search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சிகைதான லாரி டிரைவர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு
    X

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டரை தாக்க முயற்சிகைதான லாரி டிரைவர்கள் 2 பேர் சிறையில் அடைப்பு

    • மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர்.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் பகுதியில் போக்குவரத்து பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பி (59) நேற்று முன்தினம் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக அதிவேகத்தில் வந்த லாரி ஒரு வழிப்பாதையில் திரும்பியது.

    இதனை கவனித்த அவர் அதில் இருந்த 2 டிரைவர்களையும் திரும்பி போகும்படி கூறினார். அப்போது அவர்களுக்கி டையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அந்த 2 பேரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சின்னதம்பியை தாக்க முயன்றதுடன் கொலை மிரட்டலும் விடுத்தனர்.

    இது குறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் புகார் படி சூரமங்கலம் போலீசார் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் ஈரோடு மாவட்டம் காஞ்சி கோவில் அருகே உள்ள தண்ணீர் பந்தல் பாளையம் பகுதியை சேர்ந்த ரமேஷ் (40), தருமபுரி மாவட்டம் பாப்பி ரெட்டிபட்டி அருகே உள்ள அதிகாரிப்பட்டியை சேர்ந்த விக்னேஷ் (24) என்பது தெரிய வந்தது. 2 பேரையும் கைது செய்த போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×