search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோழிப்பண்ணையில் பதுக்கிய 2½ டன் ரேசன் அரிசி பறிமுதல்- உரிமையாளர் மீது வழக்குப்பதிவு
    X

    கோழிப்பண்ணையில் பதுக்கிய 2½ டன் ரேசன் அரிசி பறிமுதல்- உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

    • அதிகாரிகள் ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர்.
    • அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    சேலம்:

    சேலம் அருகே அயோத்தியாபட்டணத்தில் முருகன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணை உள்ளது.

    இந்த பண்ணையில் இன்று அதிகாலையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக பறக்கும்படை தனி தாசில்தார் ராஜேஷ்குமார், வருவாய் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் கொண்ட பறக்கும் படை குழு திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வில் அங்கு உள்ள அரவை மில்லில் மூட்டை மூட்டையாக 2 ஆயிரத்து 400 கிலோ ரேசன் அரிசி பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அதிகாரிகள் இந்த ரேசன் அரிசியை பறிமுதல் செய்து கோழிப்பண்ணை உரிமையாளர் முருகனிடம் தீவிர விசாரணை நடத்தினர். அதில், கோழிகளுக்கு தீவனமாக அரைத்து வழங்க ரேசன் அரிசியை முறைகேடாக கொண்டு வந்து பண்ணையில் உள்ள அரவை மில்லில் சேமித்து வைத்திருந்தார் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து அதிகாரிகள் கோழி பண்ணை உரிமையாளர் முருகனை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட 2½ டன் ரேசன் அரிசியும் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீசார் முருகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×