என் மலர்tooltip icon

    சேலம்

    • காலை மணிகண்டன், மனைவி மற்றும் 3 குழந்தை களுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து சேலம் வந்தார்.
    • கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த செண்பக வள்ளி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    சேலம்:

    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏரியூரை சேர்ந்தவர் மணி கண்டன் (30). இவரது மனைவி செண்பகவள்ளி (27).

    இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருச்சியில் தள்ளு வண்டியில் சிப்ஸ் வியாபாரம் செய்து வருகின்றனர். இன்று காலை மணிகண்டன், மனைவி மற்றும் 3 குழந்தை களுடன் மோட்டார் சைக்கிளில் திருச்சியில் இருந்து சேலம் வந்தார். பின்னர் அவர்கள் இன்று காலை கொண்டலாம்பட்டி பட்டர்பிளை மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர்.

    உடல் நசுங்கி பலி

    அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த அரசு பஸ் கொண்டலாம்பட்டி ரவுண்டானாவில் பயணிகளை இறக்கி விட்டு சேலம் புதிய பஸ் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது கண் இமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிள் பின்னால் அமர்ந்திருந்த செண்பக வள்ளி தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார். அப்போது பஸ்சின் சக்கரம் அவர்மீது ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே செண்பகவள்ளி உடல் நசுங்கி பலியானார். இந்த விபத்து குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் கண் எதிரே மனைவி விபத்தில் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பத்தியது.

    • தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டால் இந்தியாவிலேயே சேலம் நீதிமன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது.
    • ஜூனியர் வழக்கறிஞர்கள் சீனியர் வழக்கறிஞர்களிடம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும்.

    சேலம்:

    சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் புதிதாக ரூ.59 கோடி மதிப்பீட்டில் 16 நீதிமன்ற கட்டிடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது.

    விழாவில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதி சுமதி வரவேற்று பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இளந்திரையன், செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

    இதில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் விஜயகுமார் கங்கா புர்வாலா பங்கேற்று புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசியதாவது:-

    உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சேலம் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு புதிதாக கட்டப்பட உள்ள 16 நீதிமன்ற கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

    தற்போது கட்டப்படும் கட்டிடங்கள் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டால் இந்தியாவிலேயே சேலம் நீதிமன்றம் முன்னோடியாக திகழ வாய்ப்புகள் உள்ளது. நீதிமன்றங்கள் முன்பு எல்லாம் காகிதத்தால் எழுதுகின்ற தீர்ப்பாக வந்து கொண்டிருந்தது. ஆனால் அனைத்து நீதிமன்றங்களிலும் தற்போது காகிதம் இல்லாமல் செயல்படும் நிலைமை வந்துள்ளது. எனவே அதிக தொழில்நுட்பத்துடன் கூடிய கட்டிடங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

    ஜூனியர் வழக்கறிஞர்கள் சீனியர் வழக்கறிஞர்களிடம் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டும். கடினமாக உழைத்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். எப்பொழுதும் வேலை என்று இருக்காமல் குடும்பத்துடனும் அதிக நேரம் செலவிட வேண்டும். அப்போது மகிழ்ச்சி ஏற்பட்டு வேலை செய்யும் போது எந்தவித தடங்கலும் இல்லாமல் சிறப்பாக பணிகள் செய்திட முடியும்.

    இவர் அவர் பேசினார் .

    இதில் டி.ஐ.ஜி ராஜேஸ்வரி, மாவட்ட கலெக்டர் கார்மேகம், போலீஸ் கமிஷ்னர் விஜயகுமாரி, போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், சேலம் மாவட்ட வக்கீல் சங்க தலைவர் முத்துசாமி, செயலாளர் முத்தமிழ் செல்வன், தமிழ்நாடு, பாண்டிச்சேரி வக்கீல்கள் கூட்டமைப்பு சங்க உறுப்பினர் அய்யப்ப மணி மற்றும் வக்கீல்கள் செல்வ கீதம், எஸ்.ஆர் அண்ணாமலை, பழனி குமார், மதன் மோகன் உள்பட பலர் பங்கேற்றனர்.

    சேலம் நீதிமன்ற நீதிபதி கிறிஸ்டல்பவிதா நன்றி கூறினார்.

    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று‌ சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.
    • முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் மற்றும் பெண்கள் பயன்பெறும் வகையில் முதற்கட்டமாக இன்று சேலம் சோனா கல்லூரி வளாகத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

    முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு,மருத்துவம், கட்டுமானம் உட்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலி பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்தனர்.

    இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.

    அவர்களில் சிலருக்கு சில நிறுவனத்தினர் நேர்முக தேர்வை உடனடியாக நடத்தினர்.

    இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியும் உள்ளவர்கள் பங்கேற்றனர்

    மேலும் அடுத்த கட்டமாக 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை எடப்பாடி மற்றும் ஆத்தூர் ஆகிய இடங்களில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன.

    இன்றைய முகாமில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் கார்மேகம் கலந்து கொண்டு வேலைவாய்ப்புக்கான ஆணைகளை வழங்கினார்.

    • சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர்.
    • தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது‌.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 11 லட்சத்திற்கும் அதிகமான ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். இதில் தகுதி உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக தமிழக அரசு சார்பில் வழங்கப்பட உள்ளது.

    டோக்கன் விநியோகம்

    இதற்காக கடந்த 20-ந் தேதியிலிருந்து விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.

    இதில் 4 லட்சத்து 74 ஆயிரத்து 696 கார்டுகளுக்கு டோக்கன், விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது. தொடர்ந்து இத்திட்டத்திற் கான முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் கடந்த 24-ந் தேதி தொடங்கியது.

    4 லட்சம் விண்ணப்பங்கள்

    இதையடுத்து பூர்த்தி செய் யப்பட்ட விண்ணப்பங்கள் அலுவலர்களுக்கு வழங்கப் பட்ட மொபைலில் உள்ள

    செயலியில் பதிவேற்றப்பட் டது. அதன்படி முதல் கட்ட விண்ணப்ப பதிவு முகாமின் கடைசி நாளான நேற்று மாலை வரை சேலம் மாவட்டத்தில் 4 லட்சத்து 2 ஆயிரத்து 657 பேரிடமிருந்து பூர்த்தி செய்யப்பட்ட விண் ணப்பங்கள் பெறப்பட்டு பதியப்பட்டுள்ளன.

    2-ம் கட்ட பதிவு

    2-ம் கட்ட விண்ணப்

    பதிவிற்காக ஏற்கனவே விண்ணப்பம் மற்றும்

    டோக்கன்கள் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நிலையில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு பதிவு செய்யும் முகாம் இன்று காலை தொடங்கியது. 800-க்கும் மேற்பட்ட முகாம்களில் இந்த விண்ணப்ப பதிவு முகாம் நடைபெற்று வருகிறது.

    ஆர்வத்துடன்

    நீண்ட வரிசையில் பெண்கள் ஆர்வத்துடன் காத்து நின்று விண்ணப்பங்களை பதிவு செய்து வருகிறார்கள். இந்த விண்ணப்ப பதிவு முகாம் வருகிற 16-ந் தேதி வரை நடைபெறுகிறது. அதற்குள் 4 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்ய வாய்ப்புள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது.
    • கட்டுப்பாடு இழந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி, அரசு பஸ் மீது மோதியது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் வாழப்பாடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு நேற்றிரவு அரசு பஸ் ஒன்று சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்தபஸ் அயோத்தியாப்பட்டிணம் அடுத்த ராமலிங்கபுரம் அருகே சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, அப்போது கட்டுப்பாடு இழந்த சிமெண்ட் கலவை எந்திர லாரி, அரசு பஸ் மீது மோதியது. இந்த விபத்தில் நிலை தடுமாறிய அரசு பஸ் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில், பஸ்சில் பயணித்த செல்லியம்பாளையம் கலா, டி.பெருமாபாளையம் அர்ஜுனன் இவரது மனைவி வெண்ணிலா, சின்ன கவுண்டாபுரம் போதாம்பு, சேசன்சாவடி நடராஜன், வேப்பிலைப்பட்டி ஆனந்தகுமார், அதிகாரிப்பட்டி சிவக்குமார், நீர்முள்ளிக்குட்டை சுப்பிரமணி, பெத்தநாயக்கன்பாளையம் பழனிவேல், வாழப்பாடி கமலா உள்ளிட்ட 20 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனை மற்றும் மின்னாம்பள்ளி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.
    • இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

    சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் சம்பா பருவத்தில் ஏறக்குறைய 2200 ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு சம்பா நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு , அரசு மானிய விலையில் விதை நெல் வழங்க, புத்திரகவுண்டன்பாளையம் வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் வேல்முருகன் கூறியதாவது:- சம்பா பருவத்தில் நெல் நடவு செய்ய ஆடி 18-க்கு பின், நாற்று விடும் பணியை விவசாயிகள் தொடங்குவது வழக்கம். சம்பா பருவத்திற்கு ஏற்ற மேம்படுத்தப்பட்ட வெள்ளை பொன்னி, கோ -51, ஏ.டி.ட்டி-45, ஏ.டி.ட்டி-53, டி.கே.எம் -13 மற்றும் பாரம்பரிய நெல் ரகங்களான தூய மல்லி, சீரக சம்பா , தங்க சம்பா ஆகிய ரகங்கள் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண் விரிவாக்க மையத்தில் தயாராக இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் துவரை, உளுந்து நிலக்கடலை விதைகளும் விவசாயிகளுக்கு வழங்க தயார் நிலையில் உள்ளன. விதை நேர்த்தி செய்வதற்கு தேவையான உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா, ரைசோபியம் , பொட்டாஸ், ஜிங் பாக்டீரியா மற்றும் அனைத்து பயிர்களுக்கும் தேவையான நுண்ணூட்ட சத்துக்களும், உயிரியல் கட்டுப்பாட்டு காரணிகளான சூடோமோனாஸ், ட்ரைகோடெர்மா ஆகியவைகளும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. தேவைப்படும் விவசாயிகள், ஆதார் மற்றும் சிட்டா நகலுடன் ஏத்தாப்பூரிலுள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தையும், கருமந்துறை துணை வேளாண்மை விரிவாக்க மைய அலுவலர்களையும் அணுகலாம் என்றார்.

    • தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது.
    • இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    சேலம்:

    தமிழகம் முழுவதும் பயன்படுத்த 1000 புதிய பஸ்களை வாங்கவும், 500 பழைய பஸ்களை புதுப்பிக்க வும் ரூ.500 கோடியை தமிழக அரசு ஒதுக்கியது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் 8 கோட்டங்க ளிலும் சேதம் அடைந்த பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    வெளிர் மஞ்சள் நிறம்

    அதன் ஒரு பகுதியாக பழைய வண்ணம் மாற்றப்பட்டு தற்போது புதிதாக வர உள்ள இந்த பஸ்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாற்றப்பட உள்ளன. விரைவில் இயக்கத்திற்கு வர உள்ள இந்த பஸ்களுக்கு மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப் பட்டு வருகிறது.

    இந்த பஸ்கள் சென்ைன, பெங்களூர், கரூரில் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி எட்டு கோட்டங்க ளிலும் 500 பஸ்கள் சீரமைக்கப்பட்டு வருகிறது. அதில் சேலம் சரகத்தில் மட்டும் 100 பழைய டவுன் பஸ்கள் புனரமைக்கப்படு கிறது.

    நவீன முறையில் வடிவமைப்பு

    இது குறித்து அரசு போக்குவரத்து கழக அதி காரிகள் கூறுகையில், சேலம் கோட்டத்தில் 1047 பஸ்களும், தருமபுரி கோட்டத்தில் 853 பஸ்கள் என மொத்தம் 1900 பஸ்கள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இதில் 14 லட்சம் பயணிகள் பயணம் செய்கிறார்கள். தினசரி சாதாரண கட்டண டவுன் பஸ்களில் 6 லட்சம் மகளிர் பயணம் செய்கிறார்கள்.

    பழைய பஸ்கள் தற்போ துள்ள பயணிகள் ரச ணைக்கு ஏற்ப நவீன முறை யில் வடிவமைக்கப்பட்டு வருகிறது. புனரமைக்கப் பட்ட பஸ்களுக்கு கீழ் பகுதியில் வெளிர் கிரே கலரிலும், மேல் பகுதியில் நீல நிறத்திலும் பெயிண்ட் அடிக்கப்பட்டுள்ளது.

    பைபர் சீட்

    தற்போது பயன்பாட்டில் உள்ள பஸ்களில் இருக்கை கள் இரும்பு ரெக்சினால் உள்ளது . புனரமைக்கப்பட்ட டவுன் பஸ்களில் பைபர் சீட் அைமக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, கும்பகோ ணம் , திருநெல்வேலி கோட்ட டவுன் பஸ்களில் பைபர் இருக்கைகள் உள்ளன.

    சேலத்தில் பைபர் சீட் அமைப்பது இதுவே முதல் முறை. இந்த பஸ்கள் விரை வில் மக்கள் பயன்பட்டுக்கு வரும் வகையில் அதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர்.
    • வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் 4 ரோடு அருகே தாய்கோ வங்கி உள்ளது. இங்கு 2010-ம் ஆண்டு தொடங்கி 2020 வரை போலி நககைளை அடகு வைத்து ரூ. 94 லட்சம் மோசடி நடந்தது தெரிய வந்தது. இது குறித்து அப்போதைய வங்கி மேலாளர் தெய்வசிகாமணி என்பவர் சேலம் மாநகர குற்றப்பிரி்வு போலீசில் புகார் அளித்தார்.

    வங்கி நகை மதிப்பீட்டாளரான கருப்பூர் தண்ணீர் தொட்டியை சேர்ந்த சக்திவேல் 60 உள்பட 25 பேர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. போலீசாருக்கு பயந்த சக்திவேல் சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

    அதன் பிறகு இந்த வழக்கு வணிக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. தொடர்ந்து மோசடியில் ஈடுபட்ட 16 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். மோசடியில் ஈடுபட்ட ஒருவர் அதற்கான தொகையை செலுத்திவிட்டார். 4 பேர் முன் ஜாமீன் பெற்றுவிட்டனர். மேலும் 3 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்த 3 பேரை போலீசார் தேடி வந்தனர்.

    இந்நிலையில் 6 லட்சம் ரூபாய் மோசடி செய்த சின்ன திருப்பதி சரவணன் (53), ரூ.82 ஆயிரம் மோசடி செய்த அரிசிபாளையம் கிேஷார்குமார் (42), 1 லட்சத்து 61 ஆயிரம் மோசடி செய்த புது கல்லாங்குத்து புதூரை சேர்ந்த சுகவேனேஸ்வரன் (42) ஆகிய 3 பேரும் நேற்று கைது செய்ப்பயட்டனர்.

    இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது.
    • பருவமழை கைகொடுத்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    மேட்டூர்:

    கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீர், சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது.

    மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களில் சுமார் 17.37 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி கடந்த ஜூன் 12-ந் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

    120 அடி உயரம் கொண்ட மேட்டூர் அணையில் அப்போது 103 அடிக்கு மேல் தண்ணீர் இருப்பு இருந்தது. அணைக்கு விநாடிக்கு ஆயிரத்து 850 கனஅடி நீர் வந்துகொண்டிருந்தது.

    முதற்கட்டமாக 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பட்ட நிலையில் தொடர்ந்து 10 ஆயிரம், 15 ஆயிரம், 13 ஆயிரம் என தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

    இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. இதனால் தற்போது இருக்கும் நீர் இருப்பை கொண்டு குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை உள்ளது.

    இந்த நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1 முதல் டிசம்பர் 15 வரை 137 நாட்களுக்கு 9.60 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

    இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கர், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கர் என மொத்தம் 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேட்டூர் அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும்போது கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. இதனால் முன்கூட்டியே மே 24-ல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    ஆனால் தற்போது பருவமழையும் சரிவர பெய்யவில்லை. கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு ஜூன், ஜூலை மாதத்திற்கு திறக்கப்பட வேண்டிய தண்ணீரையும் முழுமையாக வழங்கவில்லை. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வெகுவாக குறைந்துள்ளது.

    இன்று காலை நிலவரப்படி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 299 அடியாக மட்டுமே உள்ளது.

    இதனால் அணையின் நீர்மட்டம் 58.99 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 23.93 டி.எம்.சி.யாக உள்ளது. மேலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்காக வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    போதிய நீர் இருப்பு இல்லாததால் குறித்த நாளான ஆகஸ்ட் 1-ந் தேதி கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்படவில்லை. இதனால் கால்வாய் பாசன விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.

    மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கே முழுமையாக தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை இருக்கும்போது கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பது என்பது கேள்விக்குறியாகி உள்ளதால் சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். பருவமழை கைகொடுத்தால் மட்டுமே தண்ணீர் திறக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    • வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும்.
    • உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுக்கு தனி மவுசு உண்டு. இதனால் இங்கு உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கொலுசுகள், அரைஞான் கொடி உள்பட வெள்ளி பொருட்கள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    சேலம் செவ்வாய்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, நங்கவள்ளி, ஜலகண்டாபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளி பட்டறைகள் உள்ளன. இதனை நம்பி ஒரு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் உள்ளனர்.

    வெள்ளி விலை ஏற்ற, இறக்கத்திற்கு ஏற்ப தொழில் இருக்கும். தற்போது போதிய ஆர்டர் கிடைக்காமல் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் வெள்ளி விலை ஒரே நாளில் 1800 ரூபாய் சரிந்துள்ளது. இதனால் வெள்ளி ஆபரணம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சேலத்தில் நேற்று முன்தினம் வெள்ளி கிராம் 79.30 ரூபாய், பார் வெள்ளி கிலோ 79 ஆயிரத்து 300-க்கு விற்பனையானது. நேற்று வெள்ளி கிராமுக்கு 1.80 குறைந்து 77.50 ரூபாய், பார் வெள்ளி ஒரே நாளில் கிலோவுக்கு 1800 ரூபாய் குறைந்து 77 ஆயிரத்து 500 ரூபாய்க்கு விற்பனையானது.

    சர்வதேச அளவில் பங்கு சந்தையில் ஏற்பட்ட இறக்கம் மற்றும் டாலர் மதிப்பு குறைவு உள்பட காரணங்களால் வெள்ளி விலை குறைந்துள்ளது. விலை குறையும்போது இன்னும் விலை குறையும் என கருதி மக்கள் வெள்ளி வாங்குவதை தவிர்த்து விடுகிறார்கள். இதனால் தொழில் மேலும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர் கைவினை சங்க தலைவர் ஆனந்த ராஜன் கூறியதாவது,

    ரஷியா, இங்கிலாந்து ஆஸ்திரேலியா உள்பட பல நாடுகளில் இருந்து அதிக அளவில் வெள்ளி கிடைக்கப்பெற்று சர்வதேச மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. ரஷியாவில் இருந்து மட்டும் வெள்ளி வரத்து 40 சதவீதம் இருக்கும். உக்ரைன் போரால் ரஷியாவில் இருந்து வெள்ளி விற்பனைக்கு கொண்டு வருவது குறைந்துள்ளது. இது மட்டுமின்றி சர்வதேச நிலவரங்கள் அடிப்படையில் வெள்ளி விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

    ஏற்கனவே வெள்ளி பொருட்கள் ஆர்டர் கிடைக்கவில்லை. கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து கிடைத்த 25 சதவீத ஆர்டர்களுக்கு மட்டும் பட்டறைகள் இயங்குகின்றன. 75 சதவீதம் வரை ஆர்டர்கள் குறைவால் பட்டறைகள் பாதி நாட்கள் மூடப்படுகின்றன.

    இந்த நிலையில் திடீரென பார் வெள்ளி விலை சரிந்துள்ளதால் மேலும் தொழில் வீழ்ச்சி அடையும் நிலை உள்ளதால் வெள்ளி பொருட்கள் விற்பனையாளர்கள், வெள்ளி நகை தயாரிப்பாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார்.
    • வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.

    சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள ஆண்டிப்பட்டி பனங்காட்டை சேர்ந்தவர் ஸ்ரீ ஆனந்தராஜன் (47). இவர் சேலம் வெள்ளி கொலுசு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் ஆனந்தராஜனிடம் இருந்து வெள்ளி பொருட்கள் செய்து தருவதாக கூறி சிவதாபுரம் அம்மன் கோவில் மொரம்புகாட்டைச் சேர்ந்த ஒருவர் 6 கிலோ எடையுள்ள ரூ.4.5 லட்சம் மதிப்பிலான வெள்ளிக்கட்டிகளை வாங்கிச் சென்றதாக கூறப்படுகிறது.அதன்பிறகு நீண்ட நாட்கள் ஆகியும் வெள்ளிப் பொருட்களை தயார் செய்து ஆனந்தராஜிடம் கொடுக்காமல் ஏமாற்றி வந்தார். இது குறித்து ஆனந்த ராஜன் கொண்டலாம்பட்டி போலீஸ் புகார் கொடுத்தார்.அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார்.
    • அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.

    சேலம் அருகே லோகூர்- டேனீஸ்பேட்டை ரெயில் நிலையங்க ளுக்கிடையே உள்ள தண்டவாளத்தை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் சம்பவத்தன்று கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ரெயில்வே நிலைய அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் சேலம் ஜங்சன் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் நீல நிற டிசர்ட், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்தார். ஆனால் அவரது பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×