என் மலர்tooltip icon

    சேலம்

    • செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.
    • இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுகுந்தகுமார். இவரது மனைவி அமுதா வயது 41 இவரது செல்போனுக்கு வந்த டெலிகிராம் குறுந்தகவலில் ரூ.12 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் பரிசாக விழுந்துள்ளதாக வந்துள்ளது.இதை உண்மை என்று நம்பிய அமுதா அந்தக் குறுந்தகவலில் வந்த செல்போனிற்கு தொடர்பு கொண்ட போது அதில் பேசிய மர்ம நபர் ரூ.7,32,399 பணத்தை அவர் குறிப்பிட்ட வங்கி கணக்கில் செலுத்தினால் கார் உடனடியாக கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய அமுதா பணத்தை வங்கி கணக்கில் செலுத்தினார்.அதன் பின்னர் அந்த நபரை செல்போனில் தொடர்பு கொண்டபோது அந்த எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அமுதா இதுகுறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இதேபோல் சேலம் அஸ்தம்பட்டி ராஜமாணிக்கம் தெருவை சேர்ந்தவர் அசோக்குமார் இவரது மகன் பிரசாத் வயது 24 இவரது செல்போனில் வந்த குறுந்தகவலில் அதிக சம்பளத்தில் பகுதி நேர வேலை இருப்பதாக விளம்பரம் வந்துள்ளது. அதைக் கண்ட பிரசாத் அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது அவர்கள் பணம் கட்டி சில நிபந்தனைகளை செய்யச் சொல்லி உள்ளனர். இதை உண்மை என்று நம்பிய பிரசாத் அவர்கள் கூறியபடி ரூ.50000 பணத்தைக் கட்டி அவர்கள் கூறிய நிபந்தனைகளை செய்து முடித்து உள்ளார்.அதன் பின்னர் பணம் தனது வங்கிக் கணக்கு திரும்ப வந்துவிடும் என்று அவர்கள் கூறியதை நம்பி காத்திருந்தார். ஆனால் அந்த மர்ம நபர்கள் கூறியபடி பணமும் வரவில்லை வேலையும் வரவில்லை இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பிரசாத் இது குறித்து சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தங்கராஜ் (42) இவர் கொண்டலாம்பட்டியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார்.
    • சம்பவத்தன்று தங்கராஜன் கவனத்தை திசை திருப்பி விட்டு கடையில் இருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 16 பட்டுப் புடவைகளை திருடிக் சென்றனர்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள சங்ககிரி அடுத்த பூவனூர் கன்னாங்கேரி பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ் (42) இவர் கொண்டலாம்பட்டியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடைக்கு வந்த 3பெண்கள் மற்றும் ஒரு ஆண் ஆகியோர் தங்கராஜன் கவனத்தை திசை திருப்பி விட்டு கடையில் இருந்த ரூ.32 ஆயிரம் மதிப்புள்ள 16 பட்டுப் புடவைகளை திருடிக் சென்றனர். அவர்கள் சென்ற பிறகு புடவைகளை சரி பார்த்தபோது மேற்கண்ட புடவைகள் காணாமல் போனது தங்கராஜிற்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தங்கராஜ் இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.
    • தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    சேலம்:

    தமிழகத்தில் கடந்த 50 நாட்களுக்கு மேல் தக்காளி விலை அதிகரித்து வந்தது. அதிகபட்சமாக ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது. இதனால் பொதுமக்கள் வசதிக்காக தமிழக அரசு சார்பில் ரேசன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.

    கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தக்காளி விலை 100 ரூபாய்க்கு கீழ் குறையாமல் இருந்து வந்தது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் தக்காளி வாங்குவதை தவிர்த்து விட்டனர்.

    அதேபோல் காய்கறிகள் விலை உயர்வாலும் பொது மக்கள் காய்கள் வாங்குவதை குறைத்து கொண்டனர். கிலோ கணக்கில் தக்கா ளியை வாங்கிச் சென்ற பொதுமக்கள் விலை உயர்வு காரணமாக கிராம் கணக்கில் தக்காளியை வாங்க ஆரம்பித்தனர்.

    உழவர் சந்தை

    சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் வெளி இடங்களை விட குறைவான விலைக்கு விற்கப்பட்டதால் பொது மக்கள் உழவர் சந்தைகளில் தக்காளி வாங்கிச் சென்ற னர். இதனால் குறைந்த நேரத்திலேயே தக்காளி விற்பனை முடிவடைந்தது.

    சேலத்தில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் சேலம் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருந்து தக்காளிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படும். ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இந்த பகுதிகளில் இருந்து தக்காளி வரத்து குறைந்தது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து தக்காளிகள் கொண்டுவரப்பட்டு அதிக விலைக்கு விற்கப்பட்டு வந்தது.

    தங்கத்தை போல் தக்காளி விலையும் உயர்ந்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் சேலத்தில் இன்று தக்காளி விலை திடீரென குறைந்தது. கிலோ ரூ.60 முதல் அதிகபட்சமாக ரூ.70 வரை தக்காளி விற்கப்பட்டது. இந்த விலை குறைவுக்கான காரணம் குறித்து வியாபாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

    கடந்த சில நாட்களாக உள்ளூர் தக்காளி வரத்து குறைந்து காணப்பட்டது. இதனால் ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவிலேயே தக்காளி விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதனால் விலை உயர்ந்து காணப்பட்டது. தற்போது வழக்கம்போல் உள்ளூர் தக்காளிகள் வரத் தொடங்கிவிட்டது.

    கடந்த சில நாட்களைவிட இன்று மார்க்கெட்டுக்கு தக்காளி வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதன் காரணமாக விலையும் குறைந்தது. அதிகபட்சமாக சில்லறை விலையில் முதல் ரக தக்காளி கிலோ ரூ.70-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இனிவரும் காலங்களில் படிப்படியாக தக்காளி விலை குறைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.
    • காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் எழுந்த ருளியுள்ள மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

    காலை 7 மணிக்கு மேல் ருத்ர பாராயணம், ருத்ர அபிஷேகம், ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு மேல் மகா மாரி யம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பின்னர் சிறப்பு அலங்கா

    ரத்தில் மகா மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    விழாவிற்கான ஏற்பாடு களை வேலூர் மகா மாரியம்மன் கோவில் அறங்கா வலர் குழுவினர், கால சந்தி கட்டளைதாரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 16 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி ேற்று அம்மனுக்கு மகா அபிஷேகம் மற்றும் குபேர மகாலட்சுமி யாக பெருவிழா நடைபெற்றது.

    • தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    காடையாம்பட்டி:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து சரக்கு வாகனத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா கடத்தி வருவதாக தீவட்டிப்பட்டி போலீ சாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    மினி டெம்போவில் ரகசிய அறை

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஞானசேகர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் ஓமலூர் அருகே உள்ள குதிரைகுத்தி பள்ளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மினிடெம்போவை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் இருந்த தக்காளி காலிப்பெட்டிகளை அகற்றிவிட்டு பார்த்தபோது அந்த வண்டியில் ரகசிய அறை ஒன்று அமைத்து இருந்ததை கண்டுபிடித்தனர்.

    தொடர்ந்து மேலே இருந்த மரப்பலகையை எடுத்து விட்டு பார்த்தபோது அந்த அறைக்குள் மூட்டை, மூட்டையாக 180 கிலோ குட்கா அடுக்கி வைத்தி ருப்பது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 90 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.

    டிரைவர் கைது

    இது குறித்து டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் மேச்சேரி வெள்ளார் வெள்ளம்பட்டி பகுதியை சேர்ந்த இளையபாரதி (வயது 27) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் இளையபாரதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மினி ெடம்போ மற்றும் குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம்

    இதேபோல் செவ்வாய் பேட்டை போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

    அப் போது செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் மகாராஷ்டிரா பதிவு எண் கொண்ட ஒரு கார் கேட்பா ரற்று நின்றது. அந்த காரை சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை கண்டுபிடிக்கப் பட்டது. இதன் மதிப்பு ஒரு லட்சம் ஆகும்.

    இந்த குட்கா புகை யிலையை போலீசார் பறிமுதல் போலீஸ் நிலை யம் கொண்டு சென்றனர். அந்த கார் பதிவு எண்ணை வைத்து அந்த கார் யாருடையது கடத்தி வந்தது யார் என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
    • அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது.

    சேலம்:

    சேலம் மத்திய சிறையில் சிறைவாசிகள் மனம் திருந்தி மறுவாழ்வு பெறும் நோக்கில் சிறையில் நல்வாழ்வு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக சிறைவாசி களுக்கு இசை பயிற்சியும் வழங்கப்படுகிறது. சேலம் மத்திய சிறையில் சிறை வாசிகளுக்கு அங்கீக ரிக்கப்பட்ட அறக்கட்டளை பயிற்சியாளர்களை கொண்டு இசைப் பயிற்சி வாத்தியங்கள் வாசிப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் முறையாக கற்றுத் தேர்ந்தவர்களைக் கொண்டு சிறைச்சாரல் இசைக் குழு என்ற குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் காந்தி ஜெயந்தி உள்ளிட்ட விசேஷ தினங்களில் சிறைச்சா லைக்குள் தங்களது நிகழ்ச்சிகளை நடத்துவர்கள். இதனிடையே சிறையில் ஒத்திகையில் ஈடுபட்ட சிறைச்சாரல் குழுவினர், உன் மதமா என் மதமா என்ற தத்துவ பாடலை பாடி அசத்தியுள்ளனர். சிறைவாசிகளின் மறு வாழ்வுக்காக தமிழ்நாடு டி.ஜி.பி சங்கர் ஜிவால் உத்தரவின் பேரில் இந்த குழுவினர் புதிய உத்வே கத்துடன் செயல்படுவதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கவியரசி திடீரென வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது.
    • சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேட்டூர்:

    மேட்டூர் அடுத்த நங்கவள்ளி பாசக் குட்டையை சேர்ந்தவர் சக்திவேல், கூலித் தொழிலாளி. இவருக்கு ரூபிணி என்ற மனைவியும், கவியரசி (13), பிரபா (9) என்ற 2 குழந்தைகளும் உள்ளனர்.

    நங்கவள்ளி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கவியரசி 7-ம் வகுப்பும், பிரபா 5-ம் வகுப்பு படித்து வந்தனர். கணவன், மனைவி இருவரும் வேலைக்கு சென்ற நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் குழந்தைகள் இருவரும் வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தனர்.

    அப்போது கவியரசி திடீரென வீட்டின் தனி அறையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அப்பகுதியினர் நங்கவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கவியரசியின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சகோதரிகள் இருவருக்கும் இடையே டி.வி. பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில கவியரசி டி.வி. ரிமோட்டை உடைத்து விட்டதால் பெற்றோருக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிறுமி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெயசங்கர் தனது மனைவி மோகனாவுடன் தகராறில் ஈடுபட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கெங்கவல்லி:

    சேலம் மாவட்டம் வீரகனூர் அருகே உள்ள கவர்ப்பனை பகுதியை சேர்ந்தவர் ஜெயசங்கர். லாரி டிரைவர். இவரது மனைவி மோகனா. இவர்களது மகள் இலக்கியா (18).

    இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. வேளாண்மை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயசங்கர் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டுக்கு வரும்போது மது குடித்து விட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மீண்டும் மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்த ஜெயசங்கர் தனது மனைவி மோகனாவுடன் தகராறில் ஈடுபட்டார். இதனால் மனமுடைந்த மாணவி இலக்கியா வீட்டிலிருந்த மண்எண்ணையை குடித்து மயங்கி கிடந்தார்.

    இதைப்பார்த்த அவரது தாய் மோகனா அவரை மீட்டு பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு சிகிச்சை பலனின்றி இலக்கியா பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து வீரகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது.
    • சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் சென்று நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ ஆலய கோபுரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர்.

    மேட்டூர்:

    காவிரி ஆற்றின் குறுக்கே மேட்டூர் அணை கட்டப்பட்டுள்ளது. 124 அடி உயரம் உள்ள மேட்டூர் அணையில் அதிகபட்சமாக 120 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கப்படும். பின்னர் அணைக்கு வரும் தண்ணீர் உபரிநீராக வெளியேற்றப்படும்.

    மேட்டூர் அணை கட்டப்பட்டபோது அங்கு வசித்த பொதுமக்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர். இதையடுத்து அவர்கள் வழிபட்டு வந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ கோபுரங்களை அப்படியே விட்டு சென்றனர். அந்த சிலை மற்றும் கோபுரம் மேட்டூர் அணையில் மூழ்கி காணப்படுகிறது. அணையில் தண்ணீர் குறைந்தால் மட்டுமே அவை வெளியே தெரியும்.

    இந்நிலையில் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி முதல் தொடர்ந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. அணையில் இருந்து தண்ணீர் திறந்தபோது நீர்மட்டம் 103 அடியாக இருந்தது.

    தொடர்ந்து 3 மாதமாக அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதாலும், அணைக்கு நீர்வரத்து குறைந்ததாலும் நீர்மட்டம் மளமளவென குறைந்து வந்தது. இதன் காரணமாக அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்துவ கோபுரம் மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை ஆகியவை வெளியே தெரிய ஆரம்பித்தது.

    இந்நிலையில் அணைக்கு வரும் அளவை விட அதிகளவில் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருவதால் நீர்மட்டம் மேலும் சரிந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணை நீர்மட்டம் 58.19 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து 2ஆயிரத்து 406 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 9ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 23.35 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளது.

    தொடர்ந்து மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் அணையில் மூழ்கி இருந்த ஜலகண்டேஸ்வரர் கோவில் நந்தி சிலை முழுவதுமாக தெரிகிறது. இதேபோல் கிறிஸ்துவ கோபுரமும் முழு அளவில் தெரிய தொடங்கி உள்ளது. மேட்டூருக்கு வரும் சுற்றுலா பயணிகள் பரிசல் மூலம் சென்று நந்தி சிலை மற்றும் கிறிஸ்துவ ஆலய கோபுரத்தை கண்டு ரசித்து செல்கின்றனர். நீர்மட்டம் மேலும் குறைந்தால் நந்தி சிலையின் பீடம் முழுவதும் தெரியும் சூழல் உள்ளது. 

    • ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர்.
    • ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.

    ஒடிசா, ஆந்திரா ரெயிலில் தமிழ்நாட்டிற்கு அடிக்கடி கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை கண்காணிக்க ரெயில்வே போலீசார் தனிப்படை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் பாட்னாவில் இருந்து சேலம் வழியாக எர்ணாகுளம் செல்லும் ரெயிலில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை போலீசாரும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசாரும் அந்த ரெயிலில் சோதனை நடத்தினர். அப்போது பின்பக்கம் முன்பதிவில்லா பெட்டி உள்ள கழிப்பறையில் கேட்பாரற்று கிடந்த பையை சோதனை செய்தனர். அதில் 6 கிலோ கஞ்சா இருந்தது. அதை பறிமுதல் செய்து, அதைக் கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார்.
    • கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் மல்லியகரை அருகே உள்ள கும்பல்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (33). இவர் திருப்பூரில் கேபிள் லைன் பதிக்கும் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் ஆடி 18 கொண்டாடுவதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார். கனகராஜ் ஊருக்கு வந்ததில் இருந்து மது குடித்துவிட்டு போதையில் சுற்றியுள்ளார். இந்த நிலையில் திடீரென அவர் மாயமானார். இதையடுத்து அவரது மனைவி அபிராமி மற்றும் உறவினர்கள் கனகராஜை தேடினர். இதனிடையே கனகராஜின் வீட்டின் அருகில் கிணறு ஒன்று உள்ளது. இதில் 60 அடிக்கு தண்ணீர் உள்ளது. கனகராஜ் கிணற்றில் தவறி விழுந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் காமிராவை உள்ளே அனுப்பி பார்த்துள்ளனர். அப்போது கனகராஜ் கிணற்றில் பிணமாக கிடப்பது தெரிய வந்தது. இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கனகராஜ் உடலை மீட்டனர். இதுகுறித்து மல்லியகரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தினர். இதில் அவர் போதையில் தவறி விழுந்து இறந்துள்ளது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். 

    • நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
    • தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சேலம்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது.

    சத்துணவு திட்டத்திற்கு தவிர மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    கடந்த 1-ந் தேதி ஒரு முட்டையின் விலை ரூ.4.10 ஆக இருந்தது. 3-ந் தேதி 10 பைசா உயர்த்தப்பட்டு ரூ.4.20 ஆனது. நேற்று மாலை நடைபெற்ற என்.இ.சி.சி கூட்டத்தில் முட்டை விலை மீண்டும் 10 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலை இன்று காலை முதல் அமுலுக்கு வந்தது.

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.

    இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு ரூ.15 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.105 ஆக இருந்த கறிக்கோழி விலை ரூ.90 ஆக குறைந்தது. முட்டைக்கோழி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிலோ ரூ.78 ஆக நீடிக்கிறது.

    ×