search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.4 கோடிக்கு மாம்பழங்கள் விற்பனை
    X

    ரூ.4 கோடிக்கு மாம்பழங்கள் விற்பனை

    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

    சேலம்:

    சேலம் என்றாலே அனை

    வருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அதிக விளைச்சல்

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நடுசாளை குண்டு, இமாம் பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மாமரங்கள் பூக்க தொடங்கும். ஏப்ரல் முதல் வாரததில் மாங்காய் விளைச்சல் தரும். ஜுலை மாத இறுதியுடன் சீசன் முடியும் என்பதால் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பாண் டில்மாம்பழ சீசன் நல்ல முறையில் இருந்தது. இத னால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ள தால் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறு கையில்,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டா புரம், மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், அயோத்தி யாப்பட்ட ணம், வலசையூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. நடப்பாண்டில் அனைத்து பகுதிகளிலும் நல்ல விளைச்சல் இருந்தது. குறிப்பாக சேலம் பெங்க ளூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா பழங்கள் அதிக அளவில் விளைச்சல் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் 100 நாட்கள் இருக்கும். அந்த நேரத்தில் வியாபாரிகள் மட்டுமின்றி லாரி, வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் சுமை தூக்குவோர், சாலையோர வியாபாரிகள் என பலருக்கும் வருமானம் கிடைக்கும்.

    4 கோடிக்கு விற்பனை

    நடப்பாண்டில் சேலத்தில் இருந்து இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங் கள் அனுப்பி வைக்கப்பட் டன.

    இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. தற்போது மாம்பழத்தின் கடைசி ரகமான நீலம், குதாதத் ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்னும் வரு வாரத்தில் சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இறுதி கட்ட வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×