search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சேலம் மாநகரில் 150 டன் பட்டாசு குப்பைகள் தேக்கம்
    X

    சேலம் மாநகரில் 150 டன் பட்டாசு குப்பைகள் தேக்கம்

    • தீபாவளி பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ெவடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
    • அதிக அளவில் பட்டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில் சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை குப்பகைள் தேங்கி உள்ளன.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் நேற்று தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பண்டிகையையொட்டி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பட்டாசுகளை ெவடித்து உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

    இதையொட்டி மாநகரில் முக்கிய பகுதிகளான அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை, கொண்டலாம்பட்டி, தாதகாப்பட்டி, அழகாபுரம், பெரமனூர், சூரமங்கலம், ஜங்சன், அரிசிபாளையம், டவுன், கிச்சிப்பாளையம், அன்னதானப்பட்டி, சீலநாயக்கன்பட்டி, பேர்லேண்ட்ஸ் உள்பட பல பகுதிகளில் அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டது.

    இதனால் அந்த பகுதிகளில் அதிக அளவில் பட்டாசு குப்பைகள் தேங்கி உள்ளது. இதில் சேலம் மாநகர பகுதியில் 150 டன் வரை குப்பகைள் தேங்கி உள்ளன. இதனை அகற்றும் பணியில் மாநகராட்சி துப்புரவு ஊழியர்கள் 1000-த்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர். இன்று மாலைக்குள் அனைத்து குப்பைகளும் அகற்றப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×