என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict: சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3-ந் தேதி"

    • கடந்த ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள நினை வுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்
    • சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை

    சங்ககிரி:

    சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் ஆகஸ்ட் 3-ந் தேதி அனுசரிக்கப்படுவதை யொட்டி சங்ககிரி ஆர்.டி.ஓ., தலைமையில் நினைவு தின நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கான விதிமுறைகள் மற்றும் சட்ட ஒழுங்கை பாதுகாத்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் சங்ககிரி ஆர்.டி.ஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.

    சங்ககிரி ஆர்.டி.ஓ லோகநாயகி தலைமை தாங்கி பேசியதாவது; கடந்த ஆண்டுகளைப்போல் பள்ளிபாளையம் பிரிவு சாலை யில் அமைக்கப்பட்டுள்ள நினை வுச் சின்னத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். சங்ககிரி மலைக்கோட்டைக்கு செல்ல அமைப்பு மற்றும் கட்சியினருக்கு அனுமதி இல்லை. விழாவிற்கு வருவோர் கைகளில் கொடி,

    பேனர்கள் மற்றும் உருவப்படங் களை எடுத்து வர அனுமதி இல்லை. எந்த ஒரு அமைப்பினரும் தியாகி தீரன் சின்னமலை நினைவு இடத்தில் பொருட்களை எடுத்துச் செல்லவோ, வைக்கவோ அனுமதி இல்லை.

    எந்த அமைப்பினருக்கும் சங்க

    கிரி மலை மேல் ஏறுவதற்கு அனுமதி இல்லை. அவரவர்க ளுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்கள் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு குறிப்பட்ட நேரத்தில் கலைந்து சென்றுவிட வேண்டும். ஒவ்வொருவருக்கும் காவல்துறையினர் மூலம் நிர்ணயிக்கப்பட்ட பாதை வழியாக வந்து குறிப்பிட்ட பாதை வழியாகத்தான் செல்ல வேண்டும். சங்ககிரியில் உள்ள பழைய எடப்பாடி சாலை வழியாக வாகனங்கள் செல்லக்கூடாது.

    சங்ககிரி வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் எந்த ஒரு அமைப்பும் டிஜிட்டல் பேனர், கொடிகள், சுவரொட்டிகள் வைக்கவும் சுவர் விளம்பரம் செய்யவும் அனுமதி இல்லை. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையில் ஒருவர் பின் ஒருவராக வருகை தந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று இவ்வாறு அவர் கூறினார்.இக்கூட்டத்தில் சங்ககிரி டி.எஸ்.பி ராஜா, இன்ஸ்பெக்டர் தேவி, தாசில்தார் அறிவுடைநம்பி, வட்டார போக்குவரத்து ஆய்வாளர் செந்தில் குமார் மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள், அனைத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ×