என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
    X

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

    • மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 107 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 130 கன அடியாக அதிகரித்தது.
    • அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், சரிவதுமாக உள்ளது.

    ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக விநாடிக்கு 400 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1000 கன அடியாக அதிகரித்துள்ளது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 107 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 130 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    அணைக்கு வரும் நீரின் அளவை விட, திறப்பு அதிகமாக இருப்பதால், நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது. நேற்று 78.51 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 77.61 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 39.61 டி.எம்.சி.யாக உள்ளது.

    Next Story
    ×