என் மலர்tooltip icon

    சேலம்

    • நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
    • கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

    நேற்று வினாடிக்கு 154 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 107 கனஅடியாக குறைந்தது.

    அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

    நீர்வரத்தை காட்டிலும் தண்ணீர் திறப்பு அதிகளவில் உள்ளதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

    இன்று காலை நிலவரப்படி நீர்மட்டம் 69.96 அடியாகவும் நீர்இருப்பு 32.66 டி.எம்.சி.யாகவும் உள்ளது.

    மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறையும்போது அதன் நீர்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலையும் வெளியே தெரியும்.

    அதன்படி கடந்த 12-ந்தேதி அணையின் நீர்மட்டம் 78 அடியாக குறைந்தபோது கிறிஸ்தவ ஆலய கோபுரம் தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கியது.

    இந்நிலையில் தற்போது அணையின் நீர்மட்டம் 70 அடிக்கும் கீழ் குறைந்ததால் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை தண்ணீர் மட்டத்திற்கு மேலே தெரிய தொடங்கி உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் பார்த்து செல்கின்றனர்.

    • தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.
    • தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில், தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகள் இரவு நேரங்களில் காவலில் ஈடுபட்டு உள்ளனர்.

    தக்காளி விலை உயர்வின் காரணமாக, அவற்றை மர்ம நபர்கள் திருடிவிடுவார்களோ என்ற அச்சத்தில் கஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் சுழற்சி முறையில் காவல் காத்து வருகின்றனர்.

    மேலும் தக்காளிச் செடிகளில் பூச்சிகள் தாக்காமல் இருக்க, பூச்சிகளை கவரும் வகையில் மின் விளக்குகளையும் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.

    • கடந்த ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள நினை வுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்
    • சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை

    சங்ககிரி:

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3-ந் தேதி அனுசரிக்கப்படுவதை யொட்டி சங்ககிரி ஆர்.டி.ஓ., தலைமையில் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி தலைமை தாங்கி பேசியதாவது; கடந்த ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள நினை வுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை. விழாவிற்கு வருவோர் கைகளில் கொடி,

    பேனர்கள் மற்றும் உருவப்படங் களை எடுத்து வர அனுமதி இல்லை. எந்த ஒரு அமைப்பினரும் தியாகி தீரன் சின்னமலை நினைவு இடத்தில் பொருட்களை எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை.

    எந்த அமைப்பினருக்கும் சங்க

    கிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை. அவரவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குறிப்பட்ட நேரத்தில் கலைந்து சென்றுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் காவல்துறையினர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாக வந்து குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். சங்ககிரியில் உள்ள பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது.

    சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த ஒரு அமைப்பும் டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும் சுவர் விளம்பரம் செய்யவும் அனுமதி இல்லை. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒருவர் பின் ஒருவராக வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் சங்ககிரி டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் தேவி, தாசில்தார் அறிவுடைநம்பி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கால்வாய் அடைப்பட்டு 10 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை
    • . பிரபு என்பவர் முதல்-அமைச்சரின் முகவரிக்கு இது பற்றி மனு

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பேரூராட்சி வார்டு எண்.7 வளைய செட்டியூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அடைப்பட்டு 10 ஆண்டுகளாக தூர்வா ரப்படவில்லை. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்தது. மேலும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள், பேரூராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதிைய சேர்ந்த பிரபு என்பவர் முதல்-அமைச்சரின் முகவரிக்கு இது பற்றி மனு அனுப்பினார். அதில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதையும், இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவர் சிதலமடைந்து காணப்பட்டதையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு சார்பில் சம்பந்தப்பட்ட பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் இது பற்றி விளக்கம் கேட்டு, உடனடியாக சாக்கடை கால்வாயை சரி செய்திட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து, கால்வாய் மேற்பரப்பில் முளைத்திருந்த முட் செடி கொடிகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.
    • அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை சார்பில் தொட்டுவிடும் தூரத்தில் இலக்கு என்ற திட்டத்தின் கீழ் மாணவ- மாணவிகளுக்கு உயர்கல்வி வழிகாட்டும் கருத்தரங்கம் மற்றும் அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற சேலம், கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 15 அரசு பழங்குடியினர் நல உண்டி உறைவிட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சேலத்தில் இன்று நடைபெற்றது.

    பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் கலந்து கொண்டு, மாவட்ட அளவி லும், மாநில அள விலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ- மாணவிகள் மற்றும் தலைமை ஆசிரியர்க ளுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

    எண்ணிக்கை குறைவு

    விழாவில் அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேசியதாவது:-

    தமிழகம் முழுவதும் இந்த துறையின் கீழ் 38 மேல்நி லைப்பள்ளி மற்றும் ஏக லைவா பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இதன் மூலமாக 2200 மாணவ -மாணவிகள் பயின்று சென்று உள்ளனர். இத்தனை மாணவர்கள் பயின்றாலும் உயர்கல்விக்கு செல்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

    இதனை தவிர்த்து அனை வரும் உயர்கல்வி பயிலும் வகையில் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை காட்டிலும் உயர்கல்விக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நமது மாநி லத்தில் அதிகமாக இருந்தா லும், இதனை மேலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சலுகை

    வாழ்வில் வெற்றி பெற கல்வியோடு ஒழுக்கம் அவசியம் தேவை. பழங்குடி இன மாணவர்களுக்கு கல்விக்கு பணம் ஒரு தடை யாக இருக்க கூடாது என்ப தற்காகவே, அரசு பல்வேறு சலுகைகளும், திட்டங்களும் செயல்படுத்தி வருகிறது.

    முதல்-அமைச்சர் கொண்டு வந்த நான் முதல்வன் திட்டம் என்பது பழங்குடி இன மாணவர்க ளுக்கு மிக பெரிய பலன். தாட்கோ மூலமாக நீட் மற்றும் ஜேஇஇ படிப்பிற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளுக்கு சென்று படிக்கவும் தாட்கோ மூலமாக உதவி செய்யப்படு கிறது. இதனை பயன்படுத்தி வெளி நாடுகளுக்கு சென்று படிக்கலாம். கல்வி உதவி தொகையுடன் உயர்கல்விக் கான கடன் உதவியும் வழங்கப்பட்டு வருகிறது. இதனையும் பயன்படுத்தி கொள்ள வேண்டும். அரசு பள்ளியில் தேர்ச்சி சத விகிதத்தை மேலும் அதிகரிக்க ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் பெற்றோர் பாடுபட வேண்டும்.

    படிப்பு என்பது அறிவை வளர்க்க மட்டுமல்ல. பொரு ளாதாரத்தை ஈட்டுவதற்கு மட்டுமல்ல. உரிமைகளை பெறுவதற்காகவும் தான். மாணவ, மாணவிகள் இதனை தெரிந்து கொள்ள வேண்டும். பள்ளி படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கும் உயர்கல்வி கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ஆலோசனை

    தொடர்ந்து பல்வேறு துறையில் சாதனை படித்த வர்கள், கல்வியாளர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, உயர்கல்விக்கான பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

    நிகழ்ச்சியில், பழங்குடியி னர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, சேலம் வடக்கு தொகுதி ராஜேந்திரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர், முன்னாள் எம்.எல்.ஏ. சிவ லிங்கம், அயோத்தியாபட்ட ணம் ஒன்றிய குழு தலைவர் ஹேமலதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.
    • சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர்.

    சேலம்:

    ஆடி மாதத்தின் அனைத்து நாட்களுமே அம்மனை வழிபட ஏற்ற காலம் என்றாலும், ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு, ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் அம்மனை வழிபடுவது மிகவும் விசேஷமான பலன்களை தரக் கூடியதாகும்.

    பெண்கள் வழிபாடு

    அதன்படி இன்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை மற்றும் ஆடி பூரத்தை முன்னிட்டு சேலத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் செய்யப் பட்டு வழிபாடு நடந்தது.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஏராளமான பெண்கள் இன்று அதிகாலை முதலே குவிய தொடங்கினர். அம்மனுக்கு தங்க கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங் காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இங்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வளையல் அலங்காரம்

    அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்க கவச அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

    அய்யந்திருமாளிகையில் உள்ள மாரியம்மன் கோவி லில் சிவன் குடும்ப அலங்கா ரமும், எல்லை பிடாரி அம்மன் கோ விலில் அம்ம னுக்கு வளையல் மற்றும் தங்க கவச அலங்காரமும், அன்னதானப்பட்டி தண்ணீர் பந்தல் காளியம்ம னுக்கு வளையல் அலங்கா ரமும் செய்யப்பட்டது. இதில் திரளான பக்கதர்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றனர். இதே போல் சேலம் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

     சேலம்:

    சேலம் என்றாலே அனை

    வருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அதிக விளைச்சல்

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நடுசாளை குண்டு, இமாம் பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மாமரங்கள் பூக்க தொடங்கும். ஏப்ரல் முதல் வாரததில் மாங்காய் விளைச்சல் தரும். ஜுலை மாத இறுதியுடன் சீசன் முடியும் என்பதால் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பாண் டில்மாம்பழ சீசன் நல்ல முறையில் இருந்தது. இத னால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ள தால் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறு கையில்,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டா புரம், மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், அயோத்தி யாப்பட்ட ணம், வலசையூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. நடப்பாண்டில் அனைத்து பகுதிகளிலும் நல்ல விளைச்சல் இருந்தது. குறிப்பாக சேலம் பெங்க ளூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா பழங்கள் அதிக அளவில் விளைச்சல் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் 100 நாட்கள் இருக்கும். அந்த நேரத்தில் வியாபாரிகள் மட்டுமின்றி லாரி, வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் சுமை தூக்குவோர், சாலையோர வியாபாரிகள் என பலருக்கும் வருமானம் கிடைக்கும்.

    4 கோடிக்கு விற்பனை

    நடப்பாண்டில் சேலத்தில் இருந்து இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங் கள் அனுப்பி வைக்கப்பட் டன.

    இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. தற்போது மாம்பழத்தின் கடைசி ரகமான நீலம், குதாதத் ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்னும் வரு வாரத்தில் சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இறுதி கட்ட வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.   

    • சேலம் மாவட்டத்தில் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் அதை பூர்த்தி செய்து வழங்கு வதற்கான முகாமுக்கு வருவதற்கான டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணி நேற்று தொடங்கியது.
    • சேலம் கன்னங்குறிச்சி சத்தியா காலனியில், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை அதிகாரி கள் ஆய்வு

    சேலம்:

    தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோ றும் கலைஞர் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித் துள்ளது. தகுதியானவர் களுக்கு உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வழங்கும் வகையில், வழங்கப்படு கின்றன.

    சேலம் மாவட்டத்தில் உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் மற்றும் அதை பூர்த்தி செய்து வழங்கு வதற்கான முகாமுக்கு வருவதற்கான டோக்கன் ஆகியவற்றை வீடு, வீடாகச் சென்று வழங்கும் பணி நேற்று தொடங்கியது. சேலம் கன்னங்குறிச்சி சத்தியா காலனியில், விண்ணப்பம் மற்றும் டோக்கன் வழங்கும் பணியினை அதிகாரி கள் ஆய்வு செய்துகூறியதாவது:

    இத்திட்ட த்தில் பயன்பெற சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சம் ரேசன் கார்டுகள் உள்ளன. முதல் கட்ட விண்ணப்பப்பதிவு முகாம் வரும் 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 4-ந் தேதி வரை நடக்கிறது. இதில் 846 ரேசன்கடை பணியாளர்கள் 6 லட்சம் கார்டுதாரர்களுக்கு வழங்கப் படுகிறது. 2-வது கட்ட முகாம் ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 16-ந் தேதி வரையும் நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இதில் 700 ரேசன்கடை பணியாளர்கள் 5 லட்சம் ரேசன்கார்டுகளுக்கு முகாம் நடை பெறும். இதில் நாள், நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, டோக்கன் மற்றும் விண்ணப் பங்களை வீடு, வீடாகச் சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்குகின்றனர். அவற்றைப் பெற்றுக் கொண்டவர்கள். அதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில், தங்களுக்கான ரேஷன் கடைக்குச் சென்று, ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மின் கட்டண ரசீது, வங்கிக் கணக்கு புத்தகம் விண்ணப்பம் ஆகியவற்றுடன் வழங்க வேண்டும் என்றனர்.

    முதல் நாளான ஒரே நாளில் மட்டும் சேலம் மாவட்டத்தில் 10 சதவீதம் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டுள்ளன. இன்று 2-வது நாளாக விண்ணப்பம் வழங்கப் பணி நடைபெற்று வருகிறது.

    • சேலம் கொண்ட லாம்பட்டி பெரியபுத்தூர் இஞ்சிமரத்துக்காடு பகு தியை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மகன் அரவிந்த் பெட்ரோல் பங்க் ஊழியர்.
    • தந்தை இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    சேலம்:

    சேலம் கொண்ட லாம்பட்டி பெரியபுத்தூர் இஞ்சிமரத்துக்காடு பகு தியை சேர்ந்தவர் மாரி யப்பன். இவரது மகன் அரவிந்த் 21, பெட்ரோல் பங்க் ஊழியர். தந்தை இறந்து விட்ட நிலையில் தாயுடன் வசித்து வந்தார்.

    கள்ளக்காதல் தகராறு

    அரவிந்த் தனது நண்ப ரான திருமலைகிரியை சேர்ந்த மனோஜ்குமார் என்ப வரது வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்த நிலையில் அரவிந்த்குமார் மனைவியு டன் பழக்கம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் தனி மையில் சந்தித்து வந்தனர். இதனை அறிந்த மனோஜ்குமார் அரவிந்தை கண்டித்தார்.

    ஆனால் அதனை கண்டு கொள்ளாத இருவரும், தனிமையில் சந்தித்ததுடன் செல்போனிலும் பேசி வந்தனர். இதையடுத்து மனோஜ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் கடந்த 18-ந் தேதி அரவிந்தை மறை வான இடத்திற்கு அழைத்து சென்று கட்டையால் சர மாரியாக தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு நேற்றிரவு பரிதாபமாக இறந்தார்.

    இதற்கிடையே இது தொடர்பாக விசாரணை நடத்திய கொண்ட லாம்பட்டி போலீசார் கொலையில் தொடர்புடைய மனோஜ் குமார் மற்றும் அவருடையை நண்பர்கள் ராமச்சந்திரன் 26, கார்த்திக் 21, ரத்தினம் 33, கவுரி சங்கர் 30 ஆகிய 5 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    பரபரப்பு வாக்குமூலம்

    கைதான மனோஜ்குமார் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது-

    அரவிந்த் , எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது அர விந்துக்கும், எனது மனைவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது . இதனை அறிந்த நான் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் இது தொடர்பாக அவர்களை கண்டித்த போதும் கண்டு கொள்ளவில்லை. இதனால் அரவிந்தை தனது நண்பர்க ளுடன் சேர்ந்து தீர்த்து கட்ட முடிவு செய்தேன்.

    அதன்படி நண்பர்கள் உதவியுடன் திட்டமிட்டப்படி அரவிந்தை பெரியபுதூர் காட்டுப்பகுதிக்கு அைழத்து சென்றோம். அங்கு வைத்து எனது மனைவியுடன் பேசக்கூடாது, தனிமையில் சந்திக்க கூடாது என்று கூறினோம். ஆனால் அவர் அதற்கு சம்மதிக்க வில்லை.

    ஆணி பதித்த கட்டை

    இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ஆணி பதித்த கட்டையால் அவரை சரமாரியாக தாக்கினோம், இதில்நிலை குலைந்த அரவிந்த் உயிர் பிழைக்க அங்கிருந்து சிறிது தூரம் ஓடினார். பின்னர் மயங்கி கீழே விழுந்தார். உடனே நாங்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டோம், ஆனாலும் போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். 

    • அதிகாரிகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
    • அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

    இந்த பண்ணையில் இன்று அதிகாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பறக்கும்படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட பறக்கும் படை குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அங்கு உள்ள அரவை மில்லில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரத்து 400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் இந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கோழிகளுக்கு தீவனமாக அரைத்து வழங்க ரேசன் அரிசியை முறைகேடாக கொண்டு வந்து பண்ணையில் உள்ள அரவை மில்லில் சேமித்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2½ டன் ரேசன் அரிசியும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எடப்பாடி பழனிசாமி சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடியேற்றி, பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
    • 6 மணிக்கு எட்டிக்குட்டை மேடு பகுதியிலும் கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார்.

    சேலம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்து கட்சி கொடியேற்றி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக சேலம் நெடுஞ்சாலை நகரில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு கொங்கணாபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கோரணாம்பட்டி ஊராட்சிக்கு செல்கிறார்.

    பின்னர் அங்குள்ள கோரணம்பட்டி கஸ்பா பகுதியில் கட்சி கொடியேற்றி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து 4 மணிக்கு வெள்ளாளபுரம் ஊராட்சி மோட்டூரிலும், 4.30 மணிக்கு கோணசமுத்திரம் ஊராட்சி கன்னியம்பட்டியிலும் கொடியேற்றுகிறார்.

    மாலை 5.15 மணிக்கு புதுப்பாளையம் ஊராட்சி கஸ்பா பகுதியிலும், 6 மணிக்கு சமுத்திரம் ஊராட்சி கஸ்பா பகுதியிலும், 6.45 மணிக்கு வெள்ளாளபுரம் ஊராட்சி சின்னப்பம்பட்டி மாரியம்மன்கோவில் அருகிலும் கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார்.

    தொடர்ந்து 23-ந் தேதி மாலை 3.15 மணிக்கு கொங்கணாபுரம் ஒன்றியம் குரும்பப்பட்டியிலும், 4 மணிக்கு காவடி காரணூர் பகுதியிலும், 5 மணிக்கு வெள்ளக்கல்பட்டி பகுதியிலும், 6 மணிக்கு எட்டிக்குட்டை மேடு பகுதியிலும் கட்சி கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். இதில் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்களும் திரளாக பங்கேற்கிறார்கள்.

    இதையொட்டி கட்சி நிர்வாகிகள் அந்த பகுதியில் கொடி தோரணங்கள் கட்டி எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும்.
    • அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி.வரை குடிநீர் மற்றும் மீன் வளர்ச்சிக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூரில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் எனப்படும் மேட்டூர் அணை டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாக விளங்குகிறது. இந்த அணையின் மூலம் தமிழ்நாட்டில் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    குறுவை பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படும். அதன்படி கடந்த 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அப்போது மேட்டூர் அணையின் நீர்மட்டம் 103.35 அடியாக இருந்தது.

    பின்னர் பாசன தேவைக்கு ஏற்ப நீர் திறப்பு குறைத்தும் அதிகரித்தும் திறந்து விடப்பட்டு வந்தது. அதன்படி நீர் திறப்பு கடந்த 2-ந்தேதி 10 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அதன் பிறகு 7-ந்தேதி தண்ணீர் திறப்பு 12 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

    இந்த நிலையில் நீர் இருப்பை கருத்தில் கொண்டு தற்போது விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் பாசனத்துக்கு திறந்து விடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இதுவரை பெய்யவில்லை. அதே நேரத்தில் கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகளில் இருந்து போதிய அளவில் தண்ணீர் திறந்து விடாததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே உள்ளது.

    நேற்று காலை 197 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று 154 கன அடியாக குறைந்தது. வழக்கமாக இதே காலக்கட்டத்தில் தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் தீவிரமடைந்து காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். அதாவது ஜூன் மற்றும் ஜூலை மாதம் என்பது தமிழில் ஆடி மாதமாகும். பொய்க்காத காவிரி பண்டைய காலங்களில் பருவமழை குறித்த நேரத்தில் தவறாமல் பெய்து வந்ததால் பருவமழை காலத்துக்கு ஏற்றவாறு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.

    இதன் காரணமாக வான் பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி என்று காவிரியை அழைப்பார்கள். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை குறித்த நேரத்தில் தீவிரம் அடையாததால் மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று 70.97 அடியாக சரிந்துள்ளது. குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்பட்டு 39 நாட்களில் 32 அடி சரிந்து தற்போது நீர்மட்டம் 70 அடியாக மட்டுமே உள்ளது.

    மேட்டூர் அணையில் இன்று காலை நிலவரப்படி 33.53 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கன அடி. அதிகபட்சமாக மேட்டூர் அணையில் 6 டி.எம்.சி.வரை குடிநீர் மற்றும் மீன் வளர்ச்சிக்காக தண்ணீர் தேக்கி வைக்கப்படும். அந்த வகையில் பார்த்தால் தற்போது தினமும் முக்கால் டி.எம்.சி .தண்ணீர் காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்பட்டு வருகிறது.

    எனவே மேட்டூர் அணையில் இருந்து இன்னும் 3 வார காலத்திற்கு மட்டுமே பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது. இதனால் 3 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடி முழுமை பெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே பருவமழை பெய்து, காவிரியில் வெள்ளம் கரைபுரண்டால் மட்டுமே குறுவை சாகுபடி முழுமை பெறும் சூழல் ஏற்பட்டுள்ளது. பருவமழையை எதிர்பார்த்து விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

    ×