என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பூலாம்பட்டி பேரூராட்சியில் துரிதமாக தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்
    X

    பூலாம்பட்டி பேரூராட்சியில் துரிதமாக தூர்வாரப்பட்ட சாக்கடை கால்வாய்

    • கால்வாய் அடைப்பட்டு 10 ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை
    • . பிரபு என்பவர் முதல்-அமைச்சரின் முகவரிக்கு இது பற்றி மனு

    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் பூலாம்பட்டி பேரூராட்சி வார்டு எண்.7 வளைய செட்டியூர் பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் அடைப்பட்டு 10 ஆண்டுகளாக தூர்வா ரப்படவில்லை. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்தது. மேலும் துர்நாற்றம் வீசியது. இது குறித்து அப்பகுதி மக்கள், பேரூராட்சியில் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதையடுத்து அந்த பகுதிைய சேர்ந்த பிரபு என்பவர் முதல்-அமைச்சரின் முகவரிக்கு இது பற்றி மனு அனுப்பினார். அதில் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தேங்கி நிற்பதையும், இருபுறமும் அமைக்கப்பட்டு இருந்த தடுப்பு சுவர் சிதலமடைந்து காணப்பட்டதையும் புகைப்படம் எடுத்து அனுப்பி இருந்தார்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு சார்பில் சம்பந்தப்பட்ட பூலாம்பட்டி பேரூராட்சி செயல் அலுவலரிடம் இது பற்றி விளக்கம் கேட்டு, உடனடியாக சாக்கடை கால்வாயை சரி செய்திட நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிடப்பட்டது. இதனால் பேரூராட்சி நிர்வாகத்தினர் துரிதமாக செயல்பட்டு சாக்கடை கால்வாய் சுத்தம் செய்து, கால்வாய் மேற்பரப்பில் முளைத்திருந்த முட் செடி கொடிகளை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×