என் மலர்
சேலம்
- மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
- அணையில் தற்போது 74.54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இந்த நிலையில் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு வினாடிக்கு 9,917 கன அடியில் இருந்து 11,526 கன அடியாக அதிகரித்துள்ளது.
மொத்தம் 120 அடி கொண்ட மேட்டூர் அணையின் நீர்மட்டம் 107.24 அடியாக உள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் 12,000 கனஅடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் தற்போது 74.54 டிஎம்சி தண்ணீர் இருப்பு உள்ளது.
- 3 வருட காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை.
- பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.
எடப்பாடி பழனிசாமி வீரப்பம்பாளையத்தில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கே. விஜய் அ.தி.மு.க.வை விமர்சிக்காதது குறித்து?
ப. எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் சரி, அம்மாவுக்கு பிறகும் சரி நிறை திட்டங்களை தந்து நிறைவேற்றப்பட்டு மக்கள் செல்வாக்கு பெற்ற கட்சி அ.தி.மு.க., அதனால் அ.தி.மு.க.வை விஜயால் எப்படி விமர்சிக்க முடியும்.
கே. தி.மு.க.வில் கூட்டணி பிளவு ஏற்பட்டுள்ளது என எதை வைத்து சொல்கிறீர்கள்?
ப. காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டணியில் பங்கு என அறிவிப்பு வெளிட்டு இருக்கிறார்கள். அதுபோல் விடுதலை சிறுத்தை கட்சி வெளியிட்டு இருக்கிறது. கம்யூனிஸ்ட்டு கட்சி போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து போராடுகின்றபோது கூட்டணியில் பிளவு என்று பார்க்க வேண்டியது தானே.
3 வருட காலமாக தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகள் இதுவரைக்கும் இப்படி பேசியது இல்லை. மக்கள் பிரச்சனைக்காக எந்த போராட்டமும் செய்யவில்லையே. அண்மை காலமாகதானே இதை எல்லாம் அறிவிக்கிறாங்க. இதனால் தான் அவர்களுடைய நடவடிக்கையை வைத்துதான் கூட்டணியில் பிளவு இருப்பதாக தெரிவிக்கிறோம்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தபிறகு பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லை. ஆங்காங்கே வன்முறை. நம்முடைய வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பெருமாம்பட்டி பகுதியில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் பிரச்சனை செய்தவர்களிடம் அமைதியாக போங்க என தட்டி கேட்கிறார். அதற்காக அவரது வீட்டின் கூரை மீது ஏறி உடைச்சு உள்ளே இருந்த அவரை பிடித்து இழுத்து வெளியே போட்டு அடித்து உதைக்கிறாங்க. எனவே பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை இந்த ஆட்சியில் உருவாகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது.
- தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
சேலம்:
எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கின்றீர்கள் என்றால் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.
மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது.
தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க.

குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணுகிறீங்க. தன்னுடைய மகனை பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தி உண்டாக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறீங்க. எந்த ஒரு முயற்சியும் எடுபடாது.
மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையும் விழிப்புணர்வு கொண்ட மக்கள். 2011-க்கு பிறகு 2021 வரை அதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது என சற்று நினைத்து பாருங்கள்.
எடப்பாடி தொகுதி என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எடப்பாடியிலேயே இருக்கின்றார் என்கிற ஒரு அடையாளத்தை இன்றைக்கு தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.
10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டினோம்.
தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சி சொல்வதை காது கொடுத்து கேட்பது கிடையாது. தி.முக. ஸ்டாலின் ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என எவ்வளவோ சூழ்ச்சி செய்தாங்க. ஆனால் நடக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
- விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர்.
- இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
மேட்டூர்:
மேட்டூர் காவிரி- சரபங்கா உபரி நீரேற்று திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள வறண்ட வடிநில வட்டத்தில் உள்ள 100 ஏரிகளை நிரப்பும் விதமாக 565 கோடி ரூபாய் திட்ட மதிப்பீட்டில் உபநீர் திட்டத்தை செயல்படுத்திய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நீரேற்று திட்டத்தின் மூலம் பயன்பெறும் மேட்டூர், ஓமலூர், எடப்பாடி, சங்ககிரி உள்ளிட்ட பகுதியை சேர்ந்த விவசாயிகள் சார்பில் வருகிற 17-ந்தேதி பாராட்டு விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவை உபர் நீர் திட்டத்தில் முதல் ஏரியாக இருக்கும் எம். காளிப்பட்டி ஏரி அருகே நடத்துவது என விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இதனை முன்னிட்டு விழா நடைபெறும் இடத்தை சேலம் புறநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் இளங்கோவன், எம்.எல்.ஏ. மணி, எம்.பி. சந்திரசேகரன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு விழா மேடை அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட செயலாளர் இளங்கோவன் தெரிவித்தார்.
- நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
- கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி தண்ணீர் மற்றும் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை ஆகியவற்றை பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கிறது. அதன்படி நேற்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,325 கன அடியாக இருந்தது.
இன்று நீர்வரத்து மேலும் குறைந்து வினாடிக்கு 6,712 கன அடி தண்ணீர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. நீர்மட்டம் 107.50 அடியாகவும், நீர் இருப்பு 74.90 டி.எம்.சி.யாகவும் உள்ளது. தமிழக காவிரி டெல்டா பசானத்துக்கு மேட்டூர் அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 12,000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது.
- அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
சேலம்:
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று வினாடிக்கு 20 ஆயிரத்து 255 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று காலை 14 ஆயிரத்து 273 கனஅடியாக குறைந்தது.
நீர்வரத்து கணிசமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.22 அடியை தொட்டது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 2500 கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 75.90 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
- அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
சேலம்:
தமிழக, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கடந்த சில நாட்களாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டமும் வேகமாக உயர்ந்து வருகிறது.
நேற்று அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 475 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று 20 ஆயிரத்து 255 கனஅடியாக குறைந்தது. அணையின் நீர்மட்டம் 107.54 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக 20 அடிக்கு குறையாமல் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
- வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
- சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேட்டூர்:
சேலம் மாவட்டம் நங்கவள்ளி வாரசந்தையில் இன்று ஞாயிற்றுகிழமையை முன்னிட்டு ஆடு விற்பனை அமோகமாக நடைபெற்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சந்தையில் இன்று காலை 6 மணிக்கு மேச்சேரி, மேட்டூர், நங்கவள்ளி, தாரமங்கலம், ஓமலூர், காடையாம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. அதுபோல் நாட்டு இன கோழிகள் அதிக எண்ணிக்கையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
10 கிலோ எடை கொண்ட ஆடு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது. 10 கிலோ ஆட்டு கிடாய் ரூ.12 ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.
தீபாவளி பண்டிகைக்காக ஆடுகளை வாங்க ஏராளமானோர் குவிந்ததால் ஆடுகள் விலை 3 ஆயிரம் ரூபாய் முதல் 4 ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்து விற்பனையானது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆடுகளை போட்டி போட்டு வாங்கிச்சென்றனர். இன்று ஒரே நாளில் ஆடுகள், கோழிகள், மாடுகள் வியாபாரம் ரூ.2 கோடிக்கு மேல் நடைபெற்றதாக சந்தை பராமரிப்பாளர்கள் தெரிவித்தனர்.
சந்தைக்கு கொண்டுவரப்பட்ட ஆடுகளுக்கு நல்ல விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் ஆடு வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது. ஆடு வளர்ப்பு என்றாலே பெரும்பான்மையானோருக்கு நினைவுக்கு வருவது வெள்ளாடுகள்தான். ஆனால், வெள்ளாடுகளுக்கு நிகராக செம்மறியாடுகள் வளர்ப்புக்கு மிகவும் ஏற்றவையாக உள்ளது. இதனால் பெரும்பாலோனார் மேச்சேரி செம்மறியாடுகளை தேர்வு செய்கிறார்கள். இதனால் செம்மறி ஆடுகள் விற்பனை இன்று அமோகமாக இருந்தது என்றனர்.
- அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
- மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம்:
தமிழக, கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த சில நாட்களாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. நேற்று காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33,148 கன அடியாக இருந்தது. இன்று காலையில் நீர்வரத்து சற்று குறைந்து வினாடிக்கு 30,475 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 2,500 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 600 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவை விட, அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.
இன்று காலை 8 மணி அளவில் மேட்டூர் அணை நீர்மட்டம் 106.48 அடியாக உயர்ந்து உள்ளது. நீர் இருப்பு 73.49 டி.எம்.சி.யாக உள்ளது. மேட்டூர் அணை வேகமாக நிரம்பி வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
- ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம்.
- எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
சேலம்:
சேலத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சட்டமன்றத் தேர்தலின் போது பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை பரிசீலனை செய்து இதுவரை 90 சதவீத மனுக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. தற்போது ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சி வாரியாக மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளில் அமைச்சராகவும், முதலமைச்சராகவும் இருந்த எடப்பாடி பழனிசாமியின் சொந்த தொகுதியிலேயே தற்போது 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனுக்கள் குவிந்துள்ளன.
அவர் தனது தொகுதிக்கு கூட எதுவும் செய்யவில்லை. தற்போது தேர்தல் ஜூரம் வந்துவிட்டதால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உளறிக் கொண்டிருக்கிறார். அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து முதலமைச்சர் வழியில் மக்கள் பணிகளில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
சேலம்:
கர்நாடக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை தீவிரமாக பெய்து வருவதால் அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
இதே போல் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஒரு வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 31 ஆயிரத்து 575 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று 33 ஆயிரத்து 148 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டமும் 104.76 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 7500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் அது 2500 கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு தொடர்ந்து 600 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட குறைந்த அளவிலேயே திறக்கப்பட்டு வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது அணையில் 71.14 டி.எம்.சி..தண்ணீர் இருப்பு உள்ளது.
- பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர்.
- போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேலம்:
சேலம் மூலப்பிள்ளையார் கோவில் வண்டிக்கார தெரு பகுதியில் ஒரு குக்கர் தயாரிக்கும் நிறுவனம் இயங்கி வருகிறது.
இந்த நிறுவனத்தை ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தேக்ராஜ் (50) என்பவர் நடத்தி வருகிறார். நேற்றிரவு வழக்கம் போல நிறுவனத்தில் பணி முடிந்த பின் ஊழியர்கள் மற்றும் மேலாளர் மாதேஸ் ஆகியோர் நிறுவனத்தை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணியளவில் அந்த நிறுவனத்தில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த பகுதியினர் மேலாளர் மாதேசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து வந்த அவர் செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கும், அன்னதானப்பட்டி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.
உடனே தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே மளமளவென பரவிய தீ கொளுந்து விட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சி அளித்ததால் தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்ல முடியாமல் தவித்தனர் .
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் தூரத்தில் நின்று தண்ணீரை பீய்ச்சி அடித்து சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அக்கம் பக்கம் பரவாமல் தடுத்து தீ அணைக்கப்பட்டது.
இந்த தீ விபத்தில் அந்த நிறுவனத்தில் இருந்த குக்கர் தயாரிக்கும் பல லட்சம் மதிப்பிலான உதிரி பாகங்கள் எரிந்து சேதமானதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த நிறுவனம் பாதி அளவு எரிந்து உருக்குலைந்து காட்சி அளித்தது.
மின் கசிவால் இந்த தீ விபத்து நடைபெற்றதாக போலீசார் கூறினர். மேலும் வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






