என் மலர்
சேலம்
- சேலம் அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது.
- தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்
சேலம்:
சேலம் மாவட்ட ஆயு–தப்–ப–டை–யில் போலீஸ்–கா–ர–ராக அன்–பு–தா–சன் (வயது 35) என்–ப–வர் பணி–யாற்றி வரு–கி–றார். டிரை–வ–ரான அவர் நேற்று போலீஸ் வாக–னத்–தில் 2-ம் நிலை காவ–லர் தேர்–வுக்கு பயன்–ப–டுத்–தப்–பட்ட பொருட்–களை ஏற்–றிக்–கொண்டு மாவட்ட போலீஸ் சூப்–பி–ரண்டு அலு–வ–ல–கத்–துக்கு சென்–றார். பின்–னர் பொருட்–களை அங்கு இறக்கி வைத்–து–விட்டு மீண்–டும் ஆயு–தப்–ப–டைக்கு வாக–னத்தை ஓட்டி வந்து கொண்–டி–ருந்–தார்.
அப்–சரா இறக்–கம் பகு–தி–யில் வந்த போது சாலையை கடக்க முயன்ற 37 வய–து–டைய நபர் மீது எதிர்–பா–ரா–த–வி–த–மாக போலீஸ் வாக–னம் மோதி–யது. இதில் தலை–யில் பலத்த காயம் அடைந்த அவரை அக்–கம்–பக்–கத்–தி–னர் மீட்டு சிகிச்–சைக்–காக சேலம் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் சேர்த்–த–னர். அங்கு டாக்–டர்–கள் பரி–சோ–தனை செய்த போது, அவர் வரும் வழி–யி–லேயே அவர் இறந்து விட்–ட–தாக தெரி–வித்–த–னர்.
இது–கு–றித்து தக–வல் கிடைத்–த–தும் செவ்–வாய்–பேட்டை போலீ–சார் அங்கு விரைந்து சென்று விசா–ரணை நடத்–தி–னர். இதில் இறந்–த–வ–ரின் சட்–டைப்–பை–யில் அரசு ஆஸ்–பத்–தி–ரி–யில் பொதுப்–பி–ரி–வில் புற–நோ–யா–ளி–யாக சிகிச்சை பெற்–ற–தற்–கான சீட்டு இருந்–தது. அதில் ரவிக்–கு–மார் (37)
- சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன.
- சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
சேலம்:
சேலம் சரகத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மொத்தம் 41 மனமகிழ் மன்றங்கள் உள்ளன. இதில் நலிவுற்ற குழந்தைகளை ஊக்குவிக்கவும், அவர்களை சிறுவயதிலேயே குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் மற்றும் குற்றவாளிகளிடம் இருந்து பாதுகாக்கவும் காவல் மனமகிழ் மன்றங்கள் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.
சேலம் சரக காவல்துறை துணை தலைவர் ராஜேஸ்வரி உத்தரவின் படி 41 மனமகிழ் மன்றங்களிலும் ஓவிய போட்டி நடத்தப்பட்டது. இதில் 2000 மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.
அவர்களுக்கு அந்தந்த உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்கள். இந்த தகவலை சேலம் சரக காவல்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
- ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்தது.
- காட்டுத் தீ மளமளவென ஒவ்வொரு மரங்களாக பரவி எரிந்து வருகிறது
ஏற்காடு:
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காடு, சேர்வராயன் மலைத்தொடரில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 1515 மீட்டர், அதாவது 4969 அடி உயர்த்தில் உள்ளது. இதன் பரப்பளவு 382.67 ச.கிமீ. இங்கு நட்சத்திர ஆப்பிள், அத்தி, நீர் ஆப்பிள், பேரி, வாழை, ஆரஞ்சு, கொய்யா, கருப்பு மிளகு, ஏலக்காய் போன்றவை ஏற்காட்டில் விளைகின்றன. சந்தனம், தேக்கு மற்றும் சில்வர் ஓக் மரங்கள் உள்ளன. காட்டு விலங்குகள் காட்டு எருமை, மான், முயல்கள், நரிகள், கீரிப்பிள்ளை, அணில், கௌதாரி, பாம்புகள், குருவி, பருந்து இங்கு வாழ்கின்றன.
இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் கடும் பனிப்பொழிவு இருந்து வருகிறது. மேலும் பகல் நேரங்களில் வெப்பத்தின் தாக்கமும் அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள புற்கள், செடி, கொடிகள் காய்ந்துள்ளன.
இந்த நிலையில் நேற்று மாலை ஏற்காடு வனப்பகுதியில் உள்ள குண்டூர் காட்டில் திடீரென தீப்பிடித்தது. இந்த காட்டுத் தீ மளமளவென ஒவ்வொரு மரங்களாக பரவி எரிந்து வருகிறது. இதனால் அங்குள்ள விலை உயர்ந்த மரங்கள், மூலிகை செடிகள், கொடிகள் தீக்கிரையாகி உள்ளன. மேலும் வன உயிரினங்களும் தீயில் சிக்கி உயிரிழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
தீபிடித்துள்ள இந்த பகுதி ஏற்காடு அடிவாரம் அருகாமையில் உள்ளது. தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் காட்டு தீ தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக பரவி வருவதாலும், அந்த இடங்கள் செங்குத்தான பகுதியாக இருப்பதாலும் அங்கு தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியவில்லை. இதனால் , தீயை முழுமையாக கட்டுக்குள்கொண்டு வர முடியாமல் வனத்துறையினர், தீயணைப்புத் துறையினர் திணறி வருகின்றனர்.
இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீயை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வருவாய் துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள் தீ பரவியுள்ள இடத்தை பார்வையிட்டு தீயை அணைக்க பல்வேறு ஆலோசனைகள் வழங்கி உள்ளனர்.
- விசாரணையில் அவர் ஏற்கனவே ஒரு போலீஸ் ஜீப்பை இந்த மைதானத்தில் இருந்து திருடி இருப்பது தெரியவந்தது.
- போலீஸ் ஜீப் திருட்டு போன சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் 2-ம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த மைதானத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் ஜீப் ஒன்றை தாரமங்கலம் தொளசம்பட்டி பிரிவு ரோட்டை சேர்ந்த மதன்குமார் (வயது 38) என்பவர் திருட முயன்றார். இதை கண்ட போலீசார், அவரை கையும், களவுமாக பிடித்தனர்.
விசாரணையில் அவர் ஏற்கனவே ஒரு போலீஸ் ஜீப்பை இந்த மைதானத்தில் இருந்து திருடி இருப்பது தெரியவந்தது. தற்போது 2-வது முறையாக திருட வந்தபோது மதன்குமார் சிக்கினார்.
இதையடுத்து அஸ்தம்பட்டி போலீசார், மதன்குமாரை கைது செய்து அவரிடம் இருந்து திருடப்பட்ட போலீஸ் ஜீப்பை மீட்டனர். அவர் முதல்-அமைச்சரின் பொது நிவராண நிதித்துறை உதவி இயக்குனர் என்ற அடையாள அட்டை வைத்திருந்தார். பிளஸ்-2 வரை படித்துள்ள மதன்குமார், இந்த அடையாள அட்டையை போலியாக தயாரித்து தனது சொகுசு கார் முன்பக்கத்தில் அரசு முத்திரை பொருத்தி வலம் வந்து அரசு அதிகாரி போல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டி உள்ளார் என்பது தெரியவந்தது. அவர் பயன்படுத்திய சொகுசு காரை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
போலீஸ் ஜீப் திருட்டு போன சம்பவம் உயர் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்நிலையில் ஜீப் திருட்டு போனது குறித்து, 3 நாளில் விசாரித்து அறிக்கை அளிக்க, ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார் உத்தரவிட்டுள்ளார் அதன்படி துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்ரமணி விசாரணையை தொடங்கியுள்ளார். அவர் வழங்கும் அறிக்கையின்படி, சம்பந்தப்பட்ட போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
- சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காட்டுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏற்காட்டில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக வளர்க்கப்படும் பூச்செடிகள் தொடர்ந்து பராமரிப்பு செய்யப்பட்டு வருகிறது.
தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளின் வருகை வழக்கத்தை விட அதிகமாக உள்ளது. அங்குள்ள சுற்றுலா தலமான அண்ணா பூங்கா மற்றும் ரோஜா தோட்டம், தாவரவியல் பூங்காவில் இன்று சுற்றுலா பயணிகள் திரண்டனர்.
இந்த பூங்காக்களில் 650-க்கும் மேற்பட்ட ரோஜா ரகங்கள் நடவு செய்யப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக டபுள் டிலைட், மார்கோ போலோ, மேஜிக் லேண்டர், பேமிலி, மூன் ஸ்டோன், சம்மர் ஸ்நோ, ரெட் பிரான், சம்மர் டைம், பர்புல் மூன், மில்கி வே, சில்வர் லிவிங், டேபிள் மவுண்டைன், புளோரி போன்ற ரகங்கள் சுட்டெரிக்கும் வெயிலுக்கு இதழ்கள் விரிந்து பூத்து குலுங்குகிறது.
அதனை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து மகிழ்ந்தனர். அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஏரி பூங்கா போன்ற இடங்களில், சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் சுற்றிப்பார்த்து பொழுது போக்கி மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் ரோஜா மலர்களை கண்டு ரசித்ததுடன், செல்போன்களில் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.
இனிவரும் காலங்களில், சூழல் பூங்கா மற்றும் படகு இல்லம், பக்கோடா பாயிண்ட், லேடிஸ் சீட் போன்ற இடங்களில் சுற்றுலா பயணிகளை வருகை அதிகமாக இருக்கும் என்பதால், ரோஜா தோட்டத்தில் பராமரிப்பு பணிகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளது.
- தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
- இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை.
சேலம்:
சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54).
என்ஜினீயர்
இவர் குடும்பத்துடன் பக்ரைன் நாட்டில் தங்கி, என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ரெட்டிபட்டியில் உள்ள கோவிந்தராஜன் வீட்டை, அவரது மாமனாரான ஜாகீர்காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி பராமரித்து வருகிறார்.
இதையடுத்து தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
இந்த வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது, அதன் பதிவுகளை பழனிச்சாமி தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் பார்த்துக் கொள்வார்.
வெள்ளிப்பொருட்கள், நகை திருட்டு
இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், பழனிச்சாமி செல்போனில் பார்த்தபோது, கோவிந்தராஜின் வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.
அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த இருந்த 4 தங்க காசுகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீட்டிலிருந்த சொகுசு காரும் திருடுபோய் இருந்தது
இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ்(வடக்கு) துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.
கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த வீடு மற்றும் தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
சூப்பர் மார்க்கெட், டெய்லர் கடையில் கொள்ளை
சேலம் வீராணம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்(48). இவர் மன்னார் பாளையம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இரவு ரத்தினவேல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சோப்பு மற்றும் பேஸ்ட், கல்லாவில் இருந்த ரூ.800, ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.
இது குறித்து ரத்தினவேல் உடனடியாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.
இதே போல் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோடு பாறை வட்டம் அருகே உள்ள சிவாயநகர் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது வாடிக்கையாளர்களின் துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. கல்லாவில் ஏதும் பணம் வைக்காததால் திருட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இருப்பினும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது.
- இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கோட்டை மைதானத்தில் இருந்து நாட்டாமை கட்டிடம் வரை பேரணி நடந்தது. பேரணிக்கு மாநில துணை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார்.
ஓய்வூதியர் சங்க மாநில துணைத்தலைவர் சுப்ரமணியம் பேரணியை தொடங்கி வைத்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயலாளர் சுரேஷ் பேசினார்.
இந்த பேணியில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைவருக்கும் பழைய ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஆட்குறைப்பு அரசாணைகள் ரத்து செய்யப்பட வேண்டும்.
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலமாக செயல் படுத்த வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத கால பணி நீக்க காலத்தை பணிக்காலமாக மாற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது.
- கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாவட்டத்தில் வாழப்பாடி, ஆத்தூர், தம்மம்பட்டி, கெங்கவல்லி, ஓமலூர், மேச்சேரி, மேட்டூர், பனமரத்துப்பட்டி, கம்மாளப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நிலக்கடலை விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு பெய்த தொடர் மழை காரணமாக அனைத்து பகுதிகளிலும் நிலக்கடலை விளைச்சல் அதிகரித்துள்ளது. குறிப்பாக பொங்கலுக்கு பிறகு நிலக்கடலை அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது விவசாயிகள் பள்ளப்பட்டி வேளாண்மை கூட்டுறவு விற்பனை நிலையத்திற்கும், லீபஜார் மார்க்கெட்டுக்கும் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு வரும் நிலக்கடலையை எண்ணெய் உரிமையாளர்கள், திண்பண்டம், பலகார உற்பத்தியாளர்கள் வந்து ஏலம் எடுத்துச் செல்கின்றனர். வரத்து அதிகரித்து வருவதால், விற்பனை நன்றாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- திராவிட கழகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- மாவட்ட செயலாளர் வைரம் தலைமை தாங்கினார். திராவிட கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆர்பட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
சேலம்:
நீதி துறையில் சமூக நீதியை நிலைநாட்ட வலியுறுத்தி திராவிட கழகத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகம் எதிரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் வைரம் தலைமை தாங்கினார். திராவிட கழக பொதுச் செயலாளர் அன்புராஜ் ஆர்பட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் உயர் சாதியினர் சார்ந்த நீதிபதிகள் இருப்பதால் அவர் வழித்தோன்றல்கள் தொடர்ந்து முக்கிய பதவிகளில் பணியுமரத்தப்படுவதாகவும் இதனால் தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மூத்த நீதிபதிகள் புறக்கணிக்கப்படு வதாகவும் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் திராவிட கழக பொதுச்செய லாளர் சந்திரசேகரன், மாவட்ட தலைவர் பழனி, புள்ளையண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
- சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.
சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.
சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.
இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது.
- சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.
சேலம்:
சேலம் அஸ்தம்பட்டி அருகே உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை தேசிய மக்கள் நீதிமன்றம் கூடியது. இதனை தொழிலாளர் நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுமதி தலைமை வகித்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் பேசியதாவது, சமரச நீதிமன்றம் மூலம் வழக்குகள் விரைந்து முடிக்கப்படுகிறது. இதனால் நீதிமன்ற கட்டணம் உடனே திருப்பி வழங்கப்படுகிறது. இது தவிர நேரம் மீதமாகிறது.
சமரச நீதிமன்றம் மூலம் தீர்வு காணப்பட்ட வழக்குகளுக்கு மேல்முறையீடு செய்ய முடியாது. சமரச மையம் மூலம் தீர்வு காண்பவர்கள் உறவினர்களிடமும், பொதுமக்களிடமும், விளக்கி இம்மையம் மூலம் தீர்வு காண உதவிட வேண்டும். இதேபோல் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வழக்கறிஞர்கள் உதவிட வேண்டும். இவ்வாறு நீதிபதி சுமதி பேசினார்.
சேலத்தைச் சேர்ந்த பார்த்திபன் என்பவர் கடந்த 2017-ம் ஆண்டு கார் மோதி தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த படுகாயம் அடைந்தார். சிகிச்சை பின் குணமடைந்த அவர், சமரச தீர்வு மையம் மூலம் வழக்கு தொடர்ந்தார்.
இதனை நீதிபதிகள் விசாரித்து படுகாயம் அடைந்த பார்த்திபனுக்கு ரூ.52 லட்சத்து 78 ஆயிரத்து 642 நஷ்ட ஈடு தொகை வழங்க உத்தரவிட்டனர். பார்த்திபனுக்காக வழக்கறிஞர் ரகுபதி வாதாடினார்.
இதற்கான காசோலையை, இன்று நீதிபதிகள் பார்த்தீபனிடம் வழங்கினர். இதேபோல் ராணி என்பவரின் மகன் விபத்தில் இறந்துவிட்டார். இதனையடுத்து ராணிக்கு ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்திற்கான காசோலை இன்று வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நீதிபதிகள் ஜெகநாதன், தங்கராஜ், ஸ்ரீ ராம ஜெயம், மதிவாணன் மற்றும் வழக்கறிஞர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
- கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
- நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி அருகே பெருமாம்பாளையம் காலனியைச் சேர்ந்த மாணவன் நாகராஜன்(16). இவர் கோனூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.
நேற்று மாலை பள்ளியின் காம்பவுண்ட் சுவர் அருகே, நாகராஜன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது காம்பவுண்டு சுவரின் மேல் இருந்த கற்கள் மாணவன் நாகராஜன் மீது விழுந்துள்ளது. இதில் மாணவன் படுகாயம் அடைந்தான்.
இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, மாணவனை நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பரமத்தி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






