என் மலர்
நீங்கள் தேடியது "காப்பர் பைப்"
- சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது.
- இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சேலம்:
சேலம் இரும்பாலையில் கொரோனா சிகிச்சை மையம் உள்ளது. இதில் ஜலகண்டாபுரத்தை சேர்ந்த சரவணன் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். அப்போது அங்கு இருந்த 6 கிலோ காப்பர் பைப்பை மர்ம நபர்கள் திருடி சென்றுவிட்டனர். இது குறித்து சரவணன் இரும்பாலை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். சேலம் சூரமங்கலத்தை சேர்ந்த முகமது அசின் ஷெரீப், விஸ்வநாதன் 2 பேரும் காப்பர் பைப் திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.






