என் மலர்
சேலம்
- சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
- அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர்.
சேலம்:
தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை காவல் துறை தலைவர் காமினி, கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி ஆகியோர் சேலம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புல னாய்வுத்துறை அலுவலகத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது அத்தியா வசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், வெளிமாநிலங்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல்கள் ஏதும் நடைபெறக் கூடாது என்றும், தொடர்ந்து வாகன தணிக்கைகள் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அத்தியாவசியப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் சம்மந்தமாக சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் சேமிப்பு கிடங்குகள் மற்றும் உற்பத்தி ஆலைகள் ஆகியவைகளை கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வர வேண்டும் என்றும் அறிவுரைகள் வழங்கினார்.
தொடர்ந்து நேற்று கோவை மண்டல காவல் கண்காணிப்பாளர் பாலாஜி தலைமையில் காவல் துணை கண்காணிப்பாளர் விஜயகுமார், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜா, காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி ஆகியோர் குழு தனியார் கிடங்கு உரிமையாளர்களிடம் அத்தியாவசியப் பொருட்களை சட்டத்திற்கு புறம்பாக சேமித்து வைக்கக்கூடாது என்று அறிவுரைகள் வழங்கினர். மீறினால் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர்.
- தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
- லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
சேலம்:
நாடு முழுவதும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் இயங்குகிறது . இதில் தமிழகத்தில் மட்டும் 6 லட்சத்திற்கும் அதிகமான லாரிகள் இயக்கப்படுகின்றன. இதில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தமிழகத்தில் இருந்து வட மாநிலங்களுக்கு இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த தொழிலை நம்பி டிரைவர், கிளீனர் புக்கிங் ஏஜென்டுகள், லாரிகளின் உதிரி பாகங்கள், பஞ்சர் கடைகள், பெட்ரோல் டீசல் பங்குகள் என லட்சக்கணக்கானோர் உள்ளனர்.
தமிழகத்திலிருந்து வட மாநிலங்களுக்கு குறிப்பாக ஜவுளி, முட்டை, இரும்பு தளவாடங்கள், சிமெண்ட், எலக்ட்ரானிக் பொருட்கள், கெமிக்கல், கல் மாவு, ஜவ்வரிசி, வெல்லம் தேங்காய், காய்கறிகள் உள்பட பல் வேறு பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்றன .
இதே போல வட மாநிலங்களில் இருந்து வெங்காயம், பூண்டு, பருப்பு ஆப்பிள் மற்றும் ஜவுளிகள் உட்பட பல்வேறு பொருட்கள் தமிழகத்துக்கும் கொண்டு வரப்படுகின்றன. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி ரூபாய் மதிப்பில் வருவாய் கிடைத்து வருகிறது.
சமீபகாலமாக டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம், லாரிகளுக்கான பொருட்கள் விலை பன்மடங்கு உயர்வு உள்பட பல்வேறு காரணங்களால் லாரி தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டெல்லி, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், குஜராத், உத்தரபிரதேசம், கர்நாடகா, இமாச்சல் பிரதேஷ் உட்பட வடமாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது .
இதனால் வட மாநிலங்களில் பெரும்பாலான தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் முடங்கி உள்ளன. மேலும் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்திலிருந்து வட மாநிலத்திற்கு செல்லும் லாரிகளில் 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட லாரிகள் லோடு கிடைக்காமலும், வட மாநிலத்திற்கு செல்ல முடியாமலும் தமிழகத்தில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக லாரி தொழில் மற்றும் அதனை நம்பியுள்ள தொழில்களும் முற்றிலும் முடங்கியுள்ளன. மேலும் வட மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படும் ஜவுளி, பட்டாசு, இரும்பு தளவாடங்கள், கெமிக்கல், கல்மாவு, ஜவ்வரிசி, தேங்காய், வெல்லம், மஞ்சள், அரிசி, எலக்ட்ரானிக் பொருட்கள் ஆகியவை தேங்கியுள்ளன.
வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு கொண்டுவரப்படும் பொருட்களும் தேக்கம் அடைந்துள்ளன. இதனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 10 நாட்களில் ஆயிரம் கோடிக்கும் மேலான பொருட்கள் தேங்கியுள்ளன. ஏற்கனவே காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் விலை உயர்ந்துள்ள நிலையில் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது. லாரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் லாரி உரிமையாளர்களுக்கும் கடந்த 10 நாட்களில் மட்டும் 20 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது டிரைவர், கிளீனர்களும் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள்.
- ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.
- அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஓமலூர்:
ஓமலூர் ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் செல்வி ராமசாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் 18-வது வார்டு த.மா.கா. உறுப்பினர் பாப்பா சின்னையன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பச்சனம்பட்டியில் உள்ள நூலக நிலத்தை மீட்க 2 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், ஒன்றிய அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், ஆக்கிரமிப்பாளர்களுக்கு துணையாக இருப்பதாக கூறினார்.
அதேபோல ஒரு தனி நபர் எந்தவித அனுமதியும் இல்லாமல் ஜல் ஜீவன் பைப்லைனில் மோட்டார் வைத்து தண்ணீர் உருஞ்சுகிறார். தனிப்பட்ட முறையில் அவரே பைப்லைன் போட்டுள்ளார். இதற்கும் அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்குகிறார்கள். இதற்கு அதிகாரிகள் தரப்பில் முறையான நடவடிக்கை இல்லை என்றார்.
அப்போது திடீரென அவர் பையில் எடுத்து வந்த மண்ணெண்ணையை கூட்ட அரங்கிலேயே உடலில் ஊற்றி கொண்டு தீக் குளிக்க முயன்றார். இதனால், மன்ற கூட்டத்தில் அதிர்ச்சியும் பரபரப்பும் ஏற்பட்டது. அப்போது அங்கிருந்த ஊழியர்கள் த்ண்ணீரை அவர் மீது ஊற்றினர். தொடர்ந்து அதிகாரிகள் கவுன்சிலர் பாப்பாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
ஆனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, உறுப்பினர் பாப்பா, அவரது கணவர் சின்னையன் ஆகியோர் ஒன்றிய அலுவலகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து பாப்பாவிற்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால், ஓமலூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க வேண்டும். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விட கூடுதலாக தங்களுக்கு தேவையான தீர்மானத்தை பொய்யாக ஒட்டி பல மோசடி வேலைகளை அதிகாரிகள் செய்துள்ளனர். அதனால், கடந்த கால தீர்மான நகல்களை வழங்க வேண்டும் என்று தி.மு.க. உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், 100நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் முறைகேடுகளை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். அதேபோல பட்டா இல்லாத அரசு புறம்போக்கு நிலத்தில் அரசு வீடுகள் கட்ட ஊராட்சி தலைவர்கள் அனுமதி வழங்கி வீடுகள் கட்டி வருகின்றனர். அதிகாரிளும் இதுபோன்ற முறைகேடுகளுக்கு துணையாக உள்ளதாக புகார் தெரிவித்தனர்.
அதனால் கூட்டத்தில் எந்தவித தீர்மானமும் நிறைவேற்றக் கூடாது, கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். தீர்மான நகல்களை வழங்கிய பின்னர் முறையாக கூட்டம் நடத்தலாம் என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து சென்றனர். அ.தி.மு.க. உறுப்பினர்கள் தீர்மானத்தில் கையெழுத்திட்டதால் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 107 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 130 கன அடியாக அதிகரித்தது.
- அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 107 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 130 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 78.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 77.61 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 39.61 டி.எம்.சி.யாக உள்ளது.
- கிராமங்களில் இருந்த இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
- நீர்மட்டம் குறையும்போது பண்ணவாடி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேசுவரர் ஆலய நந்தி சிலை ஆகியன வெளியே தெரியும்.
மேட்டூர்:
மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பு பண்ணவாடி, காவேரிபுரம், கோட்டையூர் போன்ற கிராமங்கள் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியில் அமைந்துள்ளன. அணை கட்டப்பட்டபோது அந்த கிராமங்கள் தண்ணீரில் மூழ்கியதால், கிராமத்தை சேர்ந்தவர்கள் வெளியேறி வெவ்வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்தனர்.
ஆனால் அந்த கிராமங்களில் இருந்த இந்து, கிறிஸ்தவ ஆலயங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது பண்ணவாடி கிராமத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலய கோபுரம், ஜலகண்டேசுவரர் ஆலய நந்தி சிலை ஆகியன வெளியே தெரியும்.
தற்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்துள்ளதால் சுமார் ஒரு அடி அளவிற்கு கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே காட்சி அளிக்கிறது. அணையின் நீர்மட்டம் 68 அடிக்கு கீழ் குறையும் போது, ஜலகண்டேஸ்வரர் ஆலய நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரியும்.
கடந்த 2 ஆண்டுகளாகவே அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 80 அடிக்கு மேல் இருந்ததால் இந்த ஆலயங்களை தண்ணீர் மட்டத்துக்கு மேல் காண முடியாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.
- சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவி 25 சென்ட் நிலம், 10 சென்ட் நிலம் தனித்தனியாக பத்திரம் முடித்து கொடுத்தார்.
- சசிகுமார் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்
சேலம்:
சேலம் மாவட்டம் ஜல கண்டாபுரம் அருகே உள்ள பச்சைகுப்பனூர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவர் மோட்டார் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் ரவி தனது தொழிலை பேம்படுத்த கடன் வாங்க திட்டமிட்டார். இதற்காக ஜலகண்டா புரத்தை சேர்ந்த கண்ணன் என்ற புரோக்கரி டம் தனது நிலத்தின் பத்திரத்தை கொடுத்தார்.
இதனிடையே சேலம் கன்னங்குறிச்சி ஏரிக்காடு பதுகியை சேர்ந்த சசிக்குமார் என்பவர் ரவியின் செல்போனில் தொடர்பு கொண்டு தான் ரூ.40 லட்சம் கடன் தருவதாகவும், அதற்கு தனது பெயரில் நிலத்தை கிரயம் செய்து கொடுக்கவேண்டும் என்றும் கூறினார்.
இதை தொடர்ந்து ஜல கண்டாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ரவி 25 சென்ட் நிலம், 10 சென்ட் நிலம் தனித்தனியாக பத்திரம் முடித்து கொடுத்தார். இதையடுத்து சசிகுமார் 20 ரூபாய் வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக்கொண்டார்,
பின்னர் ரவியின் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 37 ஆயிரம் மட்டும் செலுத்தி யுள்ளார். மீதி பணம் குறித்து ரவி கேட்ட போது இப்போது மாலை நேரம் என்பதால் வங்கியில் பணம் எடுக்க வில்லை நாளைக்கு என் வீட்டுக்கு வாங்க தருகிறேன் என்று கூறியுள்ளார்.
மறு நாள் ரவி சேலம் கன்னங்குறிச்சியில் உள்ள சசிகுமார் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவர் அங்கு இல்லை. உடனே அவரை செல்போனில் தொடர்பு கொண்டார். அதற்கு அவர் கோரிமேடு பகுதியில் உள்ள ஒரு டீ கடைக்கு வருமாறு கூறியுள்ளார்.இதையடுத்து அங்கு சென்ற ரவியும் அவரது மகன் முகுந்தனும், சசி குமாரை சந்தித்து பணம் கேட்டனர். இந்த வேளையில் சசிகுமாரின் நண்பர்கள் சிலர் அங்கு வந்து பணம் தரமுடியாது, பணம் கேட்டு வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டி னர்.
இது குறித்து ரவி ஜல கண்டபுரம் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் தலைமையில் போலீசார் இதுபற்றி விசாரித்து நில மோசடியில் ஈடுபட்ட சசி குமாரை கைது செய்தனர். பின்பு அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் சிறை யில் அடைத்தனர்.
இதனி டையே சசிகுமாருடன் சேர்ந்து ரவியை மிரட்டிய கும்பலை போலீசார் தொடர்ந்து தேடி வருகிறார்கள்.
- 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு செய்துள்ளனர்.
- 14-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரி பார்ப்பு செய்வது
சேலம்:பி.எம்.கிசான் திட்டத்தின், ஏழை, எளிய விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ.2 ஆயிரம் வீதம் ஆண்டிற்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்கும் பொருட்டு ஊக்கத்தொகையாக மத்திய அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த தொகை விவசாயி களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதால், பணம் முழுவதும் விவசாயி களுக்கு அப்படியே கிடைக்கிறது. வங்கி கணக்கி ல் நேரடியாக வரவு வைக்கப்படுவதால் யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டியதில்லை. இதனால் இந்த திட்டம் விவசாயிகள், பொதுமக்கள் மத்தியல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் சுமார் 2 லட்சம் விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். இதுவரை விவசாயிகள் பி.எம்.கிசான் திட்டத்தில் சேர்ந்த தேதியினை பொருத்து விவசாயிகளுக்கு 13 தவணை வரை தொகைகள் வரப்பெற்றுள்ளது.
தற்போது விவசாயிகள் 14-வது தவணை தொகை பெறுவதற்கு தங்களது ஆதார் விவரங்களை சரி பார்ப்பு செய்வது அவசியமாகும்.
மாவட்டத்தில் 1,23,022 பயனாளிகள் நில ஆவணம் இணைப்பு செய்துள்ளனர். இதில் 1,10,414 பயனாளிகள் மட்டுமே வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைத் துள்ளனர்.
98 ஆயிரத்து 523 பயனாளிகள் மட்டுமே நில ஆவணம் இணைப்பு, இ-கே.ஒய்.சி மற்றும் ஆதார் எண் இணைப்பு ஆகிய பணிகளை முடித் துள்ளனர். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை 10 ஆயிரத்து 673 விவசாயிகள் இணைக்கவில்லை.
இது தொடர்பாக சேலம் மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சிங்காரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள், தங்களது 14-வது தவணை தொகையை பெறுவதற்கு வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தல், நில ஆவணங்கள் இணைத்தல் போன்ற பணிகளை விரைவில் மேற்கொள்ள வேண்டும். வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க முடியாத விவசாயிகள், தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி பயன் பெறலாம்.
10,673 வங்கி கணக்–கு–கள்
சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 673 விவசாயிகள் ஆதார் எண்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்படாமல் உள்ளது. 1, 302 விவசாயிகள் நிலம் சம்பந்தப்பட்ட ஆவணங்களை இணைக்காமல் உள்ளனர். வருகிற 15-ந்தேதிக்குள் (சனிக்கிழமை) அனைத்து பணிகளையும் முடித்தால் மட்டுமே கிசான் திட்ட நிதி தொடர்ந்து விவசாயிகள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது.
- ஆதரவு ஆகியவற்றுக் காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது.
சேலம்:
இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகார மளித்தல் அமைச்சகம் சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 9 ஆண்டுகளில், பட்டியல் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள், மூத்த குடிமக்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்ட சமூகத்தின் விளிம்புநிலையில் உள்ளவர்களின் நலனை நோக்கமாகக் கொண்ட பல திட்டங்களை இந்த அமைச்சகம் தொடங்கியுள்ளது.
இதில் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற திட்டம் இந்தியாவில் மூத்த குடிமக்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்ட ஒரு விரிவான முன்முயற்சியாகும்.
நிதி உதவி
மூத்த குடிமக்களுக்கான தேசிய செயல் திட்டம் (என்ஏபிஎஸ்ஆர்சி) மாற்றி அமைக்கப்பட்டு, அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஏஒய்) என்று பெயரிடப்பட்டு 2021-ம் ஆண்டு ஏப்ரலில் புதிய திட்டம் தொடங்கப்பட்டது. அடல் வயோ அபியுதய் யோஜனா (ஏவிஒய்ஏஒய்) என்ற மூத்த குடிமக்களுக்கான ஒருங்கிணைந்த திட்டம், மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு இல்லங்களை நடத்துவதற்கு தகுதியான நிறுவனங்களுக்கு நிதி உதவி அளிக்கிறது.
சேலம், நாமக்கல் மாவட்டம்
தற்போது இந்த திட்டத்தின் மூலமாக நாடு முழுவதும் 552 மூத்த குடிமக்கள் இல்லங்கள், 14 தொடர் பராமரிப்பு இல்லங்கள், 19 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் மற்றும் 5 பிசியோதெரபி கிளினிக்குகள் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. சுமார் 1.5 லட்சம் பயனாளிகள் இந்த முதியோர் இல்லங்களில் தங்கியுள்ளனர்.நாடு முழுவதும் 361 மாவட்டங்களில் இவை உள்ளன. அதில் சேலம், நாமக்கல் மாவட்டத்திலும் முதியோர் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ.288.08 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. பல்வேறு வகைகளில் பயன் அடைந்த மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை 3,63,570 ஆகும்.
ஏவிஒய்ஏஒய் திட்டத்தின் கீழ் உள்ள மற்றொரு அம்சம் ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா (ஆர்விஒய்) ஆகும். வயது தொடர்பான ஏதேனும் இயலாமை அல்லது பலவீனத்தால் பாதிக்கப்பட்ட தகுதிவாய்ந்த மூத்த குடிமக்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. குறைந்த பார்வை, செவித்திறன் குறைபாடு, பற்கள் இழப்பு போன்றவற்றை சமாளிக்க உதவும் வகையில் சாதனங்கள் இத்திட்டத்தில் வழங்கப் படுகிறது. வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள' பிரிவைச் சேர்ந்த மூத்த குடிமக்கள் இத்திட்டத்தில் பயன்பெறலாம்.
ராஷ்ட்ரீய வயோஸ்ரீ யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 269 முகாம்கள் நடத்தப்பட்டு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ், கடந்த 3 நிதியாண்டுகளில் மொத்தம் ரூ. 140.34 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. 130 முகாம்களின் மூலம் 1,57,514 பயனாளிகளுக்கு மொத்தம் 8.48,841 உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
மூத்த குடிமக்களுக்காக எல்டர்லைன் என்ற தேசிய உதவி எண் உள்ளது. மூத்த குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவ தற்காகவும், இலவச தகவல், வழிகாட்டுதல், ஆதரவு ஆகியவற்றுக் காகவும் கட்டணமில்லா தொலைபேசி எண் 14567 தொடங்கப்பட்டுள்ளது. 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பாட்டில் உள்ள எல்டர்லைன் உதவி எண், வாரத்தின் 7 நாட்களும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படுகிறது.
இந்த தகவலை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.
சேலம்:
பழங்குடியின குழந்தைகளுக்கான மத்திய அரசின் கீழ் செயல்படும் ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பள்ளி முதல்வர் 303, முதுநிலை ஆசிரியர் 2266, அக்கவுண்டன்ட் 361, ஜூனியர் செக்ரட்ரியட் அசிஸ்டென்ட் 759, ஆய்வக உதவியாளர் 373. என மொத்தம் 4062 இடங்கள் உள்ளன.
முதல்வர் பதவிக்கு விண்ணப்பம் செய்வோர் மாஸ்டர் டிகிரியுடன் பிஎட் முடித்திருக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் விண்ணப்பிப்போர் ஆங்கிலம், இந்தி, இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, ஜியாகிராமபி, காமர்ஸ், பைனான்சியல் அக்கவுண்டிங், காஸ்ட் அக்கவுண்டிங், எக்கனாமிக், மொழிப்பாடங்கள் உள்பட பிற பாடங்களில் முதுகலை படிப்புடன் பிஎட் படித்தவர்களும், எம்எஸ்சி, எம்சிஏ, எம்இ, எம்டெக் படித்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம். அக்கவுண்டிங் பணிக்கு பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
ஜூனியர் செயலக உதவியாளர் பணிக்கு 12ம்வகுப்பு முடித்திருப்பதோடு, ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் டைப் செய்யும் திறன் கொண்டிருக்க வேண்டும். லேப் அட்டென்டென்ட் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் 10ம் வகுப்புடன் டிப்ளமோ லேபோரேட்டரி டெக்னீக் படிப்பு அல்லது சயின்ஸ் பாடத்திட்டத்தில் 12ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
- சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது.
- எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும்.
சேலம்:
சேலம் சித்தர் கோவில் மெயின் ரோடு அம்மன் நகர் பகுதியில் சிவதாபுரம் மின்சார வாரிய அலுவலகம் செயல்பட்டு வந்தது. அதேபோன்று புத்தூர் இட்டேரி ரோடு, கொடம்பைகாடு பகுதியில் நெத்திமேடு புறநகர் பிரிவு அலுவலகம் செயல்பட்டு வந்தது. இந்த 2 அலுவலகமும் வாடகை கட்டிடத்தில் இயங்கி வந்தன.
இந்த நிலையில் கந்தம்பட்டி சித்தர் கோவில் மெயின்ரோடு, கிருஷ்ணப்பா தியேட்டர் பஸ் நிறுத்தம் எதிரில் புதிதாக சொந்த கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. எனவே இனி சிவதாபுரம், நெத்திமேடு மின்சார வாரிய அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டு மேற்கண்ட சொந்த கட்டிடத்தில் செயல்படும். இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்சார வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்து உள்ளார்.
- தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் ‘பாரம்பரிய நெல் விதை வங்கி’ பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘அக்ரிஸ்நெட்’ வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பரா மரித்து வரும் நெல் ரகங் களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம் பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளை ஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.
'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவ சாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழ வன் செயலியில் விண்ணப் பிக்க தேவையான விண் ணப்பப் படிவங்களை படி வங்களை தங்கள் வட்டா ரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள்.
- இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர்.
சேலம்:
சேலத்தில் லாட்டரி விற்பனை கும்பலால் ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் தாக்கப்பட்டார்.
லாட்டரி விற்பனை
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்க தடை விதிக்கப் பட்டுள்ளது. ஆனாலும் சிலர் தடையை மீறி வெளி மாநில லாட்டரிகள் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளை விற்று பணம் சம்பாதித்து வருகிறார்கள். இது தொடர்பாக காவல்துறைக்கு புகார்கள் சென்றவண்ணம் உள்ளன. எனினும் லாட்டரி விற்பனை தொடர்ந்து வருகிறது.
சரமாரி தாக்குதல்
இந்திய ஜனநாயக வாலி பர் சங்க மாவட்ட செயலாள ராக பெரியசாமி என்பவர் உள்ளார். இன்று காலை இவர் தாதகாப்பட்டி கேட் அருகே சென்றபோது மர்ம நபர்கள் சிலர் தாக்கினர். மேலும் அவரது கனரக வாக னத்தின் கண்ணாடி யையும் உடைத்தனர். இந்த தாக்கு தலில் படுகாயம் அடைந்த அவர், ரத்தம் சொட்ட சொட்ட சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்கு வந்தார். இதுபற்றி தகவல் கிடைத்த போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். லாட்டரி சீட்டு விற்பனை தொடர்பாக பெரிய சாமி அடிக்கடி போலீசில் புகார் அளித்து வந்துள்ளார். இத னால் ஏற்பட்ட ஆத்தி ரத்தில் லாட்டரி சீட்டு விற்ப னையாளர்கள் அடியாட்களை அனுப்பி அவரை அடித்தது டன் வாகனத்தை அடித்து நொறுக்கியது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
மறியல்
இது தொடர்பாக அன்ன தானப்பட்டி பகுதியைச் சேர்ந்த லாட்டரி வியாபாரி ஒருவர் குறித்து புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வரு கிறார்கள். காயம் அடைந்த பெரி யசாமி சேலம் அரசு ஆஸ்பத்தி ரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனை அறிந்த இந்திய ஜனநா யக வாலிபர் சங்கத்தினர் அங்கு அதிக அளவில் திரண்ட னர். திடீரென அவர்கள் அங்குள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இத னால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட வர்களை கலந்து செல்லுமாறு கூறினர்.
3 பேர் சிக்கினர்
ஆனாலும் அவர்கள் சாலை யில் அமர்ந்தவாறு கோஷம் எழுப்பினர். இதை தொடர்ந்து போலீஸ் உயர் அதிகாரி கள் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பெரியசாமியை தாக்கிய வர்கள் மீது உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் கலைந்து சென்றனர்.இந்த சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி யது. இதனிடையே பெரியசாமி தாக்கப்பட்டது தொடர்பாக 3 பேரை போலீசார் மடக்கி பிடித்த னர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






