search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் கூடுதலாக 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை
    X

    ஆடித்திருவிழாவையொட்டி சேலத்தில் கூடுதலாக 20 ஆயிரம் லிட்டர் பால் விற்பனை

    • சேலம் மாவட்டத்தில் 810 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது.
    • இதன் மூலம் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் 810 தொடக்க பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகிறது. இதன் மூலம் 49 ஆயிரம் உறுப்பினர்களிடம் இருந்து தினசரி 4 லட்சத்து 90 ஆயிரம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    ஆடி திருவிழா

    இதில் சேலம் மாவட்டத்தில் உள்ளூர் தேவையான 2 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் தவிர மீதி உள்ள பால் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதனிடையே ஆடித்திரு விழாவையொட்டி சேலம் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை கள் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் பால்குட ஊர்வலம், பாலாபி ஷேகம் பூைஜகள் உள்ளிட்ட வற்றிற்காக பாலை அதிக அளவில் வாங்கி வருகின்றனர்.

    20 ஆயிரம் லிட்டர் கூடுதல்

    ஆடித்திருவிழா காரண மாக நேற்று 2 லட்சத்து 34 ஆயிரம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது வழக்க மான விற்பனையை விட 20 ஆயிரம் லிட்டர் அதிகமாகும் என ஆவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×