என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஊக்கத்தொகை பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
- தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் ‘பாரம்பரிய நெல் விதை வங்கி’ பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘அக்ரிஸ்நெட்’ வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பரா மரித்து வரும் நெல் ரகங் களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம் பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளை ஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.
'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவ சாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழ வன் செயலியில் விண்ணப் பிக்க தேவையான விண் ணப்பப் படிவங்களை படி வங்களை தங்கள் வட்டா ரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






