search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mangoes"

    • சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது.
    • சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது.

     சேலம்:

    சேலம் என்றாலே அனை

    வருக்கும் நினைவுக்கு வருவது தித்திக்கும் மாம்பழங்கள் தான். அந்த வகையில் சேலத்தில் உற்பத்தியாகும் மாம்பழங்கள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    அதிக விளைச்சல்

    தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் அதிக அளவில் மாம்பழங்கள் விளைச்சல் உள்ளது. இந்த பகுதிகளில் சேலம் பெங்களூரா, அல்போன்சா, மல்கோவா, பங்கனப்பள்ளி, செந்தூரா, நடுசாளை குண்டு, இமாம் பசந்த், நீலம் உள்பட பல வகையான மாம்பழ ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

    இந்த பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் மாமரங்கள் பூக்க தொடங்கும். ஏப்ரல் முதல் வாரததில் மாங்காய் விளைச்சல் தரும். ஜுலை மாத இறுதியுடன் சீசன் முடியும் என்பதால் தற்போது இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. நடப்பாண் டில்மாம்பழ சீசன் நல்ல முறையில் இருந்தது. இத னால் விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைத்துள்ள தால் மகிழ்ச்சி அடைந்துள்ள னர்.

    இது குறித்து சேலத்தை சேர்ந்த வியாபாரிகள் கூறு கையில்,சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் மா விளைச்சல் உள்ளது. சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, நங்கவள்ளி, ஜலகண்டா புரம், மேச்சேரி, மேட்டூர், ஓமலூர், அயோத்தி யாப்பட்ட ணம், வலசையூர் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் மாமரங்கள் உள்ளன. நடப்பாண்டில் அனைத்து பகுதிகளிலும் நல்ல விளைச்சல் இருந்தது. குறிப்பாக சேலம் பெங்க ளூரா, பங்கனப்பள்ளி, மல்கோவா பழங்கள் அதிக அளவில் விளைச்சல் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மாம்பழ சீசன் 100 நாட்கள் இருக்கும். அந்த நேரத்தில் வியாபாரிகள் மட்டுமின்றி லாரி, வேன், ஆட்டோ ஓட்டுனர்கள் சுமை தூக்குவோர், சாலையோர வியாபாரிகள் என பலருக்கும் வருமானம் கிடைக்கும்.

    4 கோடிக்கு விற்பனை

    நடப்பாண்டில் சேலத்தில் இருந்து இந்தியா வின் பல்வேறு பகுதிகளுக்கும் மாம்பழங் கள் அனுப்பி வைக்கப்பட் டன.

    இதன்மூலம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 4 கோடிக்கும் மாம்பழங்கள் விற்பனை நடைபெற்றுள்ளது. தற்போது மாம்பழத்தின் கடைசி ரகமான நீலம், குதாதத் ரக மாம்பழங்கள் விற்பனைக்கு வருகிறது. இன்னும் வரு வாரத்தில் சீசன் முடியும் நிலையில் உள்ளதால் இறுதி கட்ட வியாபாரம் நடைபெறுவதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.   

    • மாம்பழம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.
    • கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக மாம்பழம் விலை சற்று அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    மாம்பழம் சீசன் காரணமாக கோயம்பேடு பழ மார்க்கெட்டுக்கு சேலம், திருவள்ளூர் மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தினசரி 500 டன் மாம்பழங்கள் விற்பனைக்கு குவிந்து வருகிறது.

    சில்லரை வியாபாரிகள் மற்றும் சாலையோர வியாபாரிகள் பலர் அதிகளவில் மாம்பழங்களை வாங்கி செல்வதால் மாம்பழம் விற்பனை சூடு பிடித்து விறுவிறுப்பாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த திடீர் கனமழை காரணமாக பழ மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகளின் வரத்து குறைந்தது. இதனால் மாம்பழம் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது.

    இரண்டு நாட்களில் சுமார் 100 டன் அளவிலான மாம்பழங்கள் விற்பனை ஆகாமல் தேங்கி அழுகின. அதனை வியாபாரிகள் குப்பையில் கொட்டினர். இதனால் வியாபாரிகள் கவலை அடைந்து உள்ளனர்.

    மேலும் கடந்த சில நாட்களாக வரத்து குறைவு காரணமாக மாம்பழம் விலை சற்று அதிகரித்து உள்ளது. பங்கனப்பள்ளி ஒரு கிலோ ரூ.50-க்கும், ருமானி ரூ.30, இமாம்பசந்த்-ரூ.120, ஜவாரி-ரூ.50-க்கும் விற்கப்படுகிறது.

    • நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.
    • கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    சேலம்:

    இந்தியாவில் மாம்பழம் சாகுபடியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம் உள்பட பல மாநிலங்களில் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. தமிழக அளவில் கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல் உள்பட பல பகுதிகளில் மாமரங்கள் நிறைந்து காணப்படுகின்றன.

    இந்த ஆண்டில் மாம்பழம் விளைச்சல் சீராக இருந்தது. குறிப்பாக மே மாதம் தொடக்கத்தில் மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தது. தற்போது சேலம் மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்து வருகிறது. இதனால் மாம்பழம் சீசன் ஓரிரு வாரத்தில் முடியும் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சேலம் கடைவீதி மாம்பழம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் வரகம்பாடி, அடிமலைப்புதூர், அயோத்தியாப்பட்டணம், நங்கவள்ளி, தாரமங்கலம், ஜலகண்டாபுரம், மேச்சேரி, பேளூர், நீர்முள்ளிக்குட்டை, கூட்டாத்துப்பட்டி, ஏற்காடு அடிவாரம், தும்பல், கருமந்துறை, வாழப்பாடி, மேட்டூர், காமலாபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும், நாமக்கல் மாவட்டத்தில் சேந்தமங்கலத்திலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன.

    இந்த பகுதிகளில் இருந்து மாம்பழம் சேலம் மார்க்கெட்டுக்கும், இதைதவிர தமிழகத்தில் பிற இடங்களுக்கும் அனுப்பப்படுகிறது. குறிப்பாக சேலத்தில் இருந்து வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு மல்கோவா, குண்டு, சேலம் பெங்களூரா, செந்தூரா, இமாம்பசந்த், குதாத், கிளிமூக்கு மாங்காய் வரத்து கணிசமாக இருந்தது. மே 15-ந் தேதிக்கு மேல் உச்சக்கட்டமாக வரத்து 70 முதல் 80 டன்னாக இருந்தது.

    இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக சேலம் மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி சேலம் மார்க்கெட்டுக்கு 30 டன் மாங்காய்தான் விற்பனைக்கு வந்தது. இன்னும் ஓரிரு வாரத்தில் மாங்காய் சீசன் முடியும் தருவாயில் உள்ளது. அடுத்த வாரம் மாம்பழம் சீசனில் கடைசி ரகமான நீலம் வரத்து தொடங்கும். நீலம் பழம் இரு வாரத்திற்கு இருக்கும்.

    இம்மாதம் கடைசியில் சீசன் முழுமையாக முடிந்து விடும். ஜூலையில் மொத்த மார்க்கெட்டுக்கே 3 முதல் 5 டன் அளவுக்கு மட்டுமே மாம்பழம் வரத்து இருக்கும். தற்போது மாம்பழம் ரகத்தை பொறுத்து ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 என விற்பனை செய்யப்படுகிறது.

    இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    • விராட் கோலியை வம்பிழுத்த நவீனை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர்.
    • அவர்கள் போட்ட பதிவை சில நேரங்கள் கழித்து மும்பை வீரர்கள் அதை டெலிட் செய்தனர்.

    ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் லக்னோ- மும்பை அணிகள் மோதின. இதில் 81 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்று, நாளை நடைபெறும் குவாலிபயர் 2 போட்டியில் குஜராத்தை எதிர்கொள்ள தகுதி பெற்றது.

    முன்னதாக இந்த ஐபிஎல் தொடரின் லீக் போட்டியில் லக்னோவுக்காக விளையாடும் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்தியாவின் ஜாம்பவான் விராட் கோலி ஆகியோருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது மிகப்பெரிய சர்ச்சையாக மாறியது.

    அந்த நிலையில் லக்னோவுக்கு எதிராக குஜராத் வென்ற போது ரசித் கான், சஹா ஆகியோர் சிறப்பாக விளையாடியதாக விராட் கோலி இன்ஸ்டாகிராமில் பாராட்டினார். இதற்கு மும்பைக்கு எதிராக பெங்களூரு தோல்வியை சந்தித்த போது அதை மாம்பழங்களை சாப்பிட்டுக்கொண்டே மகிழ்ச்சியுடன் பார்ப்பதாக இன்ஸ்டாகிராமில் பதிலடி கொடுத்தார்.

    அப்படி விராட் கோலியை வம்பிழுத்த நவீனை இந்திய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வந்தனர். ஆனால் அவை அனைத்தையும் விட குஜராத்துக்கு எதிராக பெங்களூரு தோற்று லீக் சுற்றுடன் வெளியேறிய போது பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிக்கையாளர் அடக்க முடியாமல் சிரிக்கும் வீடியோவை பதிவிட்ட நவீன் சிரித்துக் கொண்டாடியது அனைவரையும் அதிருப்தியில் ஆழ்த்தியது.

    அந்த நிலையில் நேற்றைய போட்டியில் லக்னோ தோல்வியடைந்து வெளியேறியதால் மும்பை வீரர்கள் சந்திப் வாரியர், குமார் கார்த்திகேயா, விஷ்ணு வினோத் ஆகியோர் மேஜையில் 3 மாம்பழத்தை வைத்து "இனி வாழ்க்கையில் மாம்பழத்தை பார்க்க மாட்டேன், சாப்பிட மாட்டேன், பெயரைக் கூட கேட்க மாட்டேன்" என்ற வகையில் அமைதியாக இருக்கும் வழியை பாருங்கள் என நவீனுக்கு தக்க பதிலடி கொடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டனர்.

    ஆனால் சில நேரங்கள் கழித்து அவர்கள் அதை டெலிட் செய்தனர். இருந்தாலும் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்த ரசிகர்கள் அவரையும் லக்னோ அணியையும் கலாய்த்து தள்ளினர். அதனால் ஏற்பட்ட தொல்லையை தாங்க முடியாத லக்னோ நிர்வாகம் தனது ட்விட்டரில் மாம்பழம் சம்பந்தமான அனைத்து வார்த்தைகளையும் செட்டிங்கில் மியூட் செய்துள்ளது. 

    • விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என நவீன் டுவிட் செய்திருந்தார்.
    • பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவின் 2023 சீசன் முடிவடையும் தருவாயில் உள்ளது. இது கிரிக்கெட் போட்டி மட்டுமல்ல. எமோசன் நிறந்ததாக இருக்கும். அந்தந்த அணியின் ரசிகர்கள், வீரர்களின் ரசிகர்கள் மிகவும் ஆக்ரோஷம், எமோசன் காட்டுவார்கள்.

    குறிப்பாக விராட் கோலி எப்படி ஆடுகளத்தில் எமோசன், ஆக்ரோசமாக இருப்பார்களோ அதேபோல் அவரது ரசிகர்களும் இருப்பார்கள். விராட் கோலியுடன் யாரும் மோதிவிட்டால் அவர்களை ட்ரோல் செய்து உண்டு இல்லை என ஆக்கிவிடுவாகர்கள்.

    பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி- எல்எஸ்ஜி இடையிலான ஆட்டத்தில் எல்எஸ்ஜி கடைசி பந்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி வெற்றிக்குப் பிறகு கம்பீர்- விராட் கோலி இடையே கடும் மோதல் ஏற்பட்டது.

    அப்போது ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக்- விராட் கோலிக்கும் இடையிலும் மோதல் ஏற்பட்டது. போட்டி முடிந்த பின் கைக்குலுக்கும் போதும் இருவரும் கைக்கொடுக்க மறுத்துவிட்டனர்.

    இதற்கிடையே, விராட் கோலி மும்பை அணிக்கெதிராக அவுட்டாகும்போது டி.வி. முன் நின்று கொண்டு மாம்பழத்தை காட்டி ஸ்வீட் மாம்பழம் என டுவிட் செய்திருந்தார். மேலும், பிளே ஆஃப் சுற்றை இழந்தபோது வாய்விட்டு சிரிக்கும் ஒரு படத்தை பதவிட்டிருந்தார்.

    இது ஆர்சிபி மற்றும் விராட் கோலி ரசிகர்களை கோப்படுத்தியது. சென்னையில் நேற்று நடைபெற்ற எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணிக்கெதிராக எல்எஸ்ஜி படுதோல்வியடைந்தது.

    182 ரன்கள் விட்டுக் கொடுத்ததுடன், 101 ரன்னில் சுருண்டது. குறிப்பாக 3 பேர் ரன் அவுட் ஆனார்கள். நவீன் உல் ஹக் 4 ஓவரில் 4 விக்கெட் வீழ்த்தினார். இருந்தாலும் 38 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    பேட்டிங்கில் 1 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வாங்கடா... வாங்க... என எதிர்பார்த்துக் கொண்டிருந்த விராட் கோலி ரசிகர்கள் மாம்பழத்தை வைத்து நவீன் உல் ஹக்கை ட்ரோல் செய்து வருகின்றன.

    இதற்கிடையே டுவிட்டரில் எல்எஸ்ஜி அணி magoes, mango, sweet, aam ஆகிய வார்த்தைகளை Muter words-ல் வைத்திருந்தது குறிப்பிட்டத்தக்கது.

    • அறந்தாங்கி பகுதியில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த 250 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யபட்டன
    • சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

    புதுக்கோட்டை:

    அறந்தாங்கி நகராட்சி பகுதியில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் மற்றும் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்து விற்கப்பட்ட 250 கிலோ மாம்பழங்கள் மற்றும் இதர பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பேராவூரணி சாலையில் ஒதுக்குப்புறத்தில் கொட்டி அழிக்கப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்ட கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் ரசாயனம் கலந்த பழங்களை விற்றால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    பீகார் மாநிலம் ககாரியா நகரில் மாம்பழம் பறித்துக்கொண்டிருந்த சிறுவன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    பாட்னா:

    பீகார் மாநிலம் ககாரியா நகரில் அமைந்துள்ள மாந்தோப்பில் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் தோப்பின் உரிமையாளருக்கு தெரியாமல் மாம்பழம் பறித்துக் கொண்டிருந்துள்ளான். அப்போது, மர்மநபர் ஒருவர் அவனை துப்பாக்கியால் சுட்டதில் தலையில் குண்டு பட்டு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

    தகவல் அறிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    மாம்பழம் பறித்த சிறுவன் துப்பாக்கியால் தலையில் சுட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தை சாப்பிடுவதால் ஏற்படும் பாதிப்புகள் என்னவென்று பார்க்கலாம்.
    ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, மாம்பழம், மாதுளை, கொய்யா, சீத்தா... என நமக்காகக் கொட்டிக்கிடக்கின்றன விதவிதமான பழங்கள். ரசாயன முறையில் பழங்களை பழுக்கவைப்பது இப்போது அதிகரித்திருக்கிறது.

    கால்சியம் கார்பைடு, பாஸ்பரஸ், எத்திலீன் போன்ற ரசாயனங்கள் மூலமாகப் பழங்கள் செயற்கையாகப் பழுக்கவைக்கப்படுகின்றன. இப்படிப் பழுக்க வைப்பதால் அதன் இயல்பு பாதிக்கப்படுகிறது. மாம்பழம் சாப்பிடுவதே அதிலுள்ள மினரல்ஸ், மல்டி வைட்டமின்களுக்காகத்தான். ஆனால், செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்டவற்றில் இவை எதுவும் இருக்காது.

    செயற்கையாகப் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்களில் அதன் இனிப்புத்தன்மை அதிகரித்துவிடும். அதைச் சாப்பிட்டால் அடிக்கடி வயிற்றுப்போக்கு, வயிறு மந்தம், சருமப் பிரச்னைகள், அல்சர் போன்ற பாதிப்புகள் உண்டாகும். கால்சியம் கார்பைட் கலந்த உணவுகளைத் தொடர்ந்து சாப்பிட்டால் புற்றுநோய் (Carcinogenic) உண்டாவதற்கான வாய்ப்புண்டு. எனவே, வாங்கும்போது கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.



    "கால்சியம் கார்பைடால் வயிறு தொடர்பான பிரச்சனைகள், கண் எரிச்சல், சரும அலர்ஜி, வாந்தி போன்றவை உண்டாகலாம். சில நேரங்களில் சுவாசம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. இதில், ஆர்சனிக் இருந்தால் புற்றுநோய் உண்டாகவும் வாய்ப்பிருக்கிறது. மாம்பழம் சாப்பிட்டதால் வயிற்றுப்போக்கு கோடைக்காலங்களில் பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும்.

    அதற்குக் காரணம் இதுபோன்று ரசாயனங்கள்தான். இதனால் உடலில் நீர்வறட்சி ஏற்பட்டு, உடல் வலுவிழக்க வாய்ப்பிருக்கிறது. அதனால் கவனமாக இருக்கவேண்டியது அவசியம்.
    ×