன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் சரண்யா மற்றும் கிராம மக்கள், பெற்றோர்கள், தன்னார்வ லர்கள், கல்வியாளர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    ×