என் மலர்
நீங்கள் தேடியது "Farmers can apply"
- பெண்கள், ஆதி திராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியம் வழங்கப்படும்
- திருப்பத்தூர் கலெக்டர் தகவல்
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்க்க ஆர்வ முள்ள விவசாயிகள் மாநில அரசின் நிதி உதவியுடன் கூடிய பிரதமமந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் புழக்கடையில் அல்லது கொல்லைப்புறத்தில் அலங்கார மீன்வளர்ப்பு திட்டத்தில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இதற்காக திருப்பத்தூர் மாவட்டத்திற்கு ஒரு அலகு இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் அலகு ஒன் றிற்கு ஆகும் செலவின தொகை ரூ.3 லட்சத்தில் பொதுப்பயனாளிகளுக்கு 40 சதவீத மானியமும், பெண்கள் மற்றும் ஆதி திராவிட பயனாளிகளுக்கு 60 சதவீத மானியமும் வழங்கப்படும். திருப்பத்தூர் மாவட்டத்திற்கு பொது பிரிவு பயனாளிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்புபவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர், வேலூர் அலுவலகத்தை adfifvellorel@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித் துள்ளார்.
- ராமநாதபுரம் மாவட்ட மானிய விலையில் மின் மோட்டார் பெற ஆதிதிராவிட விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்.
- மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-
2022-23-ம் ஆண்டு மானிய கோரிக்கையின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயி களுக்கான துரித மின் இணைப்பு வழங்கும் திட்டத்தை அறிவித்தார்.
இந்த திட்டத்தில் மின் மோட்டார் குதிரைத்திற க்கு ஏற்ப 90 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ. 3 லட்சத்து 60 ஆயிரம் மானியத்தில் ஆதிதிராவிட விவசாயிகள் 900 பேருக்கும், பழங்குடியின விவசாயிகள் 100 பேருக்கும், மொத்தம் 1000 விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு தாட்கோவின் இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பத்திருக்க வேண்டும். துரித மின் இணைப்புத் திட்டத்தில் தாட்கோ இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பங்களுக்கு 5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ.2.50 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.2ஆயிரமும் 7.5 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம் ரூ. 2.75 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத் தொகை ரூ. 27 ஆயிரத்து 500-ம் 10 குதிரைத்திறன் மின் இணைப்புக் கட்டணம்
ரூ. 3 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ. 30, ஆயிரமும் 15 குதிரைத்திறன் மின் இணைப்புக்கட்டணம் ரூ. 4 லட்சத்திற்கான 10 சதவீத பயனாளி பங்குத்தொகை ரூ.40 ஆயிரத்திற்கான வங்கி வரைவோலை அளிப்பவர்களுக்கு முன்னு ரிமை அளிக்கப்படும். தகுதியில் லாத விண்ணப்பத்தாரர்கள் பங்குத்தொகை 10 சதவீதம் திருப்பி அளிக்கப்படும்.
கடந்த 2017 முதல் 2022 ஆண்டுகளில் மின் இணைப்பு வேண்டி மாவட்ட மேலாளரால் பரிந்துரைக்கப்பட்ட விவசாயிகளும் தற்போது மேம்படுத்தப்பட்ட தாட்கோ இணையதளத்தில் 10 சதவீத பயனாளி பங்குத்தொ கையுடன் புதியதாக விண்ணப்பிக்குமாறு ேகட்டுக்கொள்ளப் படுகிறது. ஏற்கனவே மின் இணைப்பு கோரி காத்திருப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் முன்னுரிமை வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகள் www.tahdco.com என்ற இணையதள முகவரியில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் ‘பாரம்பரிய நெல் விதை வங்கி’ பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது.
- திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ‘அக்ரிஸ்நெட்’ வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக் டர் கார்மேகம் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு அரசு வேளாண்மை துறையின் மூலம் 'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிப்பு விவசாயிகளுக்கு ரூ.3 லட்சம் ஊக்கத்தொகை அளிக்கும் திட்டத்தினை 2023- 2024 -ம் ஆண்டில் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி பாரம்பரிய நெல் விதை வங்கி திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழவன் செயலியில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்கும் விவசாயிகள் குறைந்தபட்சம் 100 பாரம்பரிய நெல் ரகங்களை நெல் வங்கியில் பராமரிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பரா மரித்து வரும் நெல் ரகங் களை மறு உற்பத்தி செய்து இனத் தூய்மையுடன் தொடர்ந்து பராமரிக்க வேண்டும். ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தாமல் இயற்கையான முறையில் மரபுசார் நெல் ரகங்களை உற்பத்தி செய்து பராமரிக்க வேண்டும். விதை வங்கியில் பராமரிக்கப்படும் பாரம் பரிய நெல் ரகங்கள் நல்ல முளைப்புத் திறனுடன் இருப்பதனை தொடர்ந்து உறுதி செய்திட வேண்டும். வயல்களில் உரிய அளவு சாகுபடி செய்திடல் வேண்டும். கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், இளை ஞர்கள் மற்றும் விவசாயிகள் பார்வையிடும் வகையில் முறையாக காட்சிப்படுத்த வேண்டும்.
'பாரம்பரிய நெல் விதை வங்கி' பராமரிக்கும் விவ சாயிகள் ஊக்கத்தொகை பெறுவதற்கு 'அக்ரிஸ்நெட்' வலைதளம் அல்லது உழ வன் செயலியில் விண்ணப் பிக்க தேவையான விண் ணப்பப் படிவங்களை படி வங்களை தங்கள் வட்டா ரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவல கத்தைத் தொடர்பு கொள்ள லாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






